கடந்த 24.06.2008 அன்று அபுதாபியில் உள்ள கேரளா அசோசியேசன் அரங்கத்தில் நடைபெற்ற இந்திய தேசிய மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பலர் பங்கு கொண்டது ஞாபகம் இருக்கலாம். அந்ந நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பிரபல மார்க்க அறிஞர் மெளலவி அப்துல் ரவூப் பாக்கவி அவர்கள் மிகச் சிறப்பான் உரை ஒன்ற ஆற்றினார்கள். மெளலவி அப்துல் ரவூப் பாக்கவி, இந்திய தேசிய மக்கள் கட்சியின் திரு. குத்புதீன் ஐபக், திரு. வருசைக் கனி ஆகியோர் ஆற்றிய உரையின் வீடீயோ தொகுப்பு இங்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை காணவோ, டவுன்லோட் செய்யவோ கீழே உள்ள சுட்டியில் சொடுக்கவும்.
திரு. வருசைக் கனி, திரு. அப்துல் ரவூப் பாக்கவி, திரு. குத்புதீன்
ஏப்.18இல் அமீரக கா.ந.மன்ற பொதுக்குழு! செயற்குழுவில் அறிவிப்பு!!
ஐக்கிய அரபு அமீரகங்களில் செயல்பட்டுவரும் காயல் நல மன்றத்தின் மாதாந்திர செயற்குழுக் கூட்டம், இம்முறை அமீரகத் தலைநகர் அபுதாபியில், மன்றத்தின் உறுப்பினர் ஹாஜி மக்ப+ல் அஹ்மது பி.இ. இல்லத்தில், 04-04-08 வெள்ளிக்கிழமை மாலை 05:30 மணியளவில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு, மன்றத்தின் மூத்த உறுப்பினரும், துணைத் தலைவருமான ஹாஜி இம்தியாஸ் அஹ்மது தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் துவக்கமாக மவ்லவீ ஹாபிழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் கிராஅத் ஓதினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தீர்மானம் 1:
எதிர்வரும் 18-04-08 வெள்ளிக்கிழமை, மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தை அல்குசைஸ் தவார் பூங்காவில் நடத்துவது. இதற்கான செலவினங்களில் பெரும்பகுதியை செயற்குழு உறுப்பினர்களே மனமுவந்து ஏற்றுக் கொள்வது.
மேலும் விரிவான செய்திக்கு
http://www.kayalpatnam.com/shownews.asp?id=1699