நரபலி நரேந்திரமோடி ஆட்சியை அகற்று! தூக்கிலிடு!!
இதே அடிப்படையில்தான் 2002 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தலைவிரித்தாடிய குஜராத் இனப்படுகொலை.பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டது.கர்ப்பிணிகள், குழந்தைகள், ஊனமுற்றவர்கள் உட்பட எந்த ஒரு முஸ்லிமும் தப்பவில்லை. 2 மாதங்கள் சட்டம்ஒழுங்கு சீர்கெட்டு இந்திய இறையாண்மையே சீரழிக்கப்பட்டது. பார்ப்பனீய சமுதாயத்தின் கைகளில் மொத்தமாக
சிறைபட்டு கிடக்கும் எல்லா மீடியாக்களும் கோத்ரா ரயில் எரிப்பிற்கான எதிர்வினைதான் என்ற பொய்யையே பரப்பியது.
ஆனால் அப்போது முதலே கோத்ரா ரயில் எரிப்பிற்கும் முஸ்லிம்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. இந்த இனப்படுகொலை ஒரு திட்டமிட்ட சதியே என மனித நீதிப்பாசறை உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை இயக்கங்களும், ஆர்வலர்களும் சொல்லியவண்ணம் இருந்தனர்.
இதுதான் உண்மை என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது, இதை நடத்தியவர்களின் வாய் வாக்குமூலங்களின் வழியே! தெஹல்கா பத்திரிகை நடத்திய ரகசிய விசாரணையின் மூலம் இப்போது அம்பலத்திற்கு வந்திருக்கிறது. வீடியோ படங்களின் வழியே RSS, VHP, பஜ்ரங்தள் இந்துத்துவ பயங்கரவாதிகளின் கொடூர முகம் உலகமெங்கும் அகோரமாய் காட்சி அளிக்கிறது.
கூட்டம் கூட்டமாய் முஸ்லிம்களை கொலைசெய்ய உற்சாகமூட்டியதும், பொருளாதாரத்தை சூறையாட ஆலோசனை வழங்கியதும் நரேந்திரமோடியின் நேரடி உத்தரவுகளே! மேலும், முஸ்லிகளை கொலை செய்தவர்களையும், அவர்களை கற்பழித்தவர்களை பாராட்டி பாதுகாப்பும் அளித்ததும் இந்த நரேந்திர மோடியே தான்.
மட்டுமல்லாமல் மூன்று நாட்களுக்குள் எல்லாவற்றையும் முடித்துவிடுங்கள். அதற்கு பிறகு சட்டம் ஒழுங்கை நான் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும் என்று ஆலோசனையை வழங்கியது இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ஆனாலும் மூன்று நாட்களுக்குள் சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராமல் 2 மாதத்திற்கும் மேலாக இனப்படுகொலையை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
மனித குலமே வெட்கப்படும்படி இந்துத்துவ தீவிரவாதிகள் நரேந்திரமோடியின் உதவியுடன் தாங்கள் செய்த படுகொலைகளையும் கற்பழிப்புகளையும் பெருமையுடன் விவரிக்கும் காட்சிகளை காணும் யாருமே அதிர்ச்சியடையாமல் இருக்கமுடியாது.
தெஹல்கா ரகசியமாக படம் பிடித்த வீடியோ காட்சிகளில் ஒவ்வொருத்தரும் தாங்கள் செய்த செயல்களை விபரமாக எடுத்துச் சொல்லிடும்போது நடந்த அக்கிரமங்கள் அனைத்தும் நம் கண்முன்பாக வருகின்றன. இத்தகைய கொடூரங்கள் அனைத்தையும் அவர்கள் தங்களது வீர சாகசங்கள் போன்று விபரிப்பது அவர்கள் பயிற்றுவிக்கப்பட்ட சங்பரிவாரத்தின் கொலைமுகத்தை தெளிவாகவே காட்டுகிறது. ஆனால் இவை அனைத்தும் முதல்வர் நரேந்திர மோடியின் ஆமோதிப்பின் பேரில் நடந்ததுதான் அக்கிரமத்திலும் அக்கிரம்.
இந்த கொடியவன் நரேந்திரமோடி மனிதகுலத்திற்கே ஒரு அவமானம். அவன் முதல்வராய் இருப்பது என்பது இந்திய இறையாண்மை செத்துப்போனதையே நமக்கு அறிவிக்கிறது. மத்திய அரசு உடனே தெஹல்காவின் வீடியோக்களை பரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
உடனடியாக குஜராத் அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அங்கு அமுல்படுத்த வேண்டும். மேலும் இந்த கொடிய செயல்களை முன்னின்று நடத்தி பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்றொழித்த நரேந்திர மோடியை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி அவனை தூக்கிலிட வேண்டும். மனிதாபிமானம் இன்னும் மீதமிருக்கிறது என்பதை நிரூபிக்க இது ஒன்றுதான் தற்போதைய தீர்வாகும்.
வெளியீடு : தம்மாம் இந்தியா ஃபிரெடர்னிடி ஃபோரம்
