தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 14, 2008

முஸ்லிம்கள் நம் வழிக்கு வராவிட்டால், –வாஜ்பேயி

முஸ்லிம்கள் நம் வழிக்கு வராவிட்டால், இந்நாட்டுக் குடிமக்கள் என்ற நிலையிலிருந்து ஒதுக்கிவிட வேண்டும்; விரட்டி விட வேண்டும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர்களுக்கு இருந்து வரும் சலுகைகளைப் பறிப்போம்

இவர்களின் திட்டம்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர்களுக்கு இருந்து வரும் சலுகைகளைப் பறிப்போம் என்று பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

இது ஒன்றும் அதிசயமானதல்ல!
இது அவர்கள் கட்சியின் திட்டம்தான்

– எடுத்துக்காட்டாக உத்தமராகத் தூக்கி நிறுத்தப்படும் அடல் பிஹாரி வாஜ்பேயி தெரிவித்த ஒரு கருத்தைத் தெரிவிந்து கொண்டால் இதன் தாத்பரியம் நன்கு விளங்கி விடும்.

1995 மே 7 நாளிட்ட ஆர்.எஸ்.எஸ். ஏடான `ஆர் கனைசரில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதற்குரியவர் ஏ.பி. வாஜ்பேயிதான்.பாரதீய ஜனதா கட்சியின் வெப்சைட்டிலும் இடம் பெற்றதாகும்.“ஆர்.எஸ்.எஸ்.என் ஆன்மா என்ற அந்தக் கட்டுரையில் `வாஜ்பேயி என்ன சொல்லுகிறார்?

முஸ்லிம்களை வழிக்குக் கொண்டு வர என்ன செய்ய வேண்டுமாம்?

இதோ அவர் எழுதுகிறார்:

1) இந்துக்களை அணி திரட்ட வேண்டும் (டீசபயளைபே)

2) முஸ்லிம்களை உட்கொள்ளுவது (இதன் பொருள்; முஸ்லிம்களுக்கென்று உள்ள அடையாளங்களை அழித்து அவர்களை இந்து மயமாக்குவது).
அப்படி முஸ்லிம்களை உட்கொள்ளுவதற்கு அவர் கூறும் வழிகள் மூன்று

:1) முஸ்லிம்கள் நம் வழிக்கு வராவிட்டால், இந்நாட்டுக் குடிமக்கள் என்ற நிலையிலிருந்து ஒதுக்கிவிட வேண்டும்; விரட்டி விட வேண்டும்.

2) முஸ்லிம்களை நமது வழியில் கொண்டுவர சலுகைகள், இலஞ்சங்கள் தருதல் – இது காங்கிரசின் அணுகுமுறை.

3) முஸ்லிம்களை நமக்கு ஏற்றவாறு மாற்றி நம்முள் உட்கொள்ளுதல்.

இம்மூன்று வழிகளில் முதல் மற்றும் மூன்றாம் வழிகள்தான் நம் வழி என்றார் வாஜ்பேயி

.இப்பொழுது புரிகிறதா? ராஜ்நாத் சிங் கூறியுள்ள கருத்தின் மூலம் எங்கிருந்து வருகிறது என்பது?

http://viduthalai.com/20080412/snews02.html

ஒக்ரோபர் 26, 2007

அரசு, நீதித்துறை, காவல்துறையின் முஸ்லிம்களுக்கெதிரான கூட்டுச் சதி (Gujarat)

Filed under: குஜராத், கோத்ரா, ஹிந்து தீவிரவாதம் — முஸ்லிம் @ 8:26 பிப

குஜராத் பயங்கரம்: தெகல்கா-இந்தியா டுடேவின் அதிர்ச்சி வீடியோ

PLEASE CLICK HERE TO WATCH THE VIDEO

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 26, 2007

அகமதாபாத்: குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் ஆசிர்வாதத்தோடும், உதவியோடும் தான் மதக் கலவரத்தை நடத்தியதாக பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளனர்.

இதை தெகல்கா இதழ் ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே மற்றும் தெகல்கா ஆகியவை இணைந்து நடத்திய இந்த ரகசிய ஆபரேசனில் குஜராத் மதக் கலவரத்தின் இன்னொரு பக்கம் வெளியே வந்துள்ளது.

குஜராத்தில் வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தது கோத்ரா ரயில் தீ விபத்து. சுமார் 50க்கும் மேற்பட்ட அப்பாவி ராம பக்தர்கள் பலியான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தான் வன்முறை தொடங்கியது.

கோத்ரா தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ஹரேஷ் பட் பஜ்ரங் தள் அமைப்பின் தேசிய துணைத் தலைவராகவும் உள்ளார். இவரையும் குஜராத் வன்முறையில் நேரடியாகப் பங்கு கொண்ட 7 பேரையும், மோடிக்கு மிக நெருக்கமான அரசு வழக்கறிஞரையும் மேலும் 5 பேரையும் தெகல்கா நிருபர்கள் குழு ரகசியமாய் நெருங்கியது.

அவர்களிடம் குஜராத் வன்முறை குறித்து பேசியது. அப்போது அதை ரகசியமாய் கேமராக்களில் படம் பிடித்தது.

ஆனால், தாங்கள் படம் பிடிக்கப்படுவது தெரியாமல் எப்படியெல்லாம் வன்முறையை நடத்தினோம், எப்படி ஒரு கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்துப் போட்டு வெட்டினோம் என்பதையெல்லாம் இவர்கள் பேசியுள்ளனர்.

தெகல்கா நடத்திய இந்த ஆபரேசனுக்கு தலைமை வகித்தவர் அதன் நிருபரான ஆஷிஷ் கெய்தான். அவர் ‘விஎச்பியும் இந்துத்துவாவும்’ என்ற புத்தகம் எழுதப் போகிறேன். அதற்காக கருத்துக்கள், விவரங்களைத் திரட்டி வருகிறேன் என்று கூறித்தான் இவர்களை நெருங்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 6 மாத காலமாக இவர்களிடம் பேசி, அதை ரகசியமாக வீடியோ எடுத்து வந்துள்ளார் கெய்தான்.

இந்த வீடியோவில் அவர்கள் பேசியுள்ளது மிக பயங்கரமாக உள்ளது.

வன்முறைக்கு டைம் கொடுத்த மோடி..

கோத்ரா எம்எல்ஏவான பட் கூறுகையில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பாஜக பிரமுகர்கள், பஜ்ரங் தள், விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் நான் உங்களுக்கு 3 நாட்கள் நேரம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் (வன்முறை, கொலை,தாக்குதல்) செய்து கொள்ளுங்கள். ஆனால், 3 நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும் என்றார்.

மேலும் நரோடா பாட்டியாவில் பெரிய அளவில் கொலைகள் நடந்த பின்னர் அதற்காக எங்களை மோடி அழைத்துப் பாராட்டினார் என்று கூறியுள்ளார் பட்.

போலீஸ் உதவியோடு பாம் தயாரித்தோம்…

விஎச்பியைச் சேர்ந்த அனில் படேல், தாபல் ஜெயந்தி படேல் ஆகியோர் கூறுகையில், விஎச்பி தொண்டர்கள் எனது தொழிற்சாலையில் தான் குண்டுகளைத் தயாரித்தனர். ராக்கெட் லாஞ்சர்களைக் கூட தயாரித்து முஸ்லீம்கள் மீது தாக்குதல்
நடத்தினோம்.
இதற்கு போலீசாரும் எங்களுக்கு உதவியாக இருந்தனர்.

பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன்….

பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி கூறுகையில், நான் அந்த கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன். அதிலிருந்த சிசுவை எடுத்து வெளியே எரிந்து வெட்டினேன் என்று கூறியுள்ளார்.

மதன் சாவல் என்ற பாஜக தொண்டர் கூறுகையில், முன்னாள் காங்கிரஸ் எம்பி ஜாப்ரி தனது பகுதி முஸ்லீம்களை காப்பாற்ற முயன்றார். தனது வீட்டில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தார். இதையடுத்து நாங்கள் வாள்களுடன் அவரது வீட்டை முற்றுகையிட்டோம். அப்போது கை நிறைய பணத்தை அள்ளிக் கொண்டு வந்த ஜாப்ரி இதை வைத்துக் கொண்டு அனைவரையும் விட்டுவிடுமாறு கூறினார்.

நாங்கள் சரி என்றோம். பணத்தைக் கொடுத்த அவர் கதவைத் திறந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்து அவரைப் பிடித்தோம். இருவர் கையை பிடித்துக் கொள்ள நான் அவரது கைகளை வெட்டினேன் பின்னர் அவரது மர்ம உறுப்பை வெட்டி எரிந்தோம். பின்னர் அவரை துண்டு துண்டாக்கி எரித்துவிட்டோம். அவர் வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டோம் என்று கூறியுள்ளார்.

இன்னொரு தொண்டர் கூறுகையில், நரேந்திர மோடியால் தான் நான் சிறையில் இருந்து வெளியே வந்தேன். அவர் நீதிபதிகளை இடமாற்றம் செய்து தனக்கு வேண்டியவர்களை நியமித்ததால் தப்பித்தேன் என்றார்.

இவை அனைத்தும் வீடியோவில் அப்பட்டமாக அப்படியே பதிவாகியுள்ளன.

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரகாஷ் ரத்தோட் என்பவர் கூறுகையில், பாஜக எம்.எல்.ஏ மாயா பென் வீதி வீதியாக சென்று முஸ்லீம்களை விரைவாக கொல்லுங்கள், யாரையும் விடாதீர்கள் என்று வேகப்படுத்தினார் என்று கூறியுள்ளார்.

சுரேஷ் ரிச்சர்ட் என்பவர் கூறுகையில், போலீஸார் எங்களை அழைத்து சில இடங்களை சுட்டிக் காட்டி இங்கு முஸ்லீம்கள் சிலர் ஒளிந்துள்ளனர். அவர்களை விடாதீர்கள் என்று எங்களுக்கு வழி காட்டினர். நாங்கள் அந்த இடத்திற்குச் சென்று வெளியிலிருந்து கதவுகளை மூடி உள்ளேயே வைத்து அவர்களை எரித்துக் கொன்றோம் என்று தெரிவித்துள்ளார்.

விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த ரமேஷ் தவே கூறுகையில், இதை நாங்கள் இப்போது செய்யவில்லை. கடந்த 20, 25 வருடங்களாகவே எங்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் (முஸ்லீம்கள்) கொன்று குவித்துள்ளோம் என்று கூறியுள்ளார் தவே.

அரசு, நீதித்துறை, காவல்துறையின் கூட்டுச் சதி:

குஜராத் கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நானாவதி ஷா கமிஷன் முன்பு ஆஜரான அரசு வக்கீல் அரவிந்த் பாண்ட்யா கூறுகையில்,

கலவரத்தில் ஈடுபட்டோருக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டன. முதல்வர் நரேந்திர மோடி உயர் காவல்துறை அதிகாரிகளை அழைத்து இந்துக்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளுமாறு வாய் மொழியாக உத்தரவிட்டார்.

கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு மோடி மிகவும் அப்செட் ஆக இருந்தார். அகமதாபாத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசத் தயாராக இருப்பதாக அவர் கூறி வந்தார். ஆனால் முதல்வர் பதவியில் இருந்ததால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டார்.

முஸ்லீம்களைக் கொன்ற தினத்தை ஆண்டுதோறும் இந்துக்கள் பெரிய அளவில் கொண்டாட வேண்டும். அதே சமயம் அவர்களைக் கொல்வதை விட நசுக்குவதுதான் மிகவும் சிறந்தது. இதன் மூலம் முஸ்லீம்கள் காலம் பூராவும் இந்துக்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள்.

முஸ்லீம்களைக் கொல்வதைப் போல அவர்கள் மீது பொருளாதார நெருக்கடியைத் திணிக்க வேண்டும் என்று கூறியுள்ள பாண்ட்யா இதை விட பயங்கரமாக, இந்த சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி நானாவதி ஷா கமிஷனையே விலைக்கு வாங்கிவிட்டன பாஜக மற்றும் அதன் கூட்டு அமைப்புகள் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுகுறித்து அவர் கூறுகையில், நீதிபதி நானாவதியுடன் கூட்டாக விசாரித்த கே.ஜி.ஷா (இவர்தான் கமிஷனின் தலைவர்) ஒரு பாஜக அனுதாபி என்றும் கூறியுள்ளார் பாண்ட்யா.

வி.எச்.பி. பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி கூறுகையில், மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் எங்களுக்கு சாதகமாக இருந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சாதகமாக அவர்கள் வாதாடினர் என்றார்.

நன்றிங்க..

குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனச்சுத்திகரிப்பு

இனப்படுகொலை குறித்த இறுதித்தீர்வு வீடியோ

ஓகஸ்ட் 14, 2007

தென்காசி : ஹிந்து பயங்கரவாதிகள் தாக்குதல் 3 முஸ்லிம்கள் படுகொலை(LAST)

நெல்லை மாவட்டம் தென்காசியில் சில மாதங்களுக்கு முன்னர் கொலை, கொல்லைகளில் ஈடுபட்டு வந்த இந்து முன்னணியை சோந்த ஹிந்து பயங்கரவாதி குமார் பாண்டியன் என்பவனின் தேசவிரோத செயல்களாலும் பயங்கரவாத நடவடிக்கைகளாலும் பாதிக்கப்பட்டிருந்த சிலர் அவனை வெட்டிக் கொன்றனர். அதற்கு பதிலாக இந்து முன்னணியை சேர்ந்த ஹிந்து பயங்கரவாதிகள் சம்பந்தமில்லாமல் மத துவேஷத்தை உண்டாக்கும் வகையில் தமிழ்நாடு முஸ்லிம் மன்னேற்றக் கழகம் என்ற தொண்டு நிறுவனத்தின் தென்காசி தலைவர் மைதீன் சேட்கான் மீது பயங்கரவாத தாக்குதல் தொடுத்து அதில் இறைவனின் அருளால் அவர் உயிர் பிழைத்து சிகிச்சை பெற்று வருகின்றார்.


இந்நிலையில் பயங்கரவாதி குமார் பாண்டியனின் கொலை வழக்கிலும் அது தொடர்பான பல்வேறு வழக்குகளிலும் கைது செய்யப்பட்ட சிலர் தற்போது நீதி மன்றத்தால் ஜாமினில் விடுவிக்கப்பட்டு தென்காசி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகின்றனர். இந்நிலையில் காவல் நிலையத்தில் கையெழுத்திட வரும் இவர்களை படுகொலை செய்திடும் நோக்கில் பல நாட்களாக பயங்கரவாதி குமார் பாண்டியனின் சகோதரர்கள் பயங்கரவாதி சேகர், பயங்கரவாதி செந்தில் அகியோர் தலைமையில் இந்து முன்னணியை சேர்ந்த பயங்கரவாதிகள் பலர் திட்டம் தீட்டி தொடாந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் பயங்கரவாதி குமார் பாண்டியன் கொலை வழக்கில் ஜாமினில் விடுவிக்கப்பட்ட சில முஸ்லிம்கள் தென்காசி காவல் நிலையத்திற்கு கையெழுத்திட மோட்டர் பைக்குகளில் வந்துள்ளனர் அப்போது அவர்களை பின்தொடாந்து காரில் வந்த இந்து முன்னணியை சேர்ந்த பயங்கரவாத கும்பல் அவர்கள் மீது பயங்கர வெடிகுன்டுகளை வீசி கொடூர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர் இதில் சம்பவ இடத்திலேயே அசன் கனி மற்றும் நசீர் என்ற முஸ்லிம்களும் மற்றும் மருத்துவமனையில் நாகூர் மீறான் என்ற முஸ்லிமும் வீர மரனமடைந்தனர்.மற்றும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகின்றனர்.


தொடர்ந்து இந்த ஹிந்த தீவிரவாதிகள் அங்குள்ள வணிகர்கள் மீதும் அப்பாவி முஸ்லிம் மக்கள் மீதும் வெடிகுன்டு போன்ற பயங்கர ஆயதங்களை கொண்டு கொடும் தாக்குதலில் ஈடுபட்டதால் அங்குள்ள மக்களும், முஸ்லிம்களும் தற்காப்பக்காக நடத்திய எதிர் தாக்குதலில் ரவி, சேகர், செந்தில் என்ற மூன்று இந்து முன்னணியை சேர்ந்த ஹிந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதைத்தொடாந்து பயங்கர கலவரம் மூன்டதால் மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் மற்றும் காவல் துறை அதிகாரி ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் சுமார் 2000 த்திற்கும் மேற்ப்பட்ட போலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படடுள்ளனர். கலவரத்தில் உயிரழந்தவர்களின் உடல்களை அப்புரப்படுத்துவதில் முஸ்லிம் அமைப்புக்களை சோந்த தொண்டர்களும், ஆம்புலன்சுகளும் காவல் துறைக்கு துனையாக ஈடுபட்டன.

தமிழக அரசு உடனடியாக செயல்பட்டு வெடிகுன்டு போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ள பயங்கரவாத அமைப்பான ஹிந்து முன்னணியின் அலவலகங்களை தமிழகமெங்கும் சோதனை செய்து தமிழகத்தின் அமைதிக்கும் சமூக நல்லினக்கத்திற்கும் தீங்காக இருக்கும் இந்து முன்னணியின் தலைவரான பயங்கரவாதி ராமகோபாலனை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் அத்துடன் இந்த சம்பவத்திற்கு காரனமாயிருந்த அத்தனை ஹிந்து தீவிரவாதிகளையும் கைது செய்வதோடு பயங்கரவாத அமைப்பான இந்து முன்னணியையும் தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.