தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 30, 2006

தவ்ஹீத் பெயரால் தக்லீத் செய்யாதீர்!

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 12:45 பிப
بسم الله الرحمن الرحيم

தவ்ஹீத் என்னும் பெயரால் தக்லீத் செய்யாதீர்!
மு. அப்துல்காதிர் தஸ்தகீர்

அன்புடன் ஷிஹாபுத்தீனுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. நலமாக உள்ளீர்களா? நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. நீங்கள் நினைப்பது போன்று காழ்ப்புணர்ச்சியில் எழுதிய கடிதமல்ல அது. உண்மையை அல்லாஹ் அறிவான். அதற்கு பதிலாக இக்கடிதம் எழுதவில்லை. அதற்குரிய நேரம் எனக்குப் போதவில்லை. இக்கடிதம் கூட தாமதமான இரவு வேளையிலேயே எழுதுகின்றேன். பி.ஜே மீது நாம் ஏன் காழ்ப்புணர்ச்சி கொள்ளவேண்டும். அவருக்கும் நமக்கும் என்ன சொத்துத் தகராறா? இல்லை. இன்று பல இஸ்லாமிய அறிஞர்களும் அவரது நிலைபாட்டை எதிர்ப்பதேன்? தமிழகத்தில் மடடுமல்ல பிற நாடுகளில், பிற மாநிலங்களில் உள்ள அறிஞர்களும் அவரது நிலைபாட்டை எதிர்க்கின்றார்களே. ஏன்?

நீங்கள் அனுப்பிய கடிதத்துக்கு முடிந்தால் நேரம் எடுத்து விரிவாக பதில் எழுதுகின்றேன். இக்கடிதம் சில விஷயங்களை மட்டும் உங்களுக்கு உணர்த்தவே எழுதுகின்றேன்.

1. நபித்தோழர்கள் மார்க்கத்தை மாற்றிவிட்டார்கள் என்ற கருத்தை பி.ஜெ கூறியதாக நான் சுயமாக எழுதவில்லை. செப்டம்பர் 2005 ஏகத்துவ இதழில் இடம் பெற்ற நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற கட்டுரையை நடு நிலையுடன் முழுமையாகப் பார்வையிடுங்கள். (இது குறித்து ஒரு கட்டுரை நான் எழுதியுள்ளேன். உங்களுக்கு அனுப்புகின்றேன். இன்ஷா அல்லாஹ்)

2. அல்லாஹ் ஒவ்வொரு இரவிலும் முதல்வானத்தில் இறங்குகின்றான் என்பதை அல்லாஹ் இறங்குவதாகவே வேறு வியாக்கியானம் செய்யாமல் நம்ப வேண்டும். அது எவ்வாறு என்று விளக்க இயலாது. நமக்கு அல்லாஹ் கொடுத்த அறிவு சொற்பமானது. இதுவே குர்ஆன் சுன்னாவைப் பின்பற்றும் மூத்த அறிஞர்களின் நிலைபாடு. ஆனால் இது குறித்த பி.ஜே அவர்களின் நிலைபாடு அல்லாஹ் இறங்கவில்லை. அவனது ரஹ்மத் இறங்குகின்றது என்பதாகும். இதற்கு என்ன ஆதாரம்?

3. சூனியத்திற்கு ஸலஃபிகள் தரும் விளக்கத்தை விட குராஃபிகளின் விளக்கம் பரவாயில்லை! (இங்குதான் ஸலஃபிகள் குராஃபிகளிடம் அதிகம் தொப்பி போடுவது) என்று எழுதியுள்ளீர்கள்? அவ்வாறு என்றால் இது விஷயமாக இது வரை உள்ள முந்தைய மூத்த அறிஞர்கள் (குர்ஆன் விரிவுரையாளர்கள், ஹதீஸ்கலை அறிஞர்கள்)அனைவரும் குராபிகளை விட மோசமானவர்கள் என்று கூறுகின்றீர்களா? இப்படிக்கூறுவதிலிருந்து அல்லாஹ் பாதுகாக்கட்டும்.

4. திருக்குர்ஆன் விளக்கத்தில் புதிய கருத்து : இது குறித்து விபரமான பதில்வேண்டுமன்றால் சகோ அப்துர் ரஹ்மான் ஷிப்லி பேசிய மகத்தான மார்க்கமும் மதிமயக்கும் மனோ இச்சையும் என்ற உரையைச் செவிமடுக்கவும். அது www.islamkalvi.com என்ற வலைத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

5. உங்களது ஜந்தாவது கேள்விக்கும் நான்காவது பதிலே.

6. ஸக்காத் சம்மந்தமாக பி.ஜே அவர்களின் வாதங்கள் தவறானது மடடுமல்ல அதற்காக ஹதீஸையே தனக்கு சாதகமாக அவர் வளைத்தது இப்போது உலகமே அறிந்த விஷயம். மேலும் விரிவான விபரங்கள்
http://www.islamkalvi.com/fiqh/zakath/reply_to_ehathuvam_jan2006.htm

7. ஆடைகுறித்து: http://www.islamkalvi.com/fiqh/prayer/women_dress.htm

நான் கேட்ட கேள்விகளுக்கு எதற்கு இணைய முகவரியைத் தரவேண்டும் என்று நீங்கள் கருதலாம். காரணத்தை முதலிலேயே கூறிவிட்டேன். விரிவாக எழுத நேரம்போதவில்லை. மட்டுமல்ல இது விஷயமாக நான்மேல் கொடுத்த விபரங்கள் நம்மை விட மூதிர்ந்த அறிஞர்களிடமிருந்துள்ளது என்பதாலும்தான்.

மாங்காவை சுவைத்துவிட்டு புளி புளிக்கிறது என்று கூறவில்லை. சுவையான மாம்பழம் என்று நினைத்து உண்டதில் புழு இருந்தது எனவே துப்பிவிட்டோம் அவ்ளவுதான்.

யாரையும் தக்லீத் செய்யக்கூடாது என்று கூறிக்கொண்டே சிலரை தக்லீத் செய்யும் போக்கு தங்களின் எழுத்தில் தெளிவாகத் தெரிகிறது. என்று எழுதியிருந்தீர்கள். ஆனால் அதனை எழுதிய நீங்களே சகோதரர் பி.ஜே யை தக்லீத் செய்துள்ளது தெரிகின்றது. நீங்கள் குறிப்பிட்டுள்ள திருக்குர்ஆன் வசனத்தின் மொழி பெயர்ப்பு அதற்கு சாட்சி. நீங்கள் எழுதியது.

இறைவன் கூறுவதை கவனியுங்கள் : நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரை புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தனது சகோதரனின் மாமிசத்தை சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன், நிகரற்ற அன்புடையோன். (அல் குர்ஆன் 49:12) பார்க்க : 49:9-12

மேற்குறிப்பிட்ட 49:12 வசனம் அரபியில்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلا تَجَسَّسُوا وَلا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ
أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ

அடிக்கோடிட்ட வாக்கியத்தின் உண்மைப் பொருளில் إِنَّ என்பதை பி.ஜே மொழி பெயர்க்கவில்லை. உலகத்தில் உள்ள எல்லா மொழிபெயர்ப்பிலும் அதற்கு பரிபூரணமாக மொழிபெயர்ப்பைக் காணமுடியும். ஆனால் தாங்களோ அவற்றை விட்டுவிட்டு பி.ஜே யின் மொழிபெயர்ப்பை எடுத்துள்ளீர்கள். இது தக்லீத் இல்லையா? إِنَّ என்பது அவசியமற்ற வார்த்தை என்ற பி.ஜே யின் புதிய கண்டுபிடிப்பைத் தாங்களும் கண்மூடிப்பின்பற்றுகின்றீர்களா? நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன், நிகரற்ற அன்புடையோன் என்று எழுதவேண்டியதுதானே?

ஆரம்ப காலத்தில் நான்; தமுமுக – வில் இருந்ததாக எழுதியுள்ளீர்கள்? தமுமுக வில் நான் என்றைக்குமே இருந்ததில்லை. நாம் இருவரும் விடியலில் இருந்தது உண்மை. பிறகு ஏன் யூகம் செய்து எழுதியுள்ளீர்கள்? ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும் (49:12)

ஸலஃபிகள் அன்றைய கேரள முதல்வர் உம்மன்சாண்டியை ஸலஃபி ஸம்மேளனத்திற்காக புத்தரிக் கண்டம் மைதானத்தில் மேடையேற்றி, அவருக்காக எழுந்து நின்று மரியாதை செய்ததாக எழுதினீர்கள். அதனை நீங்கள் பார்த்தீர்களா? அவ்வாறாயின் அவ்வாறு எழுந்திருந்தவர்களிடம் நீங்கள் அதனைச் சுட்டிக்காட்டினீர்களா? அவர்கள் என்ன பதில் அளித்தனர்? ஓ.கே. தமிழகமெங்கும் அம்மாவுக்காக ததஜ வினர் கொடிபிடித்து சூறாவளிப் பிரச்சாரம் செய்தது, அவர்கள் ஆட்சியில் வருவதற்காக துஆ செய்தது இதனை எந்த பட்டியலில் சேர்ப்பதாம்?

எது எப்படியோ ஆகட்டும், உங்கள் கருத்தின் படி பி.ஜெ. வின் அரசியல் நிலைபாடு மொத்தத்தில் தவறு என்றாலும் அதை ஒப்புக்கொள்ள நாம் தயார்! என்று எழுதினீர்கள். அல்ஹம்துலில்லாஹ். இந்த விஷத்திலாவது அல்லாஹ் உங்களுக்கு தெளிவைத் தந்தானே! அவரது மார்க்க நிலைபாடும் தவறே என்பதிலும் அல்லாஹ் உங்களுக்கு தெளிவை ஏற்படுத்துவானாக.

புதில்கள் தொடரும்

அன்புடன்

மு. அப்துல்காதிர் தஸ்தகீர்
thasthahir_ma@hotmail.com

விழிப்புணர்ச்சி எனும் பெயரால் காழ்ப்புணர்ச்சி

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 10:22 முப
விழிப்புணர்ச்சி எனும் பெயரால் காழ்ப்புணர்ச்சி

அன்புச் சகோதரர் திரு மு. அப்துல் காதிர் தஸ்தகீர் அவர்களுக்கு….

அஸ்ஸலாமு அலைக்கும்

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் (அதாவது இருண்டதெல்லாம் பொய்) என்பார்கள். ஆனால் வெளிச்சமாக – தெளிவாகத் தெரிவதையும் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. யாரையும் தக்லீத் செய்யக்கூடாது என்று கூறிக்கொண்டே சிலரை தக்லீத் செய்யும் போக்கு தங்களின் எழுத்தில் தெளிவாகத் தெரிகிறது. கண்மூடித்தனமாக ஒருவரை விமர்சிப்பதற்கு ஒரு வரம்பை யாரும் சொன்னதில்லை என்பதற்காக வரம்பு இல்லை என்று ஆகிவிடாது. இறைவன் கூறுவதை கவனியுங்கள் : நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரை புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தனது சகோதரனின் மாமிசத்தை சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன், நிகரற்ற அன்புடையோன். (அல் குர்ஆன் 49:12) பார்க்க : 49:9-12

குற்றஞ்சாட்டுவதற்கு முன் குற்றஞ்சாட்டிகள் செய்ய மறுத்துவரும் ஒன்றை உங்களிடமும் வினவுகிறேன். அதாவது தாம் பின்பற்றும் கொள்கை மற்றும் தனது செயல்பாடுகள் குறித்து எந்நேரமும் கலந்துரையாட காத்திருக்கும் பி.ஜெ.- விடம் இது பற்றி வினவினீர்களா? பொதுமக்களுக்கு பி.ஜெ.- வை ஜீரோவாக அல்லது மார்க்கத்தை கொஞ்சம் கூட சரியாக விளங்காதவராக சித்தரிக்க முயற்ச்சிக்கும் முன் ஏன் இதுபற்றி அவரிடமே நேரடியாக ஒரு கடிதம் கூட எழுதவில்லை?. சில வருடங்களுக்கு முன்னால் பக்கம் பக்கமாக அபூ அப்தில்லாவிடம் கடிதத் தொடர்பு கொண்டிருந்தவர்தானே நீங்கள்? நேரடியாக கேட்பதை விடுத்து நீங்களாகவே இதற்கெல்லாம் பி.ஜெ. விடம் அற்புதமான பதில் இருக்கும் என்று ஜோசியம் கூறியுள்ளீர்களே? மேற்குறிப்பிட்ட உங்களது ஜோசியத்திலிருந்தே பி.ஜெ. சொல்வது உண்மையாக இருந்தாலும் அதை நான் கண்டு கொள்வதாக இல்லை என்ற உங்கள் மனோபாவத்தை வெளிப்படுத்தியுள்ளீர்களே! இது மகாபாவம்; இல்லையா?
எதற்கெடுத்தாலும் விவாதம் என்று மெல்ல நழுவவேண்டாம்.
எதற்கெடுத்தாலும் விவாதம் என்று இதுவரையிலும் சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக்கொள்பவர்கள் கூடச் சொன்னதில்லையே? தவ்ஹீதுதான் எங்களுடையதும் என்று பிதற்றுபவர்கள் ஓடி ஒளிந்து விடுவதன் சூட்சுமம் என்ன? சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளை களைய இவர்கள் எத்தனை முறை முன் வந்தார்கள்?

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது இது தான் :-
சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக்கொள்பவர்கள் (அறியாமையால்) தூங்குபவர்கள்.
இந்த குற்றஞ்சாட்டிகள் (அறிந்திருந்தும்)தூங்குவதாக நடிப்பவர்கள்.

ஆரம்ப காலத்தில் தாங்கள் தமுமுக – வில் இருந்ததனாலோ என்னவோ தமுமுக வினர் மீது சற்று பரிவு காட்டியுள்ளீர்கள். தேவை தான் ஆனால் சிலர் மீது கொண்டுள்ள வெறுப்பின் காரணமாக அவர்களுக்கு நீதி செலுத்துவதை விட்டும் பாராமுகமாக இருந்து விடாதீர்கள் என்ற குர்ஆன் வசனத்தை தாங்கள் கடைபிடிக்க மறுப்பது அல்லது மறப்பது தவறிலும் மிகப்பெரிய தவறு.

எதுவாக இருந்தாலும் உரக்கக் கூறுங்கள் ஆனால் ஒத்து ஊதாதீர்கள் என்று இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பி.ஜெ. நமக்கு கற்றுத் தந்தார். அதை தாங்கள் மறுப்பதாக இல்லை. எனவே அதன் படி நீங்களும் செயல் படுங்கள் என்பதை நினைவு படுத்துகிறேன்.

இந்த தேர்தலோடு இந்த தேர்தல் நிலைபாடு முடிந்துவிட்டது என்று பி.ஜெ. மற்றும் அவரது தலைமையை ஏற்று நடக்கும் த.த.ஜ வினர்களும் அறிவித்து விட்டார்கள். அத்துடன் தேர்தல் முடிவை சற்று அலசும் வண்ணமாக tntj.net நான்கு Vedio Clip ம் பதிவு செய்துள்ளார்கள். அதை நானும் பார்வையிட்டேன். ஆனால் இந்த முடிவு தமிழகத்தின் இறுதி முடிவு அல்ல. தற்காலிகம் தான் என்று இப்போதைய முதல்மைச்சர் கருணாநிதியே உணர்ந்திருக்கும் போது இன்னும் இவ்விசயத்தில் தங்களது பொன்னான வார்த்தைகளை வீணடிப்பதில் என்னதான் பேரின்பம் அடைகிறார்களோ? அல்லாஹ்வுக்கே வெளிச்சம். இவர்களது பிரச்சாரம் முஸ்லிம்களிடம் எடுபடாமல் ஜெயலலிதா தோற்கடிக்கப்பட்டார் என்று யாரோ கூறியதை தாங்கள் கூறுவது முஸ்லிம்கள் தான் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் சக்தியாயின் ஒப்புக்கொள்ளலாம்.

(பெருகிவரும் முஸ்லிம் சமுதாயம் தான் இனிவரும் காலங்களில் நிர்ணய சக்தி என புரிந்து கொண்டதால் தான் சில பீடைகள் இப்போதே அரசியலில் குதித்துவிட்டால் எதிர்காலம் பிரகாசிக்கும் என்று குதித்துக் கொண்டிருக்கின்றார்கள். டிசம்பரில் திருடவேண்டாம், சுனாமிக்காக காத்திருக்கவேண்டாம். இதற்கு பி.ஜெ. ஒரு முட்டுக்கட்டை என்பதும் அவதூறு பரப்புவதற்கான காரணங்களில் புதியது.)

உங்கள் கருத்தின்படி பி.ஜெ. மற்றும் அவரது தலைமையை ஏற்று நடக்கும் த.த.ஜ வினர் எடுத்த தேர்தல் நிலைபாடுகள் அத்தனையும் தவறு என்றே வைத்துக் கொள்வோம். அதற்காக பெருவாரியான முஸ்லிம்களும் ஜெயலலிதாவுக்குத் தான் வாக்களித்தார்கள் என்ற பி.ஜெ. வின் கருத்தை மறுக்க முடியாது. முஸ்லிம்கள் ஜெயலலிதாவை எதிர்த்ததனால் தான் சென்ற தேர்தலை விட இந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு அதிக வாக்குகளை அளித்தார்களா? இல்லை முஸ்லிம்கள் ஜெயலலிதாவுக்கு பெருவாரியாக வாக்களித்ததை மடமை என்று சாடுகிறீர்களா?. சுருக்கமாக சொல்வதென்றால் தேர்தல்-ஜெயலலிதா-ஆதரவு என்பதைப் பற்றியெல்லாம் தாங்கள் எழுதியதை விரிவாக அலசினால், தாங்கள் எழுதியதைப் போன்று விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை ஏன் என்றால் நான் க்ளீன் ஷேவ் செய்திருந்தேன் என்று கூறும் பலரை அடையாளம் காண்பிக்க முடியும். ஆனால் அது நம் வேலை அல்ல!

தாங்கள் ஆதரிக்கக்கூடிய (அதாவது தவ்ஹீத் என்று சொல்லிக்கொண்டே குராஃபிகளின் சில செயல்பாடுகளை தாங்களும் செயல்படுத்தி செல்லுமிடமெல்லாம் தவ்ஹீதை தலைகுனிய வைக்கும்) ஸலஃபிகள் அன்றைய கேரள முதல்வர் உம்மன்சாண்டியை ஸலஃபி ஸம்மேளனத்திற்காக புத்தரிக் கண்டம் மைதானத்தில் மேடையேற்றி, அவருக்காக எழுந்து நின்று மரியாதை செய்ததை நிங்கள் மறுக்க மாட்டீர்கள். அவர்களும் தவ்ஹீத் என்றுதான் உங்களையும் தக்லீத் செய்ய வைத்திருக்கின்றார்கள்.

எது எப்படியோ ஆகட்டும், உங்கள் கருத்தின் படி பி.ஜெ. வின் அரசியல் நிலைபாடு மொத்தத்தில் தவறு என்றாலும் அதை ஒப்புக்கொள்ள நாம் தயார்! ஆனால் மார்க்க விசயத்தில் விழிப்புணர்ச்சி என்ற பெயரில் தாங்கள் எழுதியிருக்கும் காழ்ப்புணர்ச்சிகளுக்காக சில கேள்விகளுக்கு உரிய பதிலைத் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

(இதற்கு முன் About PJ என்ற Iduthan Islam.com என்ற வெப் சைட்டுடன் நடுநிலையாளர்கள் நாங்கள் என்று நா கூசாமல் கூறிவரும் சிலரது உலகப் புகழ்பெற்ற ஒரு கேள்வி-பதிலுக்கான எனது கருத்தை உங்களுக்கும் அனுப்பியிருந்தேன். அதற்காக குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான பதிலை எதிர்பார்த்திருந்தேன். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மட்டும் கலந்துரையாட யாரும் முன் வரவில்லை. ஏமாற்றம் தான் மிச்சம். அதுவும் உங்களிடமிருந்து வந்த பி.ஜெ. வை கண்மூடிப் பின்பற்றுவதை எச்சரிக்கிறேன் இப்போது அவர் பெரிய அரசியல் வாதி – என்ற பூசணிக்காய் பதிலால் மிகவும் அதிர்ச்சியுற்றேன். தங்களுக்கு சாதகமாக இப்படியே தேர்தல் முடிவு வந்தபின் எழுதலாம் என்று காத்திருந்தீர்களோ என இப்போது எண்ணத் தோன்றுகிறது.

எது நடந்தாலும் அது நன்மைக்கே என்ற இறைச் செய்தியை மறந்து ஆர்ப்பரிக்கும் கூட்டத்தாருடன் கலந்து விடாதீர்கள். அல்லாஹ் நம்மை பாதுகாக்கட்டும்)

1. நபித்தோழர்கள் மார்க்கத்தை மாற்றிவிட்டார்கள் என்று எங்கு எப்போது பி.ஜெ.கூறினார்?

2. அல்லாஹ் முதல்வானத்தில் இறங்குகின்றான் என்ற ஹதீஸைப் பொருள் மாற்றிக் கூறியிருந்தால் அதன் சரியான பொருள் என்ன?

3. சூனியதிதற்கு ஸலஃபிகள் தரும் விளக்கத்தை விட குராஃபிகளின் விளக்கம் பரவாயில்லை! (இங்குதான் ஸலஃபிகள் குராஃபிகளிடம் அதிகம் தொப்பி போடுவது)

4. திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பில் புதிய கருத்துக்களைக் கூறியது என்றீர்கள். கருத்து என்பதன் பொருளை சரியாக புரிந்திருந்தால் இவ்வாறு எழுதியிருக்க மாட்டீர்கள். ஆனால் பொருளை மாற்றியது என்று துணிந்து சொல்கிறீர்களே இதை விவாதிப்பதற்கு முன் வராதது ஏன்?. (பொருளை மாற்றுவது என்பது நரகத்திற்கான நேரடிப் பாதை. அது போல்தான் பொருளை மாற்றியது என்று ஆதாரமில்லாமல் கூறுவதும்)

5. ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக இருந்தாலும் அறிவுக்குப் பொருந்தவில்லையெனில் புறம் தள்ளவேண்டும் என்று எந்த ஹதீஸை குறிப்பிட்டு கூறினார் என்பதையும் பட்டியலிடவும்.

6. செல்வங்களுக்கான ஸகாத் ஒருமுறை மட்டும் கொடுத்தால் போதும் என்று வாதிட்டது. (முதல் ஐந்தும் ஆதரமில்லாத குற்றச்சாட்டுகள் எனக் கருதுவதால் அதன் நடையை இறந்தகாலத்தில் எழுதியிருப்பதை விட்டுவிட்டேன். ஸகாத் விசயத்தில் வாதிட்டது என்று எழுதி ஏதோ ஸலஃபிகளும் இவர்களின் உலகளாவிய அறிஞர்களும் விவாதித்து வருடம் ஒருமுறை கொடுத்து விட வேண்டும் என்று தீர்மானம் ஏற்படுத்திவிட்டதைப் போன்று எழுதியுள்ளீர்களே? இது விசயத்தில் மக்கள் தெளிவாகத்தான் உள்ளார்கள். எதை அடிப்படையாக வைத்து நீங்களும் உங்கள் ஆதரவாளர்களும் வருடத்திற்கு ஒருமுறை ஸகாத் கொடுத்து வருகிறீர்கள்? நீங்கள் தான் இந்த நூற்றாண்டின் தக்லீத் வாதிகள் என்பதற்கான ஆதாரம் இது மட்டும் போதாதா? ஸகாத் மற்றும் சூனியம் சம்பந்தமாக (விரிவாக) விவாதிப்பதற்கு ஆயனநநயெ ருniஎநசளவைல – யிலிருந்து பி.ஜெ. விற்கு அழைப்பு வந்திருப்பது உலகளாவிய என்ற தங்கள் கூற்று உலகளாவிய புரட்டு என்பதை புலப்படுத்துகிறதே? இன்னும் சொன்னால் திருவனந்தபுரத்தில் ஸலஃபி சென்டரில் ஸாதிக் பாய் சொன்னதை வைத்தே வித்ரு தொழுகையின் முறைகளை இரண்டு வருடம் மாற்றி மாற்றி அமைத்தார்களே அதை தக்லீத் என்று சொல்ல மறுப்பது ஏன்?

7. ஆண்களுக்கான ஆடை விசயத்தில் இஸ்லாம் கூறுவது என்ன என்பதை தெளிவு படுத்திவிட்டு வேண்டுமானால் பி.ஜெ ஃபத்வா கொடுத்து விட்டார் என்று அங்கலாய்த்திருக்கலாம்

மாங்காவை சுவைத்துவிட்டு புளி புளிக்கிறது என்று கூறுவது போலல்லவா இருக்கிறது உங்கள் குற்றச்சாட்டு. (மனோ இச்சையை பின்பற்றுவதை மார்க்கம் ஆக்கிவிடாதீர்கள்). இமாம்களை திட்டுகிறார்கள், அவுலியாக்களை பழிக்கிறார்கள், அண்ணலாரை ஏசுகிறார்கள். சவுதியிலிருந்த சம்பளம் என்றெல்லாம் வசைபாடிக் கொண்டிருந்த குராஃபிகள் உங்களிடம் தோற்றுவிட்டார்கள் போங்கள்.

மார்க்கத்தின் பெயரால் அரசியல் நடத்தும் போலிகளை இனம் காட்டுவோம் என்று பன்மைப்படுத்தியுள்ளீர்கள். (பி.ஜெ. – வும் த.த.ஜ ஆலிம்கள் என்று நழுவ வேண்டாம். ஏனென்றால் நாளைக்கே த.த.ஜ ஆலிம்களில் ஒருவர் தனியாகிவிட்டால் (அவர் காணாமல் போகும் வரை) அவரோடு அணிசேர்ந்து அவரைக் கெடுக்கும் அவலங்களை காண்கிறோம்.) அரசியல் நடத்தாமல் மார்க்கத்தில் மட்டுமே போலித்தனம் செய்யும் போலிகளை என்வென்கிறீர்கள்? பகிரங்கப் போலிகள் தமிழகத்திலும் கேரளத்திலும் இல்லையா? இவர்களை ஒடுக்க தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?

எங்கெல்லாம் த.த.ஜ வினர் பெரும்பான்மையாக இருக்கின்றார்களோ அங்கு சென்று நாமெல்லாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டே அவர்கள் குறைவாக இருக்கும் பகுதியில் அவர்களுக்கெதிரான நடவடிக்கைகளில் இறங்குவது போன்ற வஞ்சகத் தனங்களை நீங்கள் கண்டதில்லையா? அல்லது அவர்களுடன் நீங்களும் அணிசேர்ந்து விட்டீர்களா? நீதியை நிலை நாட்டுவதில் பாரபட்சம் ஏன்? துயுஞர்இ வுNவுதுஇ வுஆஆமு அல்லது நஜாத் வாசகர்களாகட்டும். யாராக இருந்தால் என்ன? அத்தனை பேரும் ஆதமின் மக்கள் தான்! நம் சகோதர சகோதரிகள் தான்!! அனைவருக்கும் நாம் கண்ட சத்தியத்தை எடுத்துரைப்போம்;. அசத்தியத்திற்கு எதிராக அண்ணலார் வழியில் பிரச்சாரம் மேற்கொள்வோம். அதை விடுத்து அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டு குறிப்பிட்ட ஒருவர் மீது சாடுவதன் மூலமாக எந்த சமுதாயத்தையும் நீங்கள் திருத்தியமைக்கவோ விழிப்புணர்வடையச் செய்யவோ முடியாது.

மொத்தத்தில் தங்களின் இவ்வாறான கூற்றுக்களால் பி.ஜெ. யை போலி என்று தங்களுக்குள் எண்ணி மகிழலாமேயன்றி பலன் ஏதும் விளைவதாக தெரியவில்லை!!

ஆகவே, மேலே கூறப்பட்ட அனைத்திற்கும் ஒரே கடிதத்தில் பதிலுரைக்க இயலாது என்பது நானும் இக்கடிதங்கள் கிடைக்கப் பெற்றிருக்கும் அனைவரும் அறிந்த ஒன்று. குறைந்த பட்சம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பதில் தருவீர்கள் என எதிர் பார்த்த வண்ணம்…………..

(மிர்ஸா குலாம் என்ற இன்னொருவரின் கண்டு பிடிப்பு : அப்துல் காதிர் தஸ்தகீர் அவர்களின் சில குற்றச்சாட்டுகளை அப்படியே எழுதியுள்ளார். ஸகாத் மற்றும் குர்ஆன் உட்பட அனைத்து குற்றச்சாட்டுகளும் பி.ஜெ. தமுமுக வில் இருந்த போது இல்லையே? அவர் எழுதிய திருக்குர்ஆன் மொழி பெயர்புக்கு கூடுதல் வாங்கவேண்டும் என விலை நிர்ணயம் செய்துவிட்டு பின்னர் அற்ப விலைக்கு குர்ஆனை விற்கின்றார் என்றெல்லாம் பிதற்றுபவர்களிடமிருந்து அற்புதமான புதுப் புது குற்றச்சாட்டுகளுடன் இனிவரும் காலங்களில் சில இ-மெயில்களை படிக்க வேண்டிய அவல நிலை, முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்படலாம்! வெளிநாடுகளுக்குச் சென்று வெள்ளோட்டம் பார்த்து இறுதியாக பி.ஜெ.- வை குற்றம் சாட்டுவதை விட தவ்ஹீதை குற்றம் சாட்டினால் எளிதில் இவர்களை ஓரங்கட்டி விடலாம் என்பதை கண்டுபிடித்து அதன்படி செயல்பட்டு தமக்குத் தாமே நாசம் ஏற்படுத்திக் கொண்ட இவர்கள் பிரிந்துவிட்ட போதும் பி.ஜெ.- வை அண்ணன் அண்ணன் என்று சொல்லி தமிழக மக்களை வளைக்க முயன்றார்கள். பரிதாபம்! பலன் ஒன்றும் கிடைக்கவில்லையா, உடனே கூறினார்கள் அபூ ஜஹ்ல் என்றும் இப்போது மிர்ஸா குலாம் அஹ்மது என்றும். வேடிக்கை என்னவென்றால் தனது மனைவிக்கோ குழந்தைகளுக்கோ கடிதம் எழுதவில்லை என்றாலும் தவறாமல் பி.ஜெ.- வை நாலு பக்கத்தில் குற்றம் சாட்டும் சில சமுதாயச் செம்மல்கள் கொஞ்சம் ஓய்வில் உள்ளார்கள்.

சிக்கன் சில்லி – மட்டன் கபாப் போன்றவற்றின் சுவை பி.ஜெ.- வின் மாமிசத்தில் இருக்காது என்பது இவர்களுக்குத் தெரியாது போலும்.

இறைவா! சில அற்ப ஆதாயக்காரர்களால் எங்கள் சமுதாயததில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களை நீ தீர்த்துவைப்பாயாக.

இறைவா! தமிழ் மக்களுக்காக ஓய்வின்றி பிரச்சாரம் செய்துவரும் பி.ஜெ. மற்றும் அவரைப் போன்ற மார்க்க அறிஞர்களையும் இன்னும் எங்கள் அனைவரையும் இறுதிவரை நேர்வழியில் செலுத்துவாயாக.

இறைவா! எங்களை மனோ இச்சைக்கு அடிபணியாமல் உண்மையை ஒப்புக் கொள்ளும் மக்களாக ஆக்கியருள்வாயாக.

அன்புச் சகோதரன்.

ஷிஹாபுத்தீன்
shihabi50@yahoo.co.in

மே 29, 2006

வேதம் ஓதும் சாத்தான்கள்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 1:29 பிப

ஒப்பற்ற அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

முரண்பாடுகள் ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் ஜித்தாவிலிருந்து துறைமுகத்தைச் சேர்ந்த காதர் சுல்தான் என்ற பெயரில் கடந்த வாரம் முகவரியில்லாத ஒரு சாத்தான் ஒற்றுமையை(?) விரும்புவதாக சொல்லிக் கொண்டு வேதம் ஓதியிருக்கிறது.

நான் இப்படி குறிப்பிடக் காரணம், கடந்த 10 ஆண்டுகளாக ஜித்தாவில் தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் குர்ஆன் ஹதீஸ் பிரச்சாரம் செய்து வரும் மௌலவி முஜிபுர்ரஹ்மான் உமரி அவர்களைப்பற்றி பல பொய்யான அவதூறுகளை பரப்பி, தனக்கு முஜிபுர் ரஹ்மான் நெருக்கமானவர், பிரியமானவர் என்று சொல்லிக் கொண்டு அவரைப் பற்றி அவதூறுகளை மின்னஞ்சல்கள் மூலம் பலருக்கு அனுப்பும் காதர் சுல்தானின் செயல் நிச்சயமாக சாத்தானிய செயல் என்பதாலேயே.

மௌலவி முஜிபுர்ரஹ்மான் அவர்களிடம் முரண்பாடுகளை காணும் இவர், உண்மையில் நேர்மையாளராக இருந்தால் அவரிடம் நேரில் சொல்லலாம். நேரில் சொல்ல தயங்கும் இவர் மேற்கண்ட மின்னஞ்சலை முஜிபுர்ரஹ்மானுக்கு மட்டும் அனுப்பியிருக்கலாம். அதை விட்டு விட்டு பல பகுதியில் வசிக்கும் ததஜவினருக்கு மட்டும் அனுப்பியிருப்பது இவரின் பொய் முகத்தை அம்பலப்படுத்துகிறது.

மேலும் இவர் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் உண்மைதானா? என்பதற்கு, பல ஆண்டுகளாக மௌலவி முஜிபுர்ரஹ்மான் உமரி அவர்களின் மாணவராகவும், தமிழ் தஃவா கமிட்டியில் அங்கம் வகித்து வரும் நான் சில விளக்கங்களை அளிக்க கடமைப்பட்டுள்ளேன்.

முதலாவதாக, ஜித்தா பகுதியின் தஃவா பணிகள் சகோதரர் முஜிபுர்ரஹ்மான் உமரி அவர்களின் தவறான அனுகுமுறையால் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ளது என்று மிகப் பெரும் அவதூறை அள்ளி வீசியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக ஜித்தாவில் தமிழ் தஃவா கமிட்டி அல்லாஹ்வின் பேருதவியால் தஃவா பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. ஆனால் சுமார் ஒரு வருடத்திற்கு முன் தமிழ் தஃவா கமிட்டியின் அறிவுறுத்தலையும் மீறி ஆரம்பிக்கப்பட்ட ததஜவினரின் வெறி பிடித்த நடவடிக்கையினாலேயே தஃவா பணிகள் கடுமையான பாதிப்புள்ளாகி வருகிறது என்பதே உண்மை. இது அனைவரும் அறிந்த ஒன்றே.

இஸ்லாமிய சகோதரத்துவத்திற்கு எதிரான இவர்களின் நடவடிக்கையால்தான் ஜித்தாவில் பல மனக் கசப்புகள் ஏற்பட்டன. இதற்கு பல சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். உதாரணத்திற்கு சிலதை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

1. பல வருடங்களாக தமிழ் தஃவா கமிட்டி எந்த பிரச்சனையுமின்றி முறையாக செய்து வந்த பித்ரா வசூலை, அவர்கள் கைவிட்ட பின் ததஜவும் வசூலித்தது. அப்படி வசூல் செய்த இடங்களிளெல்லாம் பிற இயக்கங்களை பற்றிய அவதூகளை பரப்பியது.

2. த.மு.மு.க. சார்பாக வசூல் செய்ய நியமிக்கப்பட்டவரை மிரட்டி அவர்கள் பைலை திருப்பி கொடுக்கச் சொன்னது.

3. துறைமுகத்தில் ஜி.சி.டி. கம்பெனி மேனேஜரிடம் 10 வருடங்களாக நாங்கள் தான் வசூல் செய்தோம் என்று தவறான புகார் கொடுத்து மற்றவர்களின் வசூலை தடுத்தது.

4. தமிழ் தஃவா கமிட்டியால் பல வருடங்களுக்கு முன் பலத் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட அல்ஹுதா நூலத்திற்கு இடையூராக சிடிக்களை மிக குறைந்த விலையில் விற்றும், அதே பகுதியில் போட்டியாக சிடி விற்பனை செய்தது.

5. தமிழ் தஃவா கமிட்டி சார்பாக துறைமுகத்தில் நடத்தப்பட்ட தஃவா நிகழ்ச்சியில் கமிட்டி தலைவர் தடுத்தும் சிடி விற்றது.

6. ததஜ அல்லாத மற்ற மார்க்க அறிஞர்களின் வகுப்புக்களையும், பயான்களையும் புறக்கணித்தது.

7. பலத், செனய்யா, நிஹாத் அரப் கேம்ப் பகுதிகளில் பொது இடங்களில் நோட்டீஸ்கள் ஒட்டி, கடந்த காலங்களில் இல்லாத கலாச்சாரத்தை ஜித்தாவில் ஆரம்பித்தது.

உண்மை இவ்வாறு இருக்க சகோ. முஜிபுர்ரஹ்மான் மீது வீண் பழி சுமத்தியிருப்பது அபத்தமானது.

இரண்டாவதாக, சகோதரர் முஜிபுர்ரஹ்மான் உமரியின் தாஃவா பணி என்பது மௌலவி பி.ஜைனுல் ஆபிதின் அவர்களையும், ததஜவையும் சாடுவது, கேலி செய்வது, துருவி துருவி குறைக்கண்டு பிடிப்பது தான் இன்றைய தாஃவா பணியாக செய்து கொண்டு இருக்கிறார் என்று விஷம் கக்கியுள்ளார்.

ஜகாத் விஷயத்தில் 1400 ஆண்டுகளாக உலகத்தில் யாரும் சொல்லாத புதிய கருத்தை சொல்லும் பி.ஜே. அவர்களிடம் விளக்கம் கேட்டு, வீடியோ கேசட் அனுப்பிய முஜிபுர் ரஹ்மான் அவர்களிடம் டெலிபோனில் செட்டப் செய்திருக்கிறாய், தமுமுக காரன்களை வைத்து நிகழ்ச்சி நடத்தியிருக்கிறாய், என்று சாடியது மட்டுமின்றி விவாதத்திற்கு வராமல் ஓடி ஒளிந்து விட்டான் என்றும், நாங்கள் முஜிபை ஊரில் கவனித்துக் கொள்வோம் என்று மிரட்டுவதும், கருத்துக்கு பதில் சொல்லாமல் அவரின் குடும்பத்தை கொச்சைப்படுத்தியும் வியாபாரத்தை கேலி செய்தும் டிவியில் பிரச்சாரம் செய்வதும்,

தேர்தலில் களப்பணியாற்றச் செல்வோர் அத்தனை பேரும் ஏகத்துவத்தை இழந்து விடுகின்றனர் என்று ஏகத்துவம் ஏப்ரல் 2004 இதழில் எழுதிவிட்டு இன்று அரசியல்வாதிகளை மிஞ்சும் வகையில் தேர்தலில் களப்பணியாற்றி ஏகத்துவத்தை இழந்து வருவதும்,

கவர்ச்சி நடிகைகளுக்கு வரவேற்பு அளிப்பதும்,

கடையநல்லூரில் ஜாக் அமைப்பிற்கு சொந்தமான பள்ளியில் கல்வெட்டை இடித்து ரவுடிகளை மிஞ்சும் வகையில் அராஜகம் செய்து பள்ளி பூட்டப்பட துணை புரிந்ததும்,

குடந்தையில் நடப்பட்ட அரசியல் மாநாட்டிற்காக நெல்லிகுப்பத்தில் தவ்ஹீது பள்ளிளை ஒரு நாள் முழுவதும் பூட்டி விட்டு சென்றதும்,

தமிழகத்தில் உள்ள அனைத்து தொலைகாட்சிக்கு சற்றும் சளைக்காமல் இசையுடன் ஆபாச விளம்பரங் களையும், கோவில் நிகழ்ச்சிகளையும், ஒலிபரப்பிய விண் டிவியில் பங்கு வகித்ததும்,

உலகப் புகழ் பெற்ற இஸ்லாமிய அழைப்பாளர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களை காபிர் என்று ஃபத்வா கொடுப்பதும்,

நாவு கூசும் ஆபாச வார்த்தைகளை பயன் படுத்தி மின்னஞ்சல்களை உலகம் முழுவதும் அனுப்புவதும்,

நாலாந்தர அரசியல் வாதியைப் போல் எதிரணியினரை மேடைகளில் வசை பாடுவதும்,

மற்ற இயக்கத்தினரிடம் துருவி துருவி குறைக்கண்டு பிடிப்பது தான் இன்றைய ததஜவின் தாஃவா பணி என்பதை காதர் சுல்தான் மறந்து(?) விட்டார்.

மேலும், முஜிபுர் ரஹ்மான் அவர்கள் தனிப்பட்ட முறையில் பீஜேவையோ ததஜ இயக்கப் பிரச்சனைகளையோ விமர்சித்திருந்தால் நீங்கள் கூறுவது ஓரளவுக்கு நியாயமாக இருக்கும். ஆனால் பீஜேயின் மார்க்க ரீதியிலான குறைகளை மட்டுமே தகுந்த ஆதாரங்களுடன் விளக்குகிறார். இதை இவர் பல வருடங்களாக பல முறை பீஜேயிடம் சுட்டிக்காட்டி, பீஜே இதுவரை எந்த மறுப்பும் தராததாலேயே தன்னுடைய மாணவர்களுக்கு மட்டும் வகுப்பு எடுத்து வருகிறார்.

மூன்றாவதாக, தாயகத்திலிருந்து வந்த பிறகு அவர் பணியாற்றும் சென்டரின் அனைத்து வகுப்புகளும் Anti பீஜே என்ற ரீதியில் தான் இருந்து வருகிறது என்று புலம்பியுள்ளார்.

பல வருடங்களுக்கு முன்பே சூன்யம், பல்லியை அடிப்பது, மற்றும் இஸ்லாமிய இதர சட்டங்கள் தொடர்பான வசனங்களில் பீஜேயின் கருத்துக்கள் மார்க்கத்திற்கு முரணாக இருக்கிறது என்று முஜிபுர் ரஹ்மான் பல வகுப்புக்கள் எடுத்திருக்கும் போது, தாயகத்திலிருந்து வந்த பிறகு தான் என்று புலம்புவதும், பல வகுப்புகள் பொதுவான தலைப்பிலேயே எடுத்து வருவதை அறியாமல் அனைத்து வகுப்புகளும் என்று பிதற்றுவதும் காதர் சுல்தானின் அறியாமையே.

நான்காவதாக, யாரெல்லாம் பிஜேக்கு எதிரானவர்களோ அவர்கள் எல்லாம் இப்போதைய நண்பர்களாகிக் கொண்டு இருக்கிறார்கள் என்று புதிய கண்டு பிடிப்பை வெளிக்காட்டுகிறார்.

முஜிபுர்ரஹ்மானுக்கு மிகவும் நெருக்கமான பிரியமான நண்பர் என்று தன்னைப்பற்றி அறிமுகம் செய்த காதர்சுல்தானும் பிஜேக்கு எதிரானவர் தான் என்று இவ்வரிகளின் மூலம் சொல்ல வருகிறார் போலும். இதை அவர் எழுத்துக்களாலேயே நிரூபித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

ஐந்தாவதாக, சகோதரர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் நான் நான் என்ற அகந்தை இன்னும் கூடிக் கொண்டு தான் இருக்கிறது. ஒரு சாராரை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒருவர் எப்படி நல்ல இஸ்லாமிய அழைப்பாளராக இருக்க முடியும்? என்று ததஜ மாநிலத்தலைமையை கேட்ட வேண்டிய கேள்வியை இங்கு கேட்கிறார்.

கடந்த 20ஆண்டுகளில் நான் என்ற அகந்தை காரணமாக பல இயக்கங்களை உடைத்தும், தேர்தல் நிலைப்பாட்டில் படுதோல்வி அடைந்தும் நாங்கள் தான் வெற்றி பெற்றோம் என்று ஆணவத்துடன் பேசி வரும் புரட்சித்தலைவியின் போர் வாளாக பவனிவருபவர்களும் தான் நான் என்ற அகந்தைக்கு சொந்தக்காரர்கள்,

மேலும், முன்பு மனம் திறந்த மடலில் தான் சார்ந்திருந்த தமுமுகவை வானளாவி புகழ்ந்தும், எந்த முறைகேடும் இல்லாமல் சரியான முறையில் அதைச் செலவு செய்யும் ஒரே இயக்கம் தமுமுக என்றும் எழுதி விட்டு இன்று அவ்வியக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று செயல்படுபவர் நல்ல இஸ்லாமிய அழைப்பாளராக இருக்க முடியுமா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து நம்ம காதர் பாய் அவர்கள், முஜிபுர் ரஹ்மானிடம் கண்டு பிடித்துள்ள மெகா(?) முரண்பாடுகள் என்ன? என்ன?? என்று பார்ப்;போம்.

முன்பு துறைமுக நூலகப் பொறுப்பாளர் சகோதரர் சுல்தானை எதிர்த்து விட்டு இப்போது அவரை தமிழ் தஃவா கமிட்டியில் சேர்க்க வேண்டும் என்றும், முன்பு விடியல் வெள்ளிக்காரர்களை சென்டருக்கு வரவிடாமல் விரட்டி அடித்துவிட்டு இன்று அவர்களை அழைப்பதும், கமிட்டியில் அவர்களை சேர்க்க வேண்டும் என்றும் முஜிபுர்ரஹ்மான் சொன்னதாக தன் தானைத் தலைவர்கள் பாணியில் மெகா பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்.

மேற்சொன்ன தகவல்கள் உண்மை தானா? என்று அறிவதற்காக தமிழ் தஃவா கமிட்டித் தலைவரிடம் போனில் கேட்டேன். அதற்கு அவர் முஜிபுர்ரஹ்மான் அவ்வாறு சொல்லவில்லை என்ற உண்மையை தெரிவித்தார் மற்றும் சென்ற செயற்குழுவில் முஜிபுர் ரஹ்மான் கலந்து கொள்ளவும் இல்லை. மேலும் துறைமுகம் சுல்தானை சேர்க்க வேண்டும் என்று சிலர் கருத்து சொன்னதாகவும், விடியல் வெள்ளிக்காரர்கள் கமிட்டியில் சேர வேண்டும் என்று கடிதம் கொடுத் திருப்பதால் அதை பரிசீலனை செய்ய வேண்டும் என்று பேசப்பட்டதாக சென்ற செயற்குழுவில் கலந்து கொண்டவர்கள் நம்மிடம் சொன்னார்கள். இதில் எந்த வகையிலும் சம்பந்தப்படாத முஜிபுர் ரஹ்மானை வீண் வம்புக்கு இழுப்பது காதர் சுல்தானின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மேலும் அவரின் நிகழ்ச்சிகளுக்கு எந்த அமைப்பினரையும் தனிப்பட்ட முறையில் அழைத்ததில்லை. பொதுவான அழைப்பு கொடுத்து வருவதுதான் வழக்கம். ஆனால் மற்றவர்களின்; நிகழ்ச்சிகளை புறக்கணித்தும், கூட்டத்தை காட்ட தங்களுடைய நிகழ்ச்சிக்கு மட்டும் மற்ற அமைப்பினரை தனியாக அழைப்பதும் காதர் சுல்தானின் சகாக்களின் வேலை என்பதும் மக்களுக்கு தெரியும்.

மேலும், பணம் வருகிறது என்றால் யார் பின்னாலும் போவார், கொள்கை கோட்பாடு என்பதெல்லாம் இரண்டாம் நிலைதான் என்று சகோதரர் சுல்தானின் தஃவாப் பணிகளை கொச்சைப்படுத்தும் இவர்களின் நிலையை பார்ப்போம்.

நான் தான் ஆயுல் கால சேர்மேன், என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று ஆணவமாக கூறிக்கொண்டு தமுமுகவிற்காக வாங்கப்பட்ட சொத்துக்களை அனுபவித்து வருவதும்,

விண் டிவிக்காக துபாயிலுல்ல கல்ப் ஆசியா நிறுவனத்தாரிடம் ஷேர் வாங்கிய 80லட்சத்தை 6 மாதத்தில் திருப்பி தருவதாக சொல்லி பட்டை நாமம் போட்டும்,

அபுதாபியில் திர்மிதிக்கு ஷேர் சேர்த்த பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக் காமல் அமுக்கி வைத்திருப்பதும்,

தமுமுகவை உடைப்பதற்கு வாங்கிய கருப்புப் பணத்தை வெள்ளையாக்க 1 கோடி வசூல் என்று கள்ள கணக்கு காட்டுவதும்,

ஆசியாவிலேயே கோடீஸ்வரராக ஆவதற்கு துவா செய்யுமாறு நம்மை வேண்டுவதும்,

சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலியின் குடும்பத்திற்காக வசூல் செய்யப்பட்டு, அவரின் சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்ட 50 ஆயிரத்தை அவரிடமிருந்து ரகசியமாக திருப்பி வாங்கிக் கொண்டதும்,

என்று இவர்களின் பண மோசடிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அடுத்து, ரஹ்மதுல்லாஹ் இம்தாதி அவர்களின் பயானை துறைமுகத்தைத் தவிர எங்கும் நடத்த விடக்கூடாது என்று எல்லா இடங்களிலும் தடை செய்தார், என்று புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்.

நாம் அறிந்த வகையில் இது போன்ற எந்த சம்பவமும் நடைபெறவில்லை. எந்த தேதியில், எந்தெந்த கேம்பில் இம்தாதி அவர்களின் பயானை தடுத்தார்? என்று குறிப்பிடாமல், புறம்போக்கைப் போல் எழுதியிருப்பது, பொய்களை தவிர இவரிடம் எந்தச் சரக்கும் இல்லை என்பதை தெளிவு படுத்துகிறது.

மேலும், தன் மீது அவதூறுகளை பரப்பிய ததஜவினர் நடத்திய நிகழ்ச்சியையே தடை செய்ய வாய்ப்பிருந்தும், தடை செய்யாமல் விட்டு விட்டவர், இம்தாதி அவர்களின் பயான்களை தடை செய்திருப்பாரா என்று சிந்திக்க வேண்டும்.

அடுத்து, இலங்கையைச் சேர்ந்த டாக்டர் நுபார் அவர்களை அன்று ஒதுக்கி வைத்து இன்று அவரின் பயானை தங்களது சென்டரில் நடத்துவது, என நாவு கூசாமல் பொய்களை அறங்கேற்றுகிறார்.

கடந்த காலங்களில் இப்றாஹிம் காஸிமி, ஷம்சுல்லுஹா, அபூபக்கர் சித்தீக் ரஷாதி, சுலைமான், ஸைபுல்லாஹ் காஜா மற்றும் பல அறிஞர்களின் பயானை தனது சென்டரில் நடத்தியிருக்கும் போது, ஸலபுகள் விஷயத்தில் பீஜேயின் தவறான நிலைப்பாட்டை சுட்டிக் காட்டி வரும், ஹதீஸ் கலை அறிஞர் ஷேக் அல்பானி அவர்களின் மாணவரும் கடந்த 50 ஆண்டுகளாக வரலாற்றை ஆய்வு செய்து வரும் டாக்டர் நுபார் பாருக் அவர்களின் பயானை நடத்தியதை மட்டும் குறை கூறுவது தக்லீதின் உச்சக்கட்டத்தையே காட்டுகிறது.

மேலும், இதற்கு முன் தமிழ் தஃவா கமிட்டியே டாக்டர் நுபார் அவர்களின் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. செனய்யா சென்டரிலும் அவர்களின் பயான் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அடுத்து, மெப்கோ அமைப்பை சரமாரியாக விமர்சித்து அவர்களை ஓரம் கட்டி இன்று அவர்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை பெருமையாக நினைப்பது, என்று பிதற்றியுள்ளார்.

பல வருடங்களாக மெக்கோ நிகழ்ச்சியில் அழைப்பிற்கிணங்க பல முறை முஜிபுர்ரஹ்மான் பயான் செய்திருக்கும் போது இதில் பெருமையடிக்க என்ன இருக்கிறது? மேலும், யாரிடம்? எது சம்பந்தமாக சரமாரியாக விமர்ச்சித்தார்? என்பதை நிரூபித்தால் அதைப் பற்றி விளக்க நாம் தயார். விளக்குவீர்களா காதர் பாய் அவர்களே!

அடுத்து, செனய்யா சென்டரில் பேசிய முஹம்மது நவ்பர் அவர்களின் பேச்சை பாராட்டும் நீங்கள், அவர் கமாலுத்தீன் மதனி, இக்பால் மதனி ஆகியோரின் தியாகங்களையும் உழைப்பையும் சேவையையும் கொச்சைப்படுத்திப் பேச யாருக்கும் எந்த அருகதையும் இல்லை என்றும் சொன்னதை மறைத்து விட்டு எழுதியது ஏன்? கமாலுத்தீன் மதனியையும் மற்ற ஜாக் தாயிகளையும் அசிங்கப்படுத்தி முன்பு வெளியிட்ட சிடியை மறு பதிப்பாக இன்று வெளியிடும் கூட்டத்தை சேர்ந்தவராக இருப்பதினாலா?

அடுத்து, இன்று பீஜேயின் மார்க்க ரீதியிலான ஆய்வுகளை குறை கூறித்திரியும் முஜிபுர்ரஹ்மான் ஏன் இன்னும் அவர்களோடு உட்கார்ந்து பேச தயங்குகிறார்? என்று ஒரு மெகா கேள்வியை கேட்கிறார்.

பீஜேயின் மார்க்க ரீதியிலான குறைகளை பல வருடங்களாக பல முறை பீஜேயிடம் உட்கார்ந்து பேசியிருக்கிறார், இதை பாக்கரும் ஒத்துக் கொண்டார். ஆனால் சென்ற முறை விடுமுறையில் சென்ற முஜிபுர்ரஹ்மானிடம் விவாதம் செய்ய அழைப்பு விடுத்து ஒரு நாடகத்தை அறங்கேற்றியவர்கள் ததஜவினரே. விவாத கடிதங்கள் போக்குவரத்தில் என்ன நடந்தது? என்பதை கடந்த மாதம் துறைமுகத்தில் நடந்த நூர் முஹம்மது பாகவி பயான் நிகழ்ச்சியில் தெளிவாக்கிய பின்பும் துறைமுகத்தை சேர்ந்தவர் என்று கூறிக் கொள்ளும் நீங்கள் கேள்வி எழுப்புவது உங்களின் கேவலமான எண்ணத்தை பிரதிபலிக்கிறது.

மேலும், பீஜே தமிழாக்கம் செய்த குர்ஆனில் உள்ள குளறுபடி சம்பந்தமாகவும் ஸஹாபாக்கள் விஷயத்தில் பீஜேயின் நிலை சம்பந்தமாகவும் கருத்துப் பரிமாற்றம் செய்ய சவூதி அரசாங்கத்தின் தலைமை முஃப்தி கடிதம் மூலம் விடுத்த அழைப்புக்கு பல மாதங்களாகியும் வருகை தராமல் இருப்பது ஏன்?

நபி தாவூது(அலை) அவர்களை பிறர் சொத்தை அபகரித்தவர் (நவூதுபில்லாஹ்) என்று தனது தர்ஜுமாவில் குறிப்பிட்ட பீஜேவை, இது சம்பந்தமாக விவாதம் செய்ய எப்போதும் தயார் என்று பகிரங்கமாக அழைத்த ஹாமித் பக்ரிக்கு பல மாதங்களாகியும் இது வரை மறுப்பு சொல்லாமல் மௌனமாக இருப்பது ஏன்? பதிலளிப்பீர்களா?

இன்னும், அல்லாஹ்வை நம்புதல், சொர்க்கம், நரகம் போன்ற மறைவான நம்பிக்கையில் சொந்த விளக்கம் கொடுத்து (ஆதாரம் – தர்ஜுமா விளக்க எண் : 177) வரலாற்றில் வழிகெட்ட கூட்டங்கள் என்று அறிவிக்கப்பட்ட காரிஜியாக்கள், கத்ரியாக்கள், முர்ஜியாக்கள், ஜஹ்மியாக்கள், முஃதஸிலாக்கள், போன்றவர்களின் கொள்கைகளுடன் ஒத்து இருப்பதும்,

உலகத்தில் பல அறிஞர்களின் கூற்றுக்கு மாற்றமாக, ஸஹீஹான பல ஹதீஸ்கள் குர்ஆனுக்கு மோதுகிறது என்று சொல்லி மறுப்பதும், இத்தகைய ஹதீஸ்கள் 50 என்று தனது தர்ஜூமாவில் முதல் மூன்று பதிப்புகளிலும் எழுதிவிட்டு 50ஐ எடுத்துக் காட்டுங்கள் என்று கேள்வி கேட்கப்பட்டவுடன், காட்ட முடியாமல் நான்காவது பதிப்பில் 50ஐ மட்டும் நீக்கி விட்டு எழுதியிருப்பதும்,

ஹஜ்ஜில் ஷைத்தானுக்கு கல் எறிவது சிரமமாக இருந்தால், அதற்கு பகரமாக சைகை செய்தால் போதும் (ஆதாரம் – ஏகத்துவம், பக்கம் 48,50. பிப்ரவரி 2006) என்று பித்அத்தான ஹஜ் முறையை அறிமுகப்படுத்துவதும்,

ஸஹாபாக்களை கிரிமினில் என்றும், அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்று அன்ஸாரித் தோழர்கள் நபி(ஸல்) அவர்கள் மரணத்திற்காக காத்து இருந்தார்கள் (ஆதாரம் – ஏகத்துவம் ஜகாத் சிறப்பிதழ், 72 கூட்டங்கள் உரை) என்று உளரியதும்

ஜிஹாத் விஷயத்தில் தவறான விளக்கம் கொடுத்து வருவதும், இன்னும் இது போன்ற பல மார்க்க விஷயங்களில் முரண்பாட்டின் மொத்த உருவமாகத் திகழ்வதுதான் ததஜவினரின் இன்றைய நிலை.

மேலும், உங்களைப் போன்றோர் தனி நபர் மீது கொண்டுள்ள பக்தியினால் சத்தியத்தை தெரிந்தும் அதை மறுத்து வருகின்றனர். அதற்காக நாம் பரிதாபப்படுகிறோம்.

நான் ஒரு நேரத்தில் பீஜே அவர்களை உயர்வாக மதித்தேன். எனது திருமணத்தில் கூட பீஜே அவர்களின் பயான் வைக்க வேண்டும் என்பதற்காக விடுமுறை குறைவாக இருந்தும் திருமண தேதியையே தள்ளி வைத்தேன். ஆனால் இன்று அவர் சமுதாயத்திற்கு தொடர்ந்து செய்து வரும் துரோகத்தினாலும் மார்க்க விஷயத்தில் அவரிடம் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளாலும் அவரை எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு சிந்தனையாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

இறுதியாக நான் கேட்பது இது தான், முஜிபுர்ரஹ்மான் இன்னும் பல முரண்பாடுகளை காணுவதாக கூறும் நீங்கள் அவற்றை தக்க சான்றுடன் அவரிடம் சமர்ப்பிக்க முடியுமா? மேலும், துறைமுகத்தில் உள்ள உங்களின் முகவரியை தெரிவித்தால் நாங்கள் நேரில் வந்து உங்களிடம் நட்பு ரீதியில் கருத்து பரிமாற்றம் செய்ய தயாராக இருக்கிறோம். இதற்கு உங்களிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறேன்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டிட துவா செய்கிறேன்.

இப்படிக்கு,

காரைக்கால் இ.அப்துல்மஜீத்,
ஜித்தா, செல் 0502679834
மின்னஞ்சல்: abuanas74@gmail.com

மே 25, 2006

இயக்கங்களோடு சிறைவாசிகளின் தொடர்பு

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 7:18 முப

*********************************************************************************

குறிப்பு : சுதந்திரமான வலைப்பதிவாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் சகோ. அன்சாரி அவர்களின் பேட்டி அப்படியே எந்தவித தணிக்கையும் இல்லாமல் வெளியிடப்படுகின்றது. இயக்கங்கள் மீதோ தனிப்பட்ட நபர்கள் மீதோ கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆசிரியர் எவ்வகையிலும் பொறுப்பாக மாட்டார்.
– முகவைத்தமிழன்.

*********************************************************************************

இயக்கங்களோடு சிறைவாசிகளுக்கு என்ன தொடர்பு?

சகோ. அன்சாரியின் பேட்டி (பாகம் 2)

முகவைத்தமிழன் : நமது சமுதாயத்தின் பெயரால் தமிழகத்தில் செயல்பட்டுக்கொன்டிருக்கும் பல முஸ்லிம் இயக்கங்களை பற்றி நீங்கள் அறிவீர்கள். அவற்றில் பெயர் சொல்லக்கூடிய அளவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழுகம், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத், இந்திய யுனியன் முஸ்லிம் லீக் , மனித நேய பாசறை (விடியல்) போன்ற சில இயக்கங்களும் உள்ளன. இவை யாவும் தங்களின் (சிறைவாசிகள்) விடுதலைக்காக போராட்டங்கள் நடத்துவதாகவும் மற்றும் சிறைவாசிகளின் வழக்குகளுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் ஆதரவளிப்பதாகவும், உள்நாடு மற்றும் முக்கியமாக வெளிநாட்டில் வாழும் நமது தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் சி.டி, வீடியோக்கள் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். ஏதோ ஒரு வகையில் சிறைவாசிகள் பெயரை தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்துகின்றார்கள் என்பது கண்கூடாக அறியக்கிடைக்கும் உண்மை. அந்தவகையில் உண்மையில் தங்களுக்கும் (சிறைவாசிகள்) இந்த இயக்கங்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து நம் சமுதாய மக்கள் யதார்த்த நிலை அறிய ஆவலாக உள்ளார்கள். இந்த பேட்டியின் மூலம் தங்களுக்கும் (சிறைவாசிகள்) இயக்கங்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும் இயக்கங்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் உண்மையில் என்ன உதவிகள் செய்துள்ளர்கள் என்பது குறித்தும் சற்று விளக்கமாக கூறுங்களேன்?

முஸ்லிம் லீக்கோடு என்ன தொடர்பு?

சகோ. முஹம்மது அன்சாரி: நன்றி முகவைத்தமிழன் அவர்களே, இது போன்ற கேள்விகளைத்தான் நாம் எதிர்பார்த்தோம் உண்மையில் எமக்கு உதவுவதாகவும், எமது விடுதலை குறித்து போராட்டங்கள் நடத்துவதாகவும், அராங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், எமது குடும்பங்களுக்கு உதவிக்கொன்டிருப்பதாகவும் பல இயக்கங்கள் தாங்கள் கூறியது போல் முக்கியமாக வெளிநாடுகளிள் வாழும் நமது சகோதரர்களிடம் பிரச்சாரம் செய்து வருவதாக எங்களுக்கும் தெறியவந்தது. ஆனால் இதுநாள் வரை இதுகுறித்த எமது நிலைமையை தெளிவுபடுத்தவும் நமது சமுதாயத்திடம் உண்மை நிலையை கூறவும் எமக்கு சரியான வாய்ப்புக்களோ அல்லது ஊடகங்களோ கிடைக்கவில்லை. அல்ஹம்துலில்லாஹ்.. அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும். இப்போது தங்களின் ஊடாக இச்செய்தி நமது சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் சென்றடையும் என்று நம்புகின்றோம். முதலில் நமது சமுதாயத்தின் பழம்பெரும் பேரியக்கமான இந்திய யுனியன் முஸ்லிம் லீக்கிலிருந்து ஆரம்பம் செய்வோம். வெளியே இருந்த காலங்களில் முஸ்லிம் லீக்கோடு பரஸ்பர தொடர்புகள் ஏதுமில்லை. நாங்கள் சிறைப்பட்ட பின்பு மனித நேயத்தோடு முஸ்லிம் லீக் செய்த உதவிகளை என்றும் எம்மால் மறந்திட இயலாது. பதவியில் இல்லாத சமயத்தில் தலைவர் காதர் மொய்தீன் அவர்கள் எங்கனிள் குடும்பங்களை தேடிவந்து ஆறுதல் கூறிய மாண்பினை இன்றும் நினைவு கூறுகிறோம். அரசியல்வாதிகள் தேர்தல் வெற்றிபெற ஆறுதல் கூறி அரசியல் செய்வார்கள். இப்படிப்பட்ட தரங்கெட்ட அரசியலிடமிருந்து வித்தியசமாக தெரிகிறார் தலைவர் காதர் மொய்தீன் அவர்கள். எம்.பி. ஆன பின்பும் கூட சி.டி.எம். அலுவலகம் வந்து குடும்பங்களை நலம் விசாரித்த மாண்பினை எண்ணி வியக்கிறோம். சமூக நலனில் கொண்ட நேசத்தால் அக்கரையோடு உளப்பூர்வமாக தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் செய்திட்ட உதவிகள் மகத்துவமிக்கது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செய்திட்ட உதவிகளை என்றும் மறந்திட இயலாது. துன்பப்படுகின்ற நேரத்தில்தான் உதவிகள் தேவை, அந்நேரத்தில் செய்யப்படும் உதவிகள் மிகவும் மகத்தானது, மதிப்பு வாய்ந்தவையாக என்றும் திகழும். லீக் செய்திட்ட அவ்வுதவிகள் – சிறைவாசிகளின் குடும்பங்களுக்காக தொழில் தொடங்க பணம் உதவி செய்துகொண்டுள்ளார்கள்.

எம்மை இழந்து தவிக்கும் எமது குடும்பத்தினரின் உதவிக்காக வேண்டி Bracier Factory (மார் கச்சை நிறுவனம்) ஒன்றை தமது சார்பில் இந்திய யுனியன் முஸ்லிம் லீக் அமைத்துகொடுத்தது அதன் மூலம் பெரும்பாலான சிறைவாசிகளின் குடும்ப பெண்கள் மானத்தோடு உழைத்து வாழ வழி செய்தது. இதனால் இன்று எமது குடும்பங்களும் குழந்தைகளும் பசியின்றி வாழமுடிகின்றது. இன்றும் தொய்வின்றி நடைபெற்று வருகிறது. சிறைபட்டவர்களின் குழந்தைகளின் கல்வி வறுமையினால் ஒரு போதும் தடைபெற்றிடக் கூடாது. இன்று எமது குழந்தைகளின் கல்விக்காக இந்திய யுனியன் முஸ்லிம் லீக்கும் தலைவர் காதர் முகைதீன் எம்.பி அவர்களும் தொடர்ந்து நிதி உதவி செய்து வருகின்றார்கள்.

அண்ணன் இலாஹி அவர்கள் மூலம் அமீரக முஸ்லிம்லீக்குடன் தொடர்பு ஏற்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக இவர்கள் மூலம் அமீரகத்திலிருந்து பல லட்சங்களாக கிடைத்திட்ட உதவிகள்தான் எங்களின் பெரும் தேவைகளை நிறைவு செய்தன. பல குடும்பங்களின் வறுமையை போக்க உதவிற்று. சட்டரீதியான போராட்டங்களை எதிர்கொள்ள உதவிற்று. பல கொலை வழக்கிலிருந்து சகோதரர்கள் விடுதலையாக உதவியதே இப்பணம் தான். கோவை குண்டு வெடிப்பு வழக்கிற்கு நல்ல திறமையாக வழக்கிறிஞர்கள் நியமித்திட இவ்வுதவிகளே பெரிதும் உதவின. எங்களின் நிலைகளில் மேம்பட செய்ததில் முஸ்லிம் லீக்கிற்கு கணிசமான பங்களிப்பு உண்டு.

மேலும் குண்டு வெடிப்பு கைதிகளை பற்றி யாரும் பேசிட முன்வராத காலத்திலேயே சமூக அரங்கில் முதன்முதலில் சிறைபட்டோருக்காக குரல் கொடுத்திட்ட பெருமை முஸ்லிம் லீக்கை சாரும்.

இவ்வாறு லட்சக்கணக்கில் முஸ்லிம் லீக்கின் மூலம் வந்த உதவிகளை ஒரு மேடை அமைத்து அந்த இயக்கத்தின் சார்பாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கினால் அதன் மூலம் தங்கள் இயக்கத்தின் சமுதாய ஊழியம் மக்களுக்கு தெறியவருமே என்றபோது தலைவர் காதர் முகைதீன் எம்.பி அவர்கள் இது பெருமைக்காகவோ அல்லது எங்கள் இயக்கத்தை வளர்ப்பதற்க்காகவோ செய்யவில்லை. மாறாக மறுமையில் அல்லாஹ்விடம் நற்கூலியைப்பெறுவதற்காக மட்டுமே இவ்வுதவிகளை நாங்கள் செய்கின்றோம் என்று கூறி எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்கள். தமக்கோ அல்லது தான் சார்ந்துள்ள இயக்கத்திற்கோ எந்த புகழையும் விரும்பாது மறுமையில் கிடைக்கும் நண்மையை மட்டும் கருத்தில் கொண்டு பல லட்சங்களிள் பாதிக்கப்பட்ட எமக்கும் எமது குடும்பத்தினருக்கும் உதவிகள் வழங்கி வரும் இந்திய யுனியன் முஸ்லிம் லீக் சகோதரர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் தகுந்த நற்கூலியை வழங்குவான்.

இங்ஙனம் பாதிக்கப்பட்டவரின் துயர் துடைத்திட துணை புரிந்திட்ட முஸ்லிம் லீக் – இஸ்லாம் கூறும் சகோதரத்துவத்திற்கு முன் உதாரணமாக திகழ்கின்றது.

த.மு.மு.க.வோடு என்ன தொடர்பு?
குண்டு வெடிப்பு நடப்பதற்கு 6 (ஆறு)மாதம் முன்புவரை த.மு.மு.க.வோடு நாங்கள் இணைந்தே இருந்தோம். சிறு சிறு அற்பக் காரணங்களால் த.மு.மு.க.வும் அல்உம்மாவும் பிரிந்துவிட்டன. இப்பிரிவு நாங்கள் சிறைப்பட்டதிலுருந்து கடந்த 7 (ஏழு) ஆண்டுகளாக த.மு.மு.க.வோடு எவ்வித ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்ற நிலைதான் அவர்களிடம் இருந்து எமக்கு எந்தவிதமான உதவியும் கடந்த 7 வருடங்களாக கிடைக்கவில்லை. மாறாக கடந்த ஒரு வருடமாகத்தான் த.மு.மு.க.வோடு நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆரம்பகாலங்களில் த.மு.மு.க., கே.கே.நகரைச் சார்ந்த 40 நபர்களுக்கு மட்டும் குரல் கொடுத்து வந்தார்கள் (அதாவது குன்டுவெடிப்பு நிகழ்ந்த சமயத்தில் இந்த 40 (நாற்பது)பேரும் த.மு.மு.க நிர்வாகிகளாக இருந்தவர்கள்) த.மு.மு.க வின் ஒட்டு மொத்த சிறைவாசிகளின் விடுதலை முழக்கம் கடந்த ஓரு வருடம் மட்டுமே.

எட்டாண்டுகளாக பொருளாதார ரீதியாக நாங்கள் அடைந்த துன்பங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. வழக்குகளின் சுமை ஒரு புறமும், குடும்பங்களில் நிலவும் வறுமை மற்றொரு புறமும் என அழுத்தங்கள் எங்களை திக்குமுக்காடச் செய்துவிட்டன. பலரும் கைவிட்ட நிலையில் செய்வதறியாது விழுந்த கல்லைப்Nபுhல நான்கு சுவர்களுக்கு மத்தில் ஜடமாக இருந்தோம். குடும்பங்களில் நிலவும் சொல்லொண்ணா வறுமைகளை இன்று முன்னணியில் செயல்படும் அமைப்புகள் நேரில் கண்டும் கூட உதவி செய்ய முன் வராததைக் கண்டு எங்களின் மனம் மிகவும் வருந்தமடைந்தது.

ஒரு முஃமினுக்கு பாதிப்பு, துன்பம் என வந்துவிட்டால் ஓடோடி வந்து உதவி செய்திடுவதுதான் மற்றொரு முஃமினுக்கு அழகு. கருத்து வேறுபாடுகளால் பிளவுபட்டுக் கிடந்தாலும் அதையெல்லாம் உதறி தள்ளிவிட்டு உதவிக்கரம் நீட்டுவதுதான் பண்பாடுமிக்கவர்களின் செயலாகும். இக்கட்டான நேரத்தில் செய்யக்கூடிய உதவிகள் அது மிகச்சிறியதாக இருந்தாலும் அது மறந்திடமுடியாத, மதிப்பிடமுடியாத உதவியாக என்றும் திகழும்.

எங்களின் வழக்கிற்கு உதவவில்லையென்றால் கூட நாங்கள் வருத்தமடைந்திருக்க மாட்டோம். ஆனால், நிராதரவற்ற குடும்பங்களின் நிலைகளை நேரில் கண்டும் உதவிட முன்
வரவில்லை நம் சமுதாய தலைமைகள்.

அண்ணன் இலாஹி அவர்களின் முயற்சியால்தான் த.மு.மு.க. அனைத்து ‘சிறைவாசிகளின் விடுதலை’ என்ற நிலைப்பாடை எடுத்தார்கள். த.மு.மு.க.வுக்கும் எங்களுக்கும் உள்ள உறவின் பாலமே அண்ணன் இலாஹி அவர்கள் தான். த.மு.மு.க. எடுத்திட்ட இந்நிலைபாட்டினால் எங்களுக்குள் இருந்த அத்தனை கருத்துவேறுபாடுகளையும் மறந்திட்டோம். கருத்துவேறுபாடுகள் நிலவிய சமயங்களில் கூட ஒரு போதும் அவர்களின் செயல்களை விமர்சிக்கும் போக்கை நாங்கள் கடைபிடிக்கவில்லை. இன்ஷா அல்லாஹ் வருங்காலத்திலும் இவ்வுறவு ஆரோக்கியமடைய ஆவன செய்திடுவோம். சமூக நலன் கருதி கடந்த கால கசப்புகள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்து தண்ணீர் ஊற்றி சாக்கடையில் சங்கமிக்க செய்திட்டோம்.

த.மு.மு.க. இதுவரை எங்களின் வழக்கிற்கோ, குடும்பத்திற்கோ கடந்த எட்டு வருட காலமாக பொருளாதார நிதியாக எவ்வுதவிகளும் செய்திடவில்லை. கடந்த ரமலானில் மட்டும் குடும்பங்களுக்கு கொடுத்திட பித்ரா பணம் ரூ.25,000 (இருபத்தி ஐந்தாயிரம் மட்டும்) கொடுத்துதவினார்கள்.


இந்த ஒருவருட கால உறவில், சிறைக்கொடுமைகளுக்கெதிராக பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தியதில் அல்லாஹ்வின் கிருபையால் நல்ல பல விளைவுகள் ஏற்பட்டன. முஸ்லிம் சிறைவாசிகள் ஒதுக்கப்பட்டவர்கள் அல்ல, சமுதாயத்தின் பின்பலம் சிறைப்பட்டோருக்குண்டு என அரசுகளுக்கு உணர்த்தினார்கள்.

அதன்பின் சமுதாயத்தின் உணர்வுகளை ஒன்றிணைத்து த.மு.மு.க. நடத்திய சிறைநிரப்பும் போராட்டம் மிக எழுச்சியாக இருந்தன. ஆளும் அரசுகளின் கவனம் சிறைவாசிகளின் மேல் படுமளவிற்கு இப்போராட்டம் வலுவாக இருந்தன. பெரிய பெரிய அரசியல் கட்சிகளே! சாதிக்க முடியா அளவிற்கு நம் சகோதர, சகோதரிகளின் கட்டுக்கடங்கா கூட்டம் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. த.மு.மு.க.நடத்திய இப்போராட்டம் களைத்துப்போன எங்களின் உள்ளங்களை நெகிழச் செய்தன.

மனித நேய பாசறையுடன் (விடியல்) என்ன தொடர்பு?

எமக்கும் எமது குடும்பத்தினருக்கும் நாம் அறியா வண்ணம் பற்பல உதவிகளை இவ்வியக்கம் செய்து வருகின்றது. எமக்கு சிறையில் தொல்லைகள் ஏற்படும் போதெல்லாம் இவ்வியக்க சகோதரர்கள் அரசிற்கும் உயரதிகாரிகளுக்கும் பல வகைகளிள் விண்ணப்பித்து அவற்றை நிவர்த்தி செய்துள்ளார்கள். இவ்வியக்கத்தின் தலைவர் அண்ணன் குலாம் முகம்மது அவர்கள் பல முறை எமது விடுதலைக்காகவும் எமது குடும்ப நலனுக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்குகளிலும் போராட்டங்களிலும் கலந்துக் கொண்டு எமக்காக குரல் கொடுத்துள்ளார்கள். தமது ஊடகம் வாயிலாக எமக்காக இன்றும் குரல் கொடுத்து வருகின்றார்கள் இவர்கள் பலர் அறிய செய்த உதவிகளை விட, யாரும் அறியா வகையில் இன்றும் எமக்கும் எமது குடும்பத்தினருக்கும் செய்து வரும் உதவிகள் அளப்பறியாதவை. இவர்களின் சகோதரத்துவ உதவிகள் பாராட்ட தகுந்தவை.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துடன் என்ன தொடர்பு?

தவ்ஹீத் ஜமாத் இதுவரை எங்களின் விடுதலைக்காக எதுவுமே செய்யவில்லை. சமுதாய மக்களின் துளைத்தெடுக்கும் கேள்விகளால் ஒரே தடவை தீர்மானம் நிறைவேற்றியதோடு சரி. முஸ்லிம் லீக், த.மு.மு.க., ஜமாஅத்தே இஸ்லாமி, மில்லி கவுன்சில், எம்.என்.பி. போன்ற அமைப்புகளுக்கு பரஸ்பர தொடர்புகள் எங்களுக்குள் இருந்தன. இத்தொடர்புகள் சிறைபட்டோரின் விடுதலைக்குண்டாண போராட்டங்களுக்காகவோ அல்லது நலன்களுக்காகவோ இருந்தன. ஆனால் தவ்ஹீத் ஜமாத்தோடு எங்களுக்கு எவ்வித தொடர்புகள் இன்றுவரை இல்லை என்பதை புரிந்து கொள்ளவும்.

ஆரம்பித்து சில ஆன்டுகளே ஆன இயக்கமாக இருந்தாலும் இவர்கள் கடந்த ஆட்சியில் தங்களிக்கிருந்த செல்வாக்கினை வைத்தும் தங்களது இயக்க வலிமையை வைத்தும் எமக்கு எத்தனையோ வழிகளிள் உதவியிருக்கலாம். ஆனால் யதார்த்தம் இவர்கள் எங்கள் (சிறைவாசிகள்) விஷயத்தில் பின்வாங்கி மெத்தனப்போக்கையே கடைபிடித்து வருகின்றார்கள்.

தமிழகத்தின் மற்ற இயக்கங்களுடன் என்ன தொடர்பு?
எங்களின் சிறைவாழ்வு எட்டாண்டுகளுக்கு மேலாகிவிட்டன மேலே குறிப்பிட்ட அமைப்புக்கள் அல்லாது மில்லி கவுன்சில், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புகள் மற்ற பல திராவிட மனித நேய அமைப்புக்களும் தங்களின் பங்களிப்பாக உதவிகள் செய்துள்ளார்கள். உதவிகள் சிறிதாக இருந்தாலும் நிராதரவற்ற நிலையில் செய்திட்ட அவ்வுதவியினை மதிப்பு வாய்ந்ததாகவே கருதுகிறோம், அல்லாது எங்களின் விடுதலைக்காக பல முஸ்லிம் அமைப்புகளும், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அரசியல் அமைப்புகளும் மற்றும் பல மனித உரிமை அமைப்புக்களும் குரல் கொடுத்துவருகிறார்கள். சிறைபட்டதிலிருந்து ஓரிரு வருடங்களுக்குள் குரல்கொடுக்க தொடங்கி இருந்தால் என்றோ ஒரு முடிவு தெரிந்திருக்கும். அல்லாஹ் போதுமானவன்.

வழக்குகள் விசாரணை முடிவடைந்து இறுதிகட்டத்தில் இருக்கும் இந்நிலையில் பல போராட்டங்கள் வெடிக்கின்றன. காலங்கடந்த போராட்டமாக இருக்கின்றன. இருந்தபோதிலும் தற்போதாவது இப்போராட்டங்கள் நடக்கின்றதைக் கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

இறைவன் நாடினால் தொடரும்….
முந்தைய பதிவான புதிய அரசுக்கு சிறைவாசிகள் கோரிக்கை என்ன? என்ற பகுதி படிக்க இங்கு சொடுக்கவும்.

மே 24, 2006

எதற்கு வெல்லோட்டம் பார்க்கிறார் பி.ஜெ?

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 11:06 முப

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தமிழ்நாட்டில் தேர்தல் நல்லவிதம் நடந்து முடிந்து அரசும் பதவி ஏற்று, முஸ்லிம் சமுதாயத்திற்கு நல்ல பிரதிநிதித்துவத்தையும் (2-அமைச்சர்கள்) தந்து, முஸ்லிம் சமுதாயத்தை ஆறுதலடையச் செய்து இருக்கிறார் கலைஞர்.

இவற்றால் மட்டும் முஸ்லிம் சமுதாயத்தினரிடம் தான் இழந்த நம்பிக்கைகளைப் பெற்றுவிடமுடியாது என்பது கலைஞருக்கு நன்றாகத் தெறியும். அதுமட்டுமல்ல, முஸ்லிம் சமுதாயத்தின் இலக்கு தனி இட ஒதுக்கீடு, அதைப்பெற்றுத் தருவதால் மட்டுமே ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் நம்பிக்கையைப் பெற முடியும் என்ற உண்மையை கலைஞர் உணர்ந்துள்ளார். அதைப்பெற்றுத் தருவதில் IUML மற்றும் TMMK நிர்வாகிகள் பகீரத முயற்சி செய்து பெற்றுத் தரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இல்லாவிடால் இவர்கள் அரசியல் அகதிகளாக ஆக்கப் படுவார்கள். காரணம், இவர்களுடைய எதிரிகள் மிகவும் சக்திவாய்ந்த ஊடகத்திற்குச் சொந்தகாரர்கள். பொய்சொல்வதற்கு அஞ்சாதவர்கள், அதுமட்டுமல்ல, சினிமா நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் போல் இவர்களிடமும் இருக்கிறார்கள்.

தேர்தல் முடிந்து விட்டது AIADMK எதிர்கட்சியாகவும், DMK ஆளும் கட்சியாகவும் செயல்படுகிறார்கள். சுருங்கச் சொன்னால் AIADMK கூட்டணி தோற்று DMK கூட்டணி வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

இதில் வேடிககை என்னவென்றால் ஜெயலலிதா, வைக்கோ, திருமாவளவன் போன்றவர்கள் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு தன் கட்சியினர் பொறுமை காத்து கட்சிப்பணியாற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டு அமைதி காத்துவிட்டனர். ஆனால், ஜெய்னுலாப்தீன் & கொம்பெனியார்கள் தோல்வியை வெற்றியாக சித்தரிக்க எந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போகமுடியுமோ அந்தஅளவிற்கு பேசியும், எழுதியும் வருகிறார்கள்.

போகட்டும்!, இவர்கள் இயக்கம் உண்மையிலேயே தமிழ் முஸ்லிம் சமுதாயத்தின் நன்மைக்காக செயல்படும் ஒரு இயக்கம் என்று கருதினால், இவர்களின் அனுகுமுறை தற்போது எப்படி இருந்திருக்க வேண்டும்? அதற்கான சூழலை ஏற்படுத்த முயற்சி செய்தார்களா? செய்வார்களா?

இல்லா விட்டால் அப்பாவி ரசிகர்களைப் பயன்டுத்தி, மற்றும் ஒரு கோவை போன்ற பிரச்னையை உருவாக்கத் திட்டம் தீட்டி, அதை செயல் படுத்தி, அப்பாவி ரசிகர்களை சிறைச்சாலைகளுக்கு அனுப்பி, குழப்பத்தை ஏற்படுத்தி, அதன்மூலம் பண வசூல் செய்து, எப்படியும் 5 வருட காலத்தை ஓட்டி விடலாம் என்று நினைத்தால் அது தற்கொலைக்கு ஒப்பானதாகும். அதனால்தான் என்னவோ தேர்தலுக்குப் பிறகு ஜெய்னுலாப்தீன் அடிக்கடி என்னை கைது செய்யுங்கள்!, கைது செய்து பார்! என்று பேசிவருகிறார். எதை மனதில் நினைத்துக் கொண்டு இப்படி பேசுகிறார் என்பது நம்மை படைத்தவனுக்குத்தான் தெறியும்.

இஸ்லாத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் மிகப்பெரிய சேவையை செய்துவிட்டதாக பிதற்றிக் கொண்டு திறியும் இக்கூட்டம் உண்மையில் என்னதான் செய்தார்கள் என்பதை பாருங்கள்.

இஸ்லாமிய அடிப்படை கடமை எனும் தூணாகிய ஜகாத்தை மறுப்பது.
ஸஹாபாக்களை கேவலமாக விமர்சித்தது.

  • நபி (ஸல்) அவர்களால் சொர்க்கத்தை குறித்து நன்மாராயம் சொல்லப்பட்ட உத்தம ஸஹாபி அம்ர் பின் அல்ஆஸ்(ரலி) அவர்களை கிரிமினல் என்றது.
  • முஹம்மது பின் அபூபக்கர் (ரலி) அவர்களை ரவுடி என்றது.
  • அன்ஸாரி தோழர்களை (ரலி-அன்ஹும்) பணத்தாசை, பதவி ஆசை பிடித்தவர்கள் என்றது.
  • நபியின் பேரர் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களை பதவி ஆசை பிடித்தவர் என்றது.
  • இஸ்லாமிய குடியரசின் இரண்டாம் கலீஃபாவாகிய உமர் பின் அல் கத்தாப் (ரலி) அவர்தான் முதன் முதலில் பித்னாவை ஆரம்பித்து வைத்தவர் என்றது.
  • நான்காம் கலீஃபாவாகிய அலி பின் அபீதாலிப் (ரலி) அவர்களை எடுப்பார் கைப்பிள்ளை என்றது.
  • இப்படியாக, இதற்கும் மேலாக உத்தம சத்திய ஸஹாபாக்களை – எதிரிகளும் சொல்ல கூசும் வார்த்தைகளால் விமர்சனம் செய்வது.
    • நபித்தோழர்கள் மார்க்கத்தை மாற்றிவிட்டார்கள் என்று கூறியது. அல்லாஹ் முதல் வானத்தில் இறங்குகின்றான் என்ற ஹதீஸைப் பொருள் மாற்றிக் கூறியது.
    • சூனியம் பற்றிய ஹதீஸை மறுத்து புதிய விளக்கம் அளித்தது.
    • திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பில் புதிய கருத்துக்களைக் கூறியது. பொருளை மாற்றியது.
    • ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக இருந்தாலும் அறிவுக்குப் பொருந்தவில்லையெனில் புறம் தள்ளவேண்டும் என்றது
    • செல்வங்களுக்கான ஸக்காத் ஒருமுறை மட்டும் கொடுத்தால் போதும் என்று வாதிட்டது.
    • ஆண்கள் அரைக்கால் டிரவ்ஷரில் தொழலாம் என்று பத்வா வழங்கியது.
    • அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் என்னவென்றால், நபிகள் (ஸல்) அவர்களுக்கு அடுத்து, குர்ஆனின் அர்த்தங்களை தான் விளங்கி தெளிவு பெற்ற அளவிற்கு யாரும் ஏன் ஸஹாபாக்கள் கூட தெளிவு பெறவில்லை என்ற தொனியில் பேசுவது.
    • ஸஹாபா பெருமக்களை தன் வயதுக்கு ஒத்தவர்கள் போலவும், சக மாணவர்களாகவும் பாவித்து, அவர்களின் அறிவுக்கும், ஆற்றலுக்கும் தான் எந்த விதத்திலும் குறைந்தவனில்லை என்ற தொனியில் அவர் பேச்சும் செயலும் இருக்கும்.

ஜெய்னுலாப்தீன் ஏதோ ஒரு இலக்கை அடையத்தான் தன்னை மற்ற மார்க்க அறிஞர் பெருமக்கள், உலமா பெருந்தகைகள், மார்க்க சிந்தனையாளர்கள், இறைநேசச் செல்வர்கள், ஆகிய அனைத்து பெருமக்களையும் விட, தான்தான் அறிவிலும், ஆற்றலிலும், மார்க்கத்திற்கு சேவை செய்ததிலும் சிறந்தவன் என்றும்.

உத்தம ஸஹாபா பெருமக்கள், தாபியீன்கள், தபஅத்-தாபியீன்கள் போன்றவர்களின்
தரத்திற்கு சமமாக/மேலாக தானும் இருப்பதாகவும் காட்டிக்கொள்வது.

சில வாரங்களுக்கு முன்பாக, இந்த குழுமத்தில் (UIM)
மின்னஞ்சல்
மூலமாக, ஒரு சகோதரர் “இவர் யார்”? என்ற தலைப்பில், ஒரு புதினத்தை பதிவு செய்திருந்தார். அதில் சித்தரிக்கப்படிருந்த பெரும்பாலான செய்கைகள், நம்மை படைத்த ரப்புல் ஆலமீன் கிருபையாலும், உத்தம ஸஹாபாக்களின் தியாகத்தோடும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் சாதிக்கப்பட்டவைகள். “இவர் யார்” என்ற புதினத்தை; அடுத்து யார் மீதோ கைவைக்க, வெல்லோட்டம் பார்க்க அனுப்பப்பட்டவைதான் இது என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளர்கள். பொறுத்திருந்து தான் பார்ப்போமே?.

வஸ்ஸலாம்

அ. சஜருதீன் (projects@umgco.com)

குறிப்பு:
மிர்ஸா குலாமும்
இது போலதான்
திருமறை வசனத்தின் அர்த்தங்களைத்திரித்து, தனக்கு சாதகமாகப் பாவித்துக் கொண்டதும், ஹதீஸுகளையும் இதனைத் திரட்டித் தர அரும்பாடுபட்ட சத்திய ஸஹாபாக்களின் நம்பகத்தன்மையை சந்தேகித்தும், தன் வாதத்திறமையால் இஸ்லாமிய சமுதாயத்தை குழப்பியும் உச்சக்கட்டமாக தன்னைதானே நபி என்று பிதற்றிக் கொண்டு கேவலப்பட்டு திரிந்த வரலாற்றை இஸ்லாமிய சமுதாயம் மறந்து விடவில்லை

மே 22, 2006

புதிய அரசுக்கு சிறைவாசிகள் கோரிக்கை

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 3:26 பிப

புதிய அரசுக்கு சிறைவாசிகள் கோரிக்கை என்ன?
*********************************************************************************
குறிப்பு : சுதந்திரமான வலைப்பதிவாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் சகோ. அன்சாரி அவர்களின் பேட்டி அப்படியே எந்தவித தணிக்கையும் இல்லாமல் வெளியிடப்படுகின்றது. இயக்கங்கள் மீதோ தனிப்பட்ட நபர்கள் மீதோ கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆசிரியர் எவ்வகையிலும் பொறுப்பாக மாட்டார்.
– முகவைத்தமிழன்.
*********************************************************************************
அஸ்ஸலாமு அலைக்கும், (வரஹ்..)
முகவைத்தமிழன் : சிறைவாசிகள் சார்பில் எமக்கு பேட்டியளிக்க சம்மதித்தமைக்கு முதலில் எமது நன்றியை உங்களுக்கு தெறிவித்துக்கொள்கின்றோம், நேரடியாக கேள்விக்கு சென்று விடலாம் என்று நினைக்கின்றேன், நமது சமுதாய இயக்கங்கள் பல்வேறு பகுதிகளாக பிரிந்து நின்று பலதரப்பட்ட கட்சிகளை இத்தேர்தலில் ஆதரித்து பிரச்சாரம் செய்தன இப்போது தேர்தல் முடிந்து விட்டது காட்சிகள் மாறி விட்டன புதிய அரசு பதவியேற்றுள்ளது, இப்போது ஆட்சியை கைப்பற்றியுள்ள கட்சியும் கூட நமது சமுதாய இயக்கங்களான த.மு.மு.க மற்றும் முஸ்லிம் லீக் ஆதரவுடன் தான் இத்தேர்தலில் வெற்றிபெற்று ஆடசியமைத்துள்ளது. இவர்களின் முஸ்லிம்களுக்கு வழங்கிய முக்கிய வாக்குறுதிகளாக ‘சிறைவாசிகளின் விடுதலையும்’ ‘முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடும்’ இடம்பெற்றிருந்தன. தற்போது இவர்கள் ஆட்சியமைத்துள்ளார்கள் தங்களின் (சிறைவாசிகளின்) விடுதலையை வாக்குறிதியாக அளித்து முஸ்லிம்களின் ஓட்டை பெற்று ஆட்சியமைத்துள்ள இந்த புதிய அரசுக்கு சிறைவாசிகளான நீங்கள் வைக்கும் கோரிக்கைகள் என்ன?

சகோ. முஹம்மது அன்சாரி : வஅலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்)
அன்புள்ள முகவை தமிழன் அவர்களே நீங்கள் இப்படி ஒரு கேள்வியை எங்கள் முன் வைத்ததற்கு நன்றி! இதை நீங்கள் ஆட்சியாளர்களின் செவிகளுக்கும் நமது முஸ்லிம்களின் பார்வைக்கும் முக்கியமாக கொண்டு செல்லவேண்டும் கடல் கடந்து வாழும் நமது சகோதரர்கள் முக்கியமாக எமது நிலை குறித்து அறியவேண்டியவர்களாக உள்ளார்கள். இச்செயதியை தாங்கள் நமது இஸ்லாமிய ஊடகங்கள் மூலம் உலகின் கவனத்திற்கு எடுத்துச்செல்வீர்கள் என்று நம்புகின்றோம்.

எங்களின் முதல் கோரிக்கை தமிழக சிறைகளிலுள்ள முஸ்லிம் சிறைவாசிகள் அனைவரையும் ஜாமீனில் விட வேண்டும். புதிய அரசு இக்கோரிக்கையை நிறைவேற்றிட வேண்டும் என எதிர்ப்பார்க்கிறோம். தி.மு.க. ஆட்சியில்தான் அனைவரும் கைது செய்யபட்டோம். குண்டு வைத்தவர்கள், சம்மந்தமில்லா அப்பாவிகள் என அனைவரையும் வாரி வழித்து சிறையிலடைத்த மாபெரும் தவறினை செய்திட்ட தி.மு.க. அரசு காலதாமதமின்றி உடனடியாக அனைவரையும் பிணையில் விடவேண்டும் என்பதுதான் எங்களது முதல் கோரிக்கையாகும். குண்டு வைத்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யத்தான் வேண்டும். எந்த அரசாக இருந்தாலும் கைது செய்துதான் தீரும். ஆனாலும் அதற்கும் சில எல்லைகள் உண்டு, கைது செய்து நீண்ட நெடிய நாட்களாக சிறையிலே முடக்கிவைப்பது மனித உரிமை மீறலின் உச்சக்கட்டமாகும்.

ஐ.பி.சி. சட்டத்தில்தான் கைது செய்யப்பட்டுள்ளோம். தடா, பொடா போன்ற தீவிரவாத சட்டங்களில் கைது செய்யப்படாமல் சாதாரண ஐ.பி.சி. சட்டத்திலேயே எட்டாண்டுகளாக ஜாமீன் தராமல் வைத்திருப்பது மாபெரும் மனித உரிமை மீறலாகும். தடா சட்டத்தில் கைது செய்யப்பட்ட மும்பை குண்டு வெடிப்பு வழக்கின் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு மூன்று ஆண்டுகளில் ஜாமீன் வழங்கப்பட்டன. தடா சட்டத்தால் கைது செய்யப்பட்டவர்களுக்கே ஜாமீன் கிடைத்தது என்கின்ற போது, ஏன் ஐ.பி.சி. சட்டத்தில் கைது செய்யப்பட்ட எங்களை விடுவிக்கக்கூடாது? என்பதே எங்களின் நியாயமான வினாவாகும்.

முஸ்லிம் லீக், த.மு.மு.க. போன்ற அமைப்புகளும் சிறைவாசிகளின் விடுதலையை அரசுக்கு கூறிவருகிறது. அதிகபட்சமாக மூன்று மாதத்திற்குள் இவ்வரசு நல்லதொரு முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம். தமிழக முஸ்லிம்கள் மத்தியில் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள சிறைவாசிகளின் பிரச்சனையை அரசு விரைவாக ஒரு முடிவுக்கு கொண்டு வந்திடவேண்டும்.

இவ்வரசுக்கு வைத்திடும் இன்னொரு கோரிக்கை என்னவெனில்., சங்பரிவார் அமைப்புகளின் வரம்பு மீறிய செயல்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திடவேண்டும். தமிழ்நாட்டில் நடந்திட்ட இத்தனை அவலங்களுக்கும் இவர்களே காரண கர்த்தாக்களாவர். நாகரிகம் தெரியாத காட்டுமிராண்டிக் கூட்டங்கள் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் நரகல் நடையில் விமர்சித்து பேசுவதை இனி ஒரு போதும் இவ்விதமாக விட்டுவிடக்கூடாது. இரும்புக்கரம் கொண்டு அடக்கிடவேண்டும். கடந்த தி.மு.க. ஆட்சியிலும் அதற்கு முந்தைய ஜெ. ஆட்சியிலும் நாகரிகம் தெரியா இச்சங்பரிவார்கள் தங்கள் மேடைகளில் 150 கோடி முஸ்லிம்கள் தங்கள் உயிரைவிட மேலாக மதிக்கும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அவர்தம் மனைவியரையும் நா-கூசும் வகையில் விமர்சித்து பேசி வந்தார்கள். முஸ்லிம்களின் மனதை புண்படச் செய்யக்கூடிய நாகரிகமற்ற இப்பேச்சுகளை, முஸ்லிம்களிடமிருந்து எதிர்ப்புக் குரல் ஒலித்தும் கூட அப்போதைய அரசுகள் இப்பேச்சுகளை தடை செய்யவோ, தண்டித்திடவோ முன்வரவில்லை. கீழ்த்தரமான இப்பேச்சினால் சீற்றம் கொண்ட முஸ்லிம் இளைஞர்கள் ஓர் அணியாவதும், வெகுண்டெழுவதும் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டன என்பது இப்புதிய அரசுக்கு நன்றாக தெரியும். 1998 – பிப்ரவரி 14 நடந்திட்ட குண்டு வெடிப்பிற்கு பிறகுதான் வக்கிரமான பேச்சுகள் அனைத்திற்கும் ஒரு முடிவு வந்தது. மேடைகளில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விமர்சிப்பதும் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டன. கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என பழமொழி சொல்வார்களே அந்தக் கதையானது.

செல்வாக்கு இழந்துவரும் சங்பரிவார் மீண்டும் தன் இமேஜை நிலைநிறுத்த மக்களிடையே துவேஷ மனப்பான்மை ஏற்படுத்தி உண்டாக்கிட இந்த ஈனத்தனமான பேச்சுகளை மீண்டும் அரங்கேற்றும், அதிலும் மிக முக்கியமாக தி.மு.க. ஆட்சியில் நிச்சயம் இதை செய்யும். இதை நுனியிலேயே கிள்ளியெறிந்திட அரசு தயாராகிட வேண்டும். மீண்டும் மெத்தனப்போக்கை கையாளும் நிலை இருந்திடக் கூடாது என்பதே முக்கியமான இன்னொரு கோரிக்கையாகும்.

இயக்கத்தலைமைகளிடம் சிறைவாசிகளும் அவர்தம் குடும்பங்களும் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

முகவைத்தமிழன் : மிக அற்புதமான முறையில் தெளிவாக தங்களின் முக்கிய கோரிக்கைகளை இந்த அசுக்கு வைத்துள்ளீர்கள். இன்ஷா அல்லாஹ், தங்களின் இந்த கோரிக்கை அரசுக்கு எடுத்துச்செல்லப்படும் என்று நம்புகின்றோம், அடுத்தபடியாக சமுதாயத்திற்காக போராடுவோம் என்ற உறுதிமொழியுடன் தமிழகத்தில் பல முஸ்லிம் இயக்கங்கள் செயல்படுகின்றன. அவற்றில் சில தங்களின் சிறைவாசத்திற்கு பிறகு தோன்றியவை. அத்தகைய இயக்கங்களிடமிருந்து தாங்களும் (சிறைவாசிகள்) தங்களின் குடும்பத்தாரும் என்ன எதிர்பார்க்கின்றீர்கள்?

சகோ. முஹம்மது அன்சாரி : நல்ல ஒரு கேள்வி இதை நாம் மிக நீண்ட காலமாக நாம் சிறைப்பட்ட காலத்தில் இருந்தே உரைத்து வருகின்றோம். மீண்டும் ஒருமுறை தங்களின் மூலம் நமது சமுதாய இயக்கங்களின் கவனத்திற்கு வைக்கின்றோம். நமது சமுதாய இயக்கங்களில் இருந்து நாம் எதிர் பார்ப்பது என்னவென்றால், தங்கள் மகன், சகோதரர் இல்லது கணவன் என சிறைபட்டவர்கள் எப்படியாவது வெளியே வந்திடவேண்டும். குடும்பங்களின் முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கின்றன. எட்டாண்டுகளாக வாட்டும் வறுமைக்கு ஒரே தீர்வு தங்கள் குடும்பத்தார்கள் விமுதலையாவதுதான் என ஒவ்வொருவரின் விடுதலையை குடும்பங்கள் மிக, மிக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்…… இதை மட்டும் இயக்கங்களின் தலைமைகள் அரசுக்கு வலியுறுத்திட வேண்டும் என குடும்பங்களின் எதிர்பார்ப்பாகும்.

சமுதாய நலன் கருதி சிறைபட்ட எங்களுக்கு இயக்கத்தலைமைகளிடம் நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒற்றுமை ஒன்றே! அல்லாஹ்வை ரப்பாக ஏற்றுக் கொண்ட இச்சமுதாயம் வலிமையும், உயர்வும் அடைந்திட வேண்டும் என தணியாத தாகமுண்டு எங்களுக்கு. ஆகவே, ஒவ்வொரு நேரமும் சமூகத்தின் அன்றாட நடப்புகளை அசை போட்டுக் கொண்டுதானிருக்கும்.

சிறைவாசிகளின் விடுதலையில் ‘தவ்ஹீத் ஜமாத்’ தவிர மற்ற அனைத்து தலைமைகளுக்கும் கூடுதலாகவோ, குறைவாகவோ ஆர்வங்கள் உண்டு. தங்களின் சக்திக்கேற்ப மேடைகளில் பேசியும் போராடியும் வருகிறார்கள். காலதாமதமான போராட்டங்களாக இருந்தாலும் பயன் உள்ளதாகவே கருதுகிறோம்.

ஒரு தலைமையின் கீழ் இயங்கிட வேண்டிய முஸ்லிம்கள் பல இயக்கங்களாக பிரிவினை பேதம் பேசி வருவது நம் துரதிர்ஷ்டமாகும். ஒற்றுமையில் தான் உம்மத்தின் முன்னேற்றமாகும். அல்லாஹ்வின் ஆசியும் உண்டு என்பதை உணர்ந்தும் ஈகோயிஸத்தால் பிரிந்திருக்கும் இயக்கங்களை தலைமைகள் தன்னலம் கருதாமல் ஒற்றுமைக்கு வழி வகுக்க வேண்டும். ஒரு இயக்கத்தில் ஒரு தலைமையின் கீழ் அனைவரும் ஒன்றாக இயங்குவது என்பது இயலாத செயலாகும். ஆனால் குறைந்த பட்சம் அனைவரும் பொதுப் பிரச்சனைக்களுக்காக குரல் கொடுத்திட்டால் நம் வலிமையை ஆளும் அரசுகள் உணரும். நம் கோரிக்கையும் நிறைவேறும். முஸ்லிம்களின் இதயத்துடிப்பு போன்ற பிரச்சனையான ‘பாபர் மசூதி’ பிரச்சனையிலும் கூட இயக்கங்கள் ஒன்றிணைந்து ஒரு முடிவெடுத்து செயல்பட்டிடலாம். ஆனால் தங்களின் தனி முத்திரை பதித்திட வேண்டும் என்பதற்காக ஆளுக்கொரு முடிவெடுத்து உம்மத்தை குழப்புவது வேதனையாக உள்ளது. பொதுப்பிரச்சனையில் ஒன்று கூடி என்ன செய்யலாம் என ஆலோசிக்கக்கூடிய ஓர் ஆரோக்கியமான நிலை ஏற்பாட்டால் எத்துணை பயனாக இருக்கும் சுபஹானல்லாஹ்! நினைத்தாலே இனிக்கிறது செயல்படுத்திட முன் வந்திட்டால் மாஷா அல்லாஹ்!!

எங்களின் விடுதலைக்காக போராடுவதிலும் அனைத்து இயக்கங்களும் கூட்டாக வலிமை காட்டியிருந்தால் என்றோ அரசு ஓர் முடிவுக்கு வந்திருக்கும். த.மு.மு.க. நடத்திய சிறை நிரப்பும் போராட்டம் குறை கூறிட முடியாது.

இருந்தபோதிலும் ஒன்றிணைந்து செயல்பட்டிருந்தால் மாபெரும் மக்கள் போராட்டமாகியிருக்கும் சிறை பிரச்சனை.

இயக்கமோதல்கள் தலைதூக்கியுள்ள தமிழகத்தில் ஒருவருக்கொருவர் வசைமாறிக் கொள்கிறார்கள். தங்களின் இயக்க பத்திரிக்கைகளை புரட்டினால் ஒவ்வொருவரையும் பட்டப்பெயர்களால் அழைத்துக்கொள்கிறார்கள். ஜவாஹிருல்லாஹ் அவர்களை பூசணிக்காய் என தவ்ஹித் ஜமாத்தும், பி.ஜே. அவர்களை தொண்டியபொடி – த.மு.மு.க. என இரு இயக்கத்தவர்களும் இஸ்லாத்தின் நெறிகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு பட்டப் பெயர்களால் அழைத்திடும் செயலை என்னவென்பது! உள்ளத்தில் குடிகொண்டுள்ள குரோதத்தினால் வல்லான் அல்லாஹ்வின் எச்சரிக்கையையும் மீறி இங்ஙனம் அழைத்துக்கொள்வது ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்துமா?

பி.ஜே. அவர்கள் பிரச்சனையின் தலைவராக இருக்கிறார். சமாதானம் செய்திட வேண்டிய சிறு பிரச்சனைகளையெல்லாம் பெரிதாக்குகிறார். தலைமைக்குரிய விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என்ற பண்பில்லாமல் தடுக்கி விழும் பிரச்சனைகளையெல்லாம் சமுதாய பிரச்சனையாக ஆக்குகிறார். தொழுகை நடத்தக்கூடிய அல்லாஹ்வின் பள்ளியை அபகரிக்க குஃப்ரியத்தின் துணை நாடுகிறார். தாங்கள் தொழவில்லை என்றால் யாருமே தொழுதிடக்கூடாது என குஃப்ரியத்தின் துணையை நாடி அல்லாஹ்வின் இல்லத்தை பூட்டச் செய்திட்ட பி.ஜே. அவர்களின் நல்லெண்ணத்தை என்னவென்பது. இதே செயலை காஃபிர் ஒருவன் செய்திருந்தால் நாட்டில் பெரிய கலவரமே உருவாகியிருக்கும். நாமே நம் பல்லை குத்தி பதம் பார்த்துக்கொள்கிறோம்.

சமூகத்தின் அவலங்களை அகற்றிடவும் ஆக்கப் பூர்வமாக செயலாற்றிடவும் தான் இயக்கங்கள். ஆனால் இயக்கச் சண்டைகளில் ஆக்கங்கள் தடைபட்டு அழிவுப்பாதைக்கு வழிவகுத்தது போலாகிவிடும். முன்னேற்றம் எங்கே உண்டாகும் பின்னேற்றம்தான்.

பொருளாதாரத்திலும், கல்வியிலும் நம் சமுதாயம் மேம்பாடு அடைவதற்கு ஒவ்வொரு இயக்கத்தினரும் அயராது உழைத்திடவேண்டும். ஆனால் இந்தியாவிலுள்ள முஸ்லிம்களின் நிலை இவ்விரு விஷயங்களில் மிகவும் தாழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டு கேவலமாக வாழும் நிலைக்கு முதற்காரணம் ஒற்றுமையின்மையே. சங்பரிவார்களுக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், முஸ்லிம்களை பூண்டோடு ஒழிப்பதில் ஒற்றுமையாக செயல்படுகிறார்கள். பல கடவுள்களை வணங்கி பல வழிமுறைகளின்படி வாழும் இம்முஷ்ரிக்குகள் நம்மை வேரறுக்க ஒன்றுபடும் இந்நிலை இன்று, நேற்றல்ல, 1400 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. வரலாற்றின் ஒளியில் அறிவை பெற்றிடாத முஸ்லிம்கள் இன்னும் விரலை ஆட்டுவதற்கும், நீட்டுவதற்கும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்களின் இன்றைய நிலைக்கு நல்ல உதாரணத்தை ஒரு கதையின் மூலம் விளக்கிடலாம்.

அதாவது பயங்கர கொடிய மிருகங்கள் வாழ்கின்ற ஒரு காட்டினுள் விலைமதிப்பு மிக்க ஒரு புதையல் உண்டு. அப்புதையலை எடுப்பதென்றால் மிகவும் சிரமமான விஷயம். புதையல் எடுக்க சென்றால் உயிரோடு திரும்பி வருவது என்பது கேள்விக்குறியான விஷயமாகும். அப்புதையலை எப்படியாவது எடுத்திடவேண்டும் என கங்கணம் கட்டிய அப்பகுதி முஸ்லிம்கள் பயங்கர அயுதங்களுடன் ஒரு கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு காட்டினுள் நுழைகிறார்கள்.

கொடிய மிருகங்களின் அட்டகாசங்கள் தாங்க முடியவில்லை. ஒவ்வொருவரையும் கடித்து குதற ஆவேசமாக பாய்ந்து வருகிறது. தீரமிக்க முஸ்லிம்களின் வீரத்தோடு அனைத்து மிருகங்களையும் வெட்டிவீழ்த்தி புதையலுக்கு வெகு அருகாமையில் நெருங்கிட்டார்கள். சண்டையில் களைத்துப்போன அனைவரும் ஓய்வெடுத்துச் செல்லலாமென ஒரு மரத்தினடியில் இளைப்பாறுகிறார்கள் அனைவருக்கும் தண்ணீர் தாகமெடுக்க கொண்டு வந்திட்ட நீரை ஒருவர் அனைவருக்கும் டம்ளரில் ஊற்றிக் கொண்டு வர பின்னாலும் சிலருக்கு நீர் டம்ளரில் பாதி அளவே கிடைக்கின்றது. இங்கே தான் ஆரம்பமானது பிரச்சனை. அவர்களுக்கு மட்டும் ஒரு டம்ளர் நீர், எனக்கு அரை டம்ளரா? என வாக்குவாதம் வாய்ச்சண்டையாகி ஒருவருக்கொருவர் கைகலப்பில் இறங்கி, கொண்டு ஆயுதங்களால் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி வெட்டி இரத்தமும், சதையுமாக மண்ணில் சாய்ந்தனர். கொடிய மிருகங்களோடு சண்டை போட்ட தீரமிக்க முஸ்லிம்கள் அரை டம்ளர் தண்ணீருக்காக மாண்டே போனார்களே, புதையலும் கிடைக்கவில்லை, உயிரும் போய் விட்டனவே! இப்படித்தான் உள்ளது நம் சமுதாயம் இலட்சியம் என்ற புதையலை அடையவே மாட்டார்கள். அதற்கு தடையே நம்மில் நிலவும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமையே. இன்று ஒவ்வொரு இயக்கத்திலும் இத்துரதிர்ஷடமான சூழ்நிலைதான் நிலவிக்கொண்டு இருக்கின்றன.

ஓர் இறைவன், ஓர் வழிகாட்டி, ஓர் வேதம் என ஏற்றுக்கொண்ட முஸ்லிம் சமுதாயம் ‘ஒற்றுமை’ கடமை என வலியுறுத்தப்பட்ட மார்க்கத்தில் இருந்துவரும் முஸ்லிம்களிடத்தில் தான் எத்தனை எத்தனை மாச்சரியங்கள், கருத்துவேறுபாடுகள், குரோதங்கள், விரோதங்கள். ஒருகணம் நம் சமூகத்தின் நிலையினை உற்று நோக்கினால் உண்மை முஸ்லிம்களுக்கு நிம்மதியான உறக்கம் ஒரு நாளும் வராது. எதிரிகள் அவர்களின் பொது பிரச்சனையான நம்மை கருவறுக்க ஒன்றுபடுகிறார்கள். ஆனால் நம்மவர்களோ கோழி முந்தியா? முட்டை முந்தியா? என வெட்டி விஷயங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆக்கப்பூர்வமான விஷயங்களில் கவனங்களை செலுத்திடவேண்டிய சூழல் ஏற்பட்டிட வேண்டும். அதற்கு முதலில் ஒற்றுமை மிக, மிக அவசியம் ஒற்றுமை என்றால் நான் முதலில் கூறினேன் அல்லவா? ஒரு தலைமை, ஓர் இயக்கம் என்பதாக எடுத்துக் கொள்ளவேண்டாம். இஸ்லாம் மேலோங்க, மேலோங்க ஒரு தலைமையின் கீழ் உம்மத் அணி திரள்வது என்பது நியதியாகும். வல்லான் அல்லாஹ் அதை செய்திடுவான். ஆனால் தற்போது ஒவ்வொரு இயக்கமும் தத்தம் வழிகளில் ஆக்கபூர்வமான விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்திட வேண்டும். கருத்து வேறுபாடுகளை கடைச்சரக்காக்கி ஒருவருக்கொருவர் பொது மேடைகளில் வசைபாடுவதை ஒவ்வொருவரும் கைவிட்டிடவேண்டும். கருத்துவேறுபாடுகள் நம்மை கோழைகளாக்கிவிடும் என அல்லாஹ்வின் அறுவுறுத்தலை நாம் நம் வாழ்வில் அனுதினமும் நினைவு கூர்ந்து கடை பிடிப்பவர்களாக இருந்திடவேண்டும். நம் இலக்குகளை அடைவதற்கு தடையாக இருப்பதே சகோதர சண்டைகள்தான். நம்மை இறைவன் உயர்ந்த இலட்சியத்திற்காக படைத்திருக்க நாமே அற்பத்தனமான சண்டைகளால் படைத்த நோக்கத்தை இழந்து விடுகிறோம். சகோதரச் சண்டைகளால் யாருக்கு என்ன இலாபம்? சைத்தான் தனி இலக்கில் வெற்றியடைந்து விட்டான். நாம் நம் இலக்கை தவறிவிட்டோம். இதை கருத்தில் கொண்டுதான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்படிக் கூறினார்கள்.

ஷைத்தானால் அரபு நாடுகளில் சிலை வணக்கத்தை ஏற்படுத்திட முடியாது, ஆனால் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களிடத்தில் பிளவுகளை ஏற்படுத்தி விடுவான் (ஹதிஸ்) .

இப்போதனையை செவியேற்று நாம்தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் ஷைத்தானுக்கு சிறு இடைவெளி கொடுத்தாலும் நம் கவனங்கள் சிதறும். பிறகு ஆக்கங்கள் தடைபட்டு அழிவுப்பாதையை நோக்கி நம் பாதங்கள் நகரும்.

ஆகவே, தலைமைகளிடத்தில் எங்களுடைய எதிர்பார்ப்பு ஈகோயிஸத்தையும், தன்னலத்தையும் தங்களின் உள்ளங்களிலிருந்து அப்புறப்படுத்தி ஒற்றுமைக்கு ஒவ்வொருவரும் உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதே!

தொடரும்….

அடுத்த பதிவில் (த.மு.மு.க , த.த.ஜ , விடியல்) போன்ற இயக்கங்களுக்கும் சிறைவாசிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்த கேள்விகளுக்கு பதில்.

தொடர்ந்து படிக்கவும்.

– முகவைத்தமிழன்

மே 21, 2006

த.மு.மு.க வின் வெற்றி உண்மையா ?

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 8:49 முப
ஏகனின் திருப்பெயரால்..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
பாளையங்கோட்டையில் தமுமுக வெற்றி என்று தமுமுக வார இதழில் வந்த செய்தியை பார்த்தவுடன் அதிர்ச்சியுற்றேன். தினசரிகளில் பார்த்தவரை திமுகவின் வேட்பாளர்தானே வெற்றி பெற்றதாக படித்தோம். இது என்ன புது கதையாக இருக்கிறது என்று கட்டுரையை படிப்பதை தொடர்ந்தேன். பாளையில் தமுமுகவின் ஆதரவினால்தான் திமுக வென்றதாம் இதைதான் அவர்கள்; அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்கள் என்று தெரிந்து கொண்டேன். நல்லவேளை தமிழக தேர்தலில் தமுமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது என்று தலைப்பிடாமல் போனார்களே அதுவரை சந்தோசப்பட வேண்டியதுதான்.

முஸ்லிம் லீக் கட்சிக்கு திமுக 3 தொகுதிகளை ஒதுக்கியதாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் திமுக அறிவித்ததும் அந்த 3 ல் ஒன்றுதான் பாளையங்கோட்டை தொகுதி என்பதும் அனைவரும் அறிந்ததே. அந்த தொகுதியை தமுமுக வேட்பாளர் க.அ.ப.இலாஹிக்கு ஒதுக்க வேண்டும் என்று தமுமுக திமுகவிடம் கெஞ்சியதும் அந்த தொகுதிக்காக தமுமுக, முஸ்லிம் லீக் தலைவர்களுக்கு மத்தியில் சண்டை ஏற்பட்டதும் அதை காரணமாக காட்டி தமுமுகவுக்கு அல்வா கொடுத்து நயவஞ்சகதனமாக, அந்த தொகுதியில் தன்னிச்சையாக திமுக தனது வேட்பாளருக்கு ஒதுக்கியது. தங்களை ஏமாற்றிய திமுகவுக்கு எதிராக மேலப்பாளையத்தில் ஆர்பாட்டத்தில் தமுமுகவினர் ஈடுபட்டதையும் பேப்பரில் படித்தோம். திமுகவின் துரோகத்தால் அந்த தொகுதியில் ஈடுபாடு கொள்ளாமல், பெரிய அளவில் இறங்கி வேலை செய்யாமல் தமுமுகவினர் இருந்தனர். தங்கள் தலைவர் கட்டளைக்காக திருநெல்வேலி திமுக கூட்டத்தில் தமுமுக கொடியை கொண்டு போய் ஆட்டியதோடு தமுமுகவினரின் வேளை முடிந்துவிட்டது. இந்நிலையில் பாளை திமுகவின் வெற்றி தங்களால்தான் கிடைத்தது என்று தமுமுக சொல்வது அரைவேக்காடுதனமாகது.

மேலப்பாளையம் போன்ற ததஜவின் கோட்டையில் முழுக்க முழுக்க முஸ்லிம்கள் தேசிய வீக்கிற்கே வாக்களித்தனர். ஆனால் மற்ற பகுதியில் உள்ள சமுகத்தினரின் ஓட்டுக்கள் மற்றும் திமுக, இந்திய கம்யுனிஸ்டு, ப.ம.க, காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் போன்றவற்றிக்கு உள்ள ஓட்டு சதவீ;தத்தாலும், அரசு துரையினரின் ஓட்டுகளாலும், திமுக வேட்பாளர் உள்ளுர்வாசி, தொகுதியில் நல்ல பெயர் உள்ளதாலும், பல முறை வெற்றி பெற்றவர் என்பதாலம், கலர் டிவி, 2 ஏக்கர்; நிலம் பித்து அடிதட்டு மக்களை பிடித்தாலும் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். காக்கா உட்கார பனம்பழம் விழுந்தது என்பதை போல் தமுமுக எதேட்சையாக திமுகவில் ஒட்டி கொள்ள அந்த அணி வெற்றி பெற்று விட்டது. இதைபோய் தமுமுகவின் தனது வெற்றி என்று கதையடிக்கும் பொழுது அடக்க முடியாமல் சிரிப்புதான் வருகிறது.

அடுத்ததாக திமுக வென்ற தொகுதிகளை பட்டியலிட்டு அது தங்களால் கிடைத்த வெற்றி என்று கதையடித்துள்ளனர். அவர்கள் வெளியிட்ட தொகுதிகளில் பல முஸ்லிம்கள் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்களாக இல்லை. அதுவும் மிக குறைந்த எண்ணிக்கையில் வசிக்கின்ற பல தொகுதிகளை வெளியிட்டு தமுமுகவின் பிரச்சாரத்தால் அந்த தொகுதியில் திமுக வென்றது என்று சொல்வது மோசடி வேலையாகும். நல்ல வேளை திமுக வென்ற அனைத்து தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டு அனைத்து வெற்றிக்கும் தமுமுகதான் காரணம் என்று சொல்லாமல் விட்டார்களே அதுக்காக தமுமுகவினர்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

வீழ்த்த முடியாத காங்கிரஸ் கோட்டை பாபநாசத்தில் அதிமுக வென்றதுக்கு முஸ்லிம்கள் காரணமில்லையாம் காங்கிரஸ் வேட்பாளரின் சமுகத்தினர் அவருக்கு வாக்களிக்கவில்லை என்று புதிதாக தமுமுகவினர் கண்டுபிடித்துள்ளனர். அந்த தொகுதியில் வென்றவரே தனது வெற்றிக்கு முக்கிய காரணம் முஸ்லிம்கள்தான் என்று குறிப்பிடும் பொழுது தமுமுகவினர் பொய்யை தனது பத்திரிக்கையில் பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அடுத்து சென்னையில் அதிமுக பல தொகுதிகளில் பெற்ற வெற்றிக்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று திமுக ஆதரவு பத்திக்கையாக தற்போது மாறியுள்ள ஜுனியர் விகடன் கூட குறிப்பிட்டு இருக்கும் பொழுது சென்னை வெற்றிக்கு அதிமுகவின் பணபலம்தான் காரணம் என்று தமுமுக சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திமுக வென்றால் அது தமுமுகவின் பலத்தால் என்பதும் அதுவே அதிமுக வென்றால் பணபலம் என்பதும் அரசியல்வாதிகளுக்கே உரிய பண்பாகும். தற்போது அது தமுமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் வெள்ள நிவாரணத்தின் போது ஏற்பட்ட உயிர்சேதம், ஜெயலலிதா சென்றால் போக்குவரத்து நெறுக்கடி, கண்ணகி சிலையை அகற்றியது, தலைமை செயலகம் கட்ட ராணிpமேரி கல்லூரியை இடிக்க பார்த்தது என்று அனைத்துமே அதிமுகவுக்கு எதிராக திமுகவுக்கே சாதகமாக இருந்த நிலையில் ததஜவின் சூராவளி பிரச்சாரத்தால் அதிமுக பல தொகுதிகளை வென்றுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

சென்னை துறைமுகம் தொகுதியில் சென்ற முறை பஜகவுடன் மட்டுமே கூட்டனி வைத்து திமுக போட்டியிட்டு ஆயிரக்கணக்கான ஓட்டில் வென்றது. ஆனால் தற்போது மிகப்பெரிய கூட்டணி பலத்துடன் துறைமுகத்தில் குதித்து அல்ப ஓட்டில் வென்றுள்ளது. ததஜ, தமுமுக தலைமையகம் அமைந்துள்ள துறைமுகம் தொகுதியிலேயே திமுக பொதுச்செயலாளர் 400சில்லரை ஓட்டில்தான் வெற்றி பெற்று இருப்பதே ததஜவின் மக்கள் பலத்திற்க்கு சான்றாகும். பல தொகுதிகளை பட்டியளிட்ட தமுமுக முஸ்லிம்கள் அதிகமாக வசிக்க கூடிய பல தொகுதிகள் திருவல்லிகேணி, ராயபுரம், பாபநாசம், கோவை மேற்க்கு, மருங்காபுரி, புவனகிரி, கம்பம், திருச்செந்தூர், பெரியகுளம் போன்ற தொகுதிகளில் ததஜவின் முயற்சியால் அதிமுக வெற்றி பெற்றதை பற்றி என்ன கதை சொல்லப் போகிறார்கள்.

இதில் முக்கியமாக விசயமாக கோவை அதிமுக வெற்றியை எடுத்து கொள்ளலாம். கடந்த 2 வருடமாக கோவை மக்களை வைத்து அரசியல் நடத்தி வந்த தமுமுகவுக்கு அங்கு பெருத்த அடியை அந்த மக்களே வழங்கி அதிமுகவை வெற்றி பெற வைத்துள்ளனர். இதை வைத்து எப்படி பார்த்தாலும் தற்போது தமுமுகவுக்கு பெருத்த சரிவே, அதே வேளை அதிமுகவுக்கு என்று எப்பொழுதும் இல்லாத முஸ்லிம்கள் ஓட்டை ததஜ இந்த முறை பெற்றுக்கொடுத்துள்ளது. இதனால் இந்த தேர்தலில் ததஜவின் செல்வாக்கு முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்கள் மத்தியில் பெருமளவு உயரந்துள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

சைதை அஹமது அலி.
சென்னை.
ahamedali2006@gmail.com

மே 18, 2006

மார்க்க அரசியல் தலைவர்களை இனம் காண்போம்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 8:45 முப

மார்க்கத்தின் பெயரால் அரசியல் நடத்தும் தலைவர்களை இனம் காண்போம்.

நடந்து முடிந்த தேர்தலில் ஒட்டுக்களைப் பொறுக்க அரசியல் வாதிகள் என்ன கூத்தாடினார்களோ ஆனால் அதனை விட முஸ்லிம் சமுதாய பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் நடத்திய கூத்து தான் இந்த சமுதாயத்தைப் பிறருக்கு மத்தியில் தலை குனிய வைத்துள்ளது.

இதில் தவ்ஹீதைக் காரணம் காட்டி தமுமுகவை விட்டும் பிரிந்து சென்ற தமிழ்நாட்டு தவ்ஹீத் ஜமாஅத்தாரின் நிலைதான் மிக மோசமாக இருக்கின்றது. தமுமுக வினர் கூட கருணாதிக்கு ஓட்டு போடுவது சமுதாயத்தினர் மீதுள்ள கட்டாயக் கடமை என்ற ரீதியில் பிரச்சாரம் செய்யவில்லை.

ஆனால் த.த.ஜ வினர் ஜெயலலிதாவுக்கு ஓட்டு போடுவது என்னவோ முஸ்லிம்களுக்கு அல்லாஹ் இட்ட கட்டளை என்ற ரீதியில் பிரச்சாரம் செய்து வந்தனர். இதற்கு அவர்களது வலைதளத்தில் இடம் பெற்ற கட்டுரையே சான்றாகும். ஆம் ஜெயலலிதா இடஒதுக்கீடு தருவதாக வாக்களித்தாராம். எனவே அவருக்கு ஆதரவு என்று முஸ்லிம்களும் ஒப்பந்தம் செய்து கொண்டார்களாம். எனவே வாக்குறுதியை மீறக்கூடாது என்று அல்லாஹ் கூறியுள்ளயான். அவ்வாறு மீறுபவன் நயவஞ்சகன் என்று அல்லாஹ்வின் தூதரும் கூறியுள்ளனர். எனவே முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் ஜெயலலிதாவிற்குத்தான் ஓட்டு போட வேண்டுமாம். (பார்க்க www.tntj.net)

பெண்ணிடத்தில் தங்கள் காரியத்தை ஒப்படைக்கும் சமூகம் வெற்றி
பெறாது என்ற நபிமொழி சாதாரண மக்களுக்கு விளங்கியதைப்போன்று விளங்கியவர் அல்ல
மூதறிஞர் பி.ஜெ. அவரிடத்தில் அதற்கு அற்புதமான மறுப்பு இருக்கும். (நபித்தோழர்கள்
மார்க்கத்தை விளங்கியதை விடவும் சிறந்த முறையில் விளங்கியவர்கள் தானே தமிழ்நாட்டு
தவ்ஹீதார்கள்)

ஆனால் இப்போது இவர்களது பிரச்சாரம் முஸ்லிம்களிடம் எடுபடாமல் ஜெயலலிதா தோற்கடிக்கப்பட்ட பின்னர் புதிய கதையுடன் டி.வி யில் தோன்றுகின்றனர். எல்லாம் விழுந்து விட்ட இயக்கத்தை தூக்கி நிறுத்துவதற்காகத் தான் என்பதை பார்ப்பவர்கள் புரிந்து கொள்வர். ஜெயலலிதா தோற்றாலும் வாக்கு சதவீதம் அதிகமாக உள்ளதாம்! அதற்கு இவர்களின் பிரச்சாரத்தின் காரணமாக ஒட்டு மொத்த முஸ்லிம்களும் ஜெயலலிதாவுக்குத் தான் வாக்களித்தார்களாம்! அப்பப்பா பிரமாதம்! அரசியல்வாதிகள் தோற்றார்கள் போங்கள்! விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையாம்.

சகோதரர்களே மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் இத்தகைய புதிய கொள்கைவாதிகளை இனம் காணுங்கள். தவ்ஹீத் என்ற புனிதமான பெயரைப் பயன்படுத்தி மார்க்கத்தில் புதிய கருத்துக்களைக் கூறி மக்களைக் குழப்பி வரும் இவர்களை இப்போது உலகளாவிய அறிஞர்கள் இனம் கண்டு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகின்றனர். ஆம் இவர்கள் உருவாக்கிய புதிய கருத்துக்களில் சில இதோ:

  • நபித்தோழர்கள் மார்க்கத்தை மாற்றிவிட்டார்கள் என்று கூறியது
  • அல்லாஹ் முதல்வானத்தில் இறங்குகின்றான் என்ற ஹதீஸைப் பொருள் மாற்றிக் கூறியது
  • சூனியம் பற்றிய ஹதீஸை மறுத்து புதிய விளக்கம் அளித்தது.
  • திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பில் புதிய கருத்துக்களைக் கூறியது. பொருளை மாற்றியது.
  • ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக இருந்தாலும் அறிவுக்குப் பொருந்தவில்லையெனில் புறம் தள்ளவேண்டும் என்றது
  • செல்வங்களுக்கான ஸக்காத் ஒருமுறை மட்டும் கொடுத்தால் போதும் என்று வாதிட்டது.
  • ஆண்கள் அரைக்கால் டிரவ்ஸரில் தொழலாம் என்று பத்வா வழங்கியது.

இவை சில உதாரணங்களே. மார்க்கத்தை நல்லறிஞர்களிடமிருந்து கற்றுக் கொள்வோம். போலிகளை மக்களுக்கு இனம் காட்டுவோம்! விழிப்படைவோம்! வெற்றிபெறுவோம.! அல்லாஹ் உதவி செய்வானாக! ஆமீன்.

அன்புடன் உங்கள் சகோதரன்

மு. அப்துல் காதிர் தஸ்தகீர்
பஹ்ரைன்.

thasthahir_ma@hotmail.com

மே 17, 2006

பத்திரிக்கைகள் படுத்தும் பாடு!

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 6:10 முப
பத்திரிக்கைகள் படுத்தும் பாடு!
நமது நாடுகளில் இருக்கக்கூடிய பத்திரிக்கைகள் எந்த அளவிற்கு உண்மைகளை எழுதுகிறார்கள் என்பது நம்மில் பலருக்கு சந்தேகமே. மிகச் சில நேரங்களை தவிர பெரும்பாலான நேரங்களில் ஏதேனும் ஒரு கட்சியை சார்ந்தவர்களாகத்தான் தங்களுடைய செய்தியை பத்திரிக்கைகளில் உலவ விடுகிறார்கள். அது உண்மையா, பொய்யா என்றெல்லாம் அவர்கள் பார்ப்பதில்லை. ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு எதிரான கருத்துக்களை எவ்வளவு தந்திரமாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க முடியுமோ அதை நேர்த்தியாக செய்வதில் பெரும்பாலான பத்திரிக்கைகள் வெற்றி பெற்றிருக்கிறது.
மக்களுக்கு சரியான செய்திகளை எடுத்துச் சொல்லி மக்களை விழிப்புணர்ச்சி அடையச் செய்யும் நோக்கம் இந்த பத்திரிக்கைகளுக்கு இருப்பதாக தெரியவில்லை. ஏதேனும் ஒரு ஆதரவு நிலையோடு செய்தி தரும் பத்திரிக்கைகள் வெவ்வேறு /எதிர்மறையான செய்திகளை ஒரே நேரத்தில்/விசயத்தில் பரப்புகிறார்கள். அதனால் மக்கள் மத்தியில் நிலவும் அமைதி கூட சில நேரங்களில் கேள்விக்குறியாகி விடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது.
உதாரணத்திற்கு..
கடந்த சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் யாருக்கு ஓட்டுப்போட்டார்கள் என்ற ஆய்வில்(!) இறங்கிய ஜூனியர் விகடன் மற்றும் குமுதம் ரிப்போர்ட்டரின் செய்திகளை படிப்பவர்கள் சற்று குலம்பித்தான் போவார்கள். இந்த இரண்டு பத்திரிக்கையின் செய்திகளும் ஒரே விசயத்தில் வெவ்வேறு/எதிர்மறையான கருத்துக்களை பரப்புவதை படிப்பவர்கள் உணர்ந்து இந்த பத்திரிக்கைகளின் தரத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
ஜூனியர் விகடன்
‘கருணாநிதி சுமார் 8 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்திருக்கிறார். உடனே சேப்பாக்கம் பகுதிச் செயலாளர் சுரேஷ்குமாரை அழைத்து ‘என்னப்பா வித்தியாசம் குறைந்து விட்டதே?’ என்றாராம். அதற்கு சுரேஷ்குமார் ‘தலைவரே முஸ்லிம்கள் இன உணர்வு காரணமாக நமக்கு ஓட்டுப்போடவில்லை. தாவூத் மியாகானுக்குப் போட்டுவிட்டார்கள். அதுதான் நமக்கு ஓட்டுக் குறையக் காரணம்’ என்றாராம். அதைக் கேட்ட கருணாநிதி கொஞ்சம் அப்செட்தான்! சேப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க-வினரோ ‘தாவூத் மியாகான் வாழைப்பழ சின்னத்தில் போட்டியிட முடிவு செய்த போதே எதிர்த்தோம். அவர் மட்டும் இரட்டை இலை சின்னத்தில் நின்றிருந்தால் நிச்சயமாக கருணாநிதிக்குக் கடும் போட்டியாக இருந்திருப்பார். அவரது பிடிவாதம்தான் தோல்விக்கு காரணம்’ என்கிறார்கள்.’
‘அட!
‘கருணாநிதியின் வாக்கிங் தோழர் நாகநாதன் திருவல்லிக்கேணியில் சுமார் 2800 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஜெயலலிதாவின் பள்ளித் தோழி பதர் சயீத்திடம் தோற்றுப் போய்விட்டார். பார்த்தசாரதி கோயிலைச் சுற்றியுள்ள ஏரியாவில் சுமார் இரண்டாயிரம் ஓட்டுக்கள் இரட்டை இலைக்குக் கூடுதலாகக் கிடைத்ததுதான் அவரது வெற்றியை உறுதி செய்திருக்கிறது. மறைந்த தாதா வீரமணி ஏரியாவான அயோத்திக்குப்பம் உள்ளிட்ட மீனவர் பகுதிகளில் தி.மு.க-வுக்கு ஓட்டுக்கள் குறைவாகக் கிடைத்திருக்கின்றன. தேர்தல் முடிவு வெளியானதும், திருவல்லிக்கேணி பகுதி தி.மு.க. பிரமுகர்களை அழைத்து விசாரித்திருக்கிறார் கருணாநிதி. ‘முஸ்லிம்கள் அந்த அம்மாவுக்குதான் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். பிராமணர், மீனவர்களின் ஓட்டுக்களும் அவர்களுக்கு விழுந்ததால் தோற்றுவிட்டோம் என்றார்களாம்.
குமுதம் ரிப்போர்ட்டர்
முஸ்லிம் சமுதாய அமைப்புக்கள் சிலவற்றை அ.தி.மு.க இழுத்திருந்தாலும் அம்மத மக்கள் பெரும்பாலும் தி.மு.க.வுக்கே ஓட்டுப்போட்டிருக்கிறார்கள். இதில் உளவுத்துறையினர் வேறு இடையில் புகுந்து தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஜமாத்திலும் செய்த வேலை எதிர்ப்பாக மாறியது. ‘அனைத்து முஸ்லிம் ஜமாத் உரிமை பாதுகாப்புக் குழு’ தேர்தல் ஆணையம் வரை இதை எடுத்துச் சென்றது.

மே 15, 2006

பீ.ஜே.யின் சப்பைக்கட்டு

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 2:03 பிப
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிலைப்பாடு என்ற தலைப்பில் அவர்களின் வலைதளத்தில் சொல்லியுள்ள அபத்தங்களுக்கு பதில்

தமது வழக்கமான “கோயபல்ஸ்” பிரச்சாரத்தை ஜெய்னுல்ஆபிதீன் ஆரம்பித்து விட்டார்.

அவர் அ.தி.மு.க. காங்கிரஸ் அணியை முன்பு நாடாளுமன்ற தேர்தலில் த.மு.மு.க. ஆதரித்தபோது நாற்பதில் பதிமூன்றை தானே இந்த அணி வென்றது”என்கிறார்.ஆறு சட்டமன்ற தொகுதிகளை கொண்டது தான் ஒரு நாடாளுமன்ற தொகுதி ஒரு சட்டமன்ற தொகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கலாம் ஆறு சட்டமன்ற தொகுதியிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிப்பார்களா? அப்படியும் அந்த நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மயிலாடுதுறை,இராமநாதபுரம்நாடாளுமன்ற தொகுதிகளில் நாம் ஆதரித்தவர்கள் தானே வென்றார்கள்.
மேலப்பாளையத்தை உள்ளடக்கிய பாளையங்கோட்டையில் தி.மு.க.வேட்பாளர் மைதீன்கான் பீ.ஜே.ஆதரவு வேட்பாளர் நிஜாமுத்தீனை நாற்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெனறுள்ளார். கடந்த தேர்தலில் த.மு.மு.க.ஆதரவில் பதினைந்தாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
வாணியம்பாடியில் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஆம்பூர்பாசித் பீ.ஜே.ஆதரவு தேசிய லீக் வேட்பாளர் முஹம்மது அலியை இருபத்திநான்காயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெனறுள்ளார். இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வேட்பாளரும், அதற்கு முந்தைய தேர்தலில் அ.தி.மு.க.அணி வேட்பாளர் லத்தீப்சாஹிப் வெனறுள்ளார்கள்.
தவ்ஹீத் ஜமாத் தலைமைபீடமான கடையநல்லூரில் காங்கிரஸ் வேட்பாளர் வெளியூர்க்காரரான பீட்டர் அல்போன்ஸிடம் பீ.ஜே.ஆதரவு வேட்பாளர் கமாலுதீன் தோல்வி அடைந்துள்ளார்.
உண்மை இவ்வாறு இருக்க நமது”கோயபல்ஸ்” தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்தது தவ்ஹீத் ஜமாத் பிரச்சாரத்தால் தான் என்கிறார்.

இதுவரை அரசியல் கட்சிகள் சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டது ஒரே ஒருமுறை தான் . அதுவும் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார். காங்கிரஸ் வேட்பாளர் தோல்விக்கு முக்கிய காரணம் அவர் மூப்பனார் குடும்பத்தை பகைத்துக்கொண்டது தான். மேலும் மூப்பனாரின் தம்பி மருமகன் சுரேஷ்மூப்பனார் போட்டியிடுவதாக இருந்தது. கடைசி நேரத்தில் டெல்லி மேலிடம் சிட்டிங் M.L.A.க்கள் அனைவருக்கும் சீட்டு தர முடிவு செய்ததால் ராம்குமாருக்கு கிடைத்தது. 2001 சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர் களை நாம் ஆதரித்தாலும் இந்த தொகுதியில் மட்டும் ராம்குமார் நீங்கள் என்னை ஆதரித்தால் பெரும்பான்மை முஸ்லிம்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறி த.மு.மு.க.வை உதறி தள்ளியதால் பேராசிரியரின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.நமது ஆதரவு இல்லாததால் அவர் வெற்றிபெற்றார். பின்னர் தேர்தல் முடிந்தவுடன் எஸ். பி தலைமையில் முன்னூரு போலிசார் பாதுகாப்புடன் த.மு.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பாக்கர் கலந்துக்கொண்டார். ராஜகிரி,பண்டாரவாடையில் தான் த.மு.மு.க. தவ்ஹீத் சகோரதரர்கள் உள்ளனர். அய்யம்பேட்டையில் ஜாக் பள்ளி உண்டு . த.மு.மு.க.விற்கு கூட கிளை கிடையாது. பழைய தஞ்சை மாவட்டத்திலேயே தவ்ஹீத் எதிர்ப்பாளர்கள் அதிகம் உள்ளது இப்பகுதியில் தான் என்பது பீ.ஜே.,பாக்கர்,ஏ.எஸ்.அலாவுதீன் ஆகியோருக்கு நன்கு தெரியும். வழுத்தூரில் தவ்ஹீத் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முஸ்லிம்களே உள்ளே புகுந்து அடித்தார்கள். ஆர்.டி.ஓ. அலுவலகம், தாசில்தார் அலுவலகம், காவல்நிலையங்கள், மருததுவமனை என்று தவ்ஹீத் சகோரதரர்கள் அலைக்கழிக்கப்பட்டதும் இப்பகுதியில் தான்.

பழைய தஞ்சை மாவட்டத்திலேயே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதியும்,பீ.ஜே.யின் தவ்ஹீத் பிரச்சாரத்திற்கு அடிக்கோலிட்ட தொகுதியுமான சங்கரன்பந்தலை உள்ளடக்கிய பூம்புகார் தொகுதியில் எந்தஅணி வெனறுள்ளது. பழைய தஞ்சை மாவட்டத்தில் கடந்தகாலங்களில் முஸ்லிம்கள் வென்ற மற்ற தொகுதிகளான தஞ்சாவூர்,கும்பகோணம்,நாகப்பட்டிணம் தொகுதிகளி்ல் எந்த அணி வெனறுள்ளது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்பது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுவும் வேண்டாம்
Older Posts »

Create a free website or blog at WordPress.com.