கேள்வி : வக்பு வாரியக் கல்லூரி விவகாரத்தில் வாரியத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ததஜ போராட்டம் நடத்தியுள்ளதே…?
பதில் : அணுசக்தி ஒப்பந்தம், மின் வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற வற்றில் போராட்டங்களை நடத்தாதவர்கள், வக்பு வாரியத்தை மட்டும் குறிவைக்கிறார்கள் எனில், அவர்களது பொறாமை குணம்தான் இதற்கு காரணம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
இனி விளக்கத்திற்கு வருவோம். அதாவது வக்பு வாரியக் கல்லூரியை முன்னேற விடாமலும், கண்ணியக் குறை வான செயல்களை செய்துக் கொண்டும் ஒரு கூட்டம் தொடர்ந்து செய்து வந்த பித்தலாட்டத்திற்கு, எதிராக மதுரை மக்கள் வெகுநாட்களாக குமுறிக் கொண் டிருந்தார்கள். அதனடிப்படையில் அக்கல்லூரியை எல்லா வகையிலும் மேம்படுத்துவதற்காக வக்பு வாரியத் தலைவர் செ.ஹைதர் அலி எல்லா முயற்சிகளும் எடுத்து வருகிறார்.
இதற்கு சிலர் அழகிரி பெயரை சொல்லி இடையூறு செய்தனர். அங்கு புதிதாக போடப்படும் 9 பேராசிரியர் களையும் முஸ்லிம் அல்லாதவர் களையே போட வேண்டும் என அடம்பிடித்தனர். இதற்கு வக்பு வாரியத் தலைவர் அசைந்து கொடுக்கவில்லை. பிறகு முதல்வர் கலைஞரை சந்தித்து வாரியத் தலைவர் முறையிட்டார். அதன் பிறகுதான் ஒன்பது பேரில் குறைந்தது ஐந்து முஸ்லிம் பேராசிரியர்களையாவது நியமிக்க வேண்டும் என முடிவானது. ஹைதர் அலி இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் 9 பேராசிரியர்களும் முஸ்லிம் அல்லாத சமுதாயத்தை சேர்ந்தவர்களாகவே நியமிக்கப்பட்டிருப் பார்கள் என்பது மனசாட்சி உள்ளவர் களுக்கு தெரியும்.
முதல்வரின் மகன் பெயரை பயன் படுத்தி சிலர் துஷ்பிரயோகம் செய்ய வந்த போதும், அதை முதல்வரிடமே முறையிட்டு 9 பேரில் 5 பேரை முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்களாக நியமித் ததற்கு முறைப்படி பார்த்தால் பாராட்டு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் பொறாமை காரணமாக குறை சொல்கிறார்கள்.
இத்தனை வருடங்கள் மோசமான நிலையில் வக்ஃபு வாரியம் இருந்தபோது, அதற்கு எதிராக போராடாதவர்கள் இப் போது தமுமுகவின் பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி அவர்கள் வக்பு வாரியத்திற்கு தலைவராக பொறுப்பேற்ற பிறகு போராடுகிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்? யார் துண்டுதல் என்பதை மக்களின் முடிவுக்கு விட்டு விடுகிறோம்.