தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூன் 30, 2007

பர்தா சர்ச்சை – கருத்துக்களை வாபஸ் பெற்றார் பிரதிபா பட்டில்

Filed under: இந்திய ஜனாதிபதி, பிரதிபா பட்டில் — முஸ்லிம் @ 2:15 முப

பிரதிபா பட்டில்

பெண்களுக்கு முகலாயர் அளித்த மரியாதை பர்தா : முஸ்லிம் தலைவர்களிடம் பிரதீபா விளக்கம் புதுடில்லி : “பர்தா அணிவதிலிருந்து முஸ்லிம் பெண்கள் வெளிவர வேண்டும்’ என்று பேசி சர்ச்சையில் சிக்கிய பிரதீபா பாட்டீல், தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார். தன்னை சந்திக்க வந்த முஸ்லிம் தலைவர்களிடம், “பர்தா என்பது பெண்களுக்கு முகலாயர்கள் அளித்த மரியாதை’ என்று தெரிவித்துள்ளார்.

முகலாய படையெடுப்பின் போது, பெண்களை பாதுகாக்க அவர்கள் பர்தா அணிய வைக்கப்பட்டதாகவும், தற்போது அது போன்ற நிலை இல்லாததால், பர்தா பழக்கத்தில் இருந்து முஸ்லிம் பெண்கள் வெளிவர வேண்டும் என்றும் ஜனாதிபதி தேர்தல் காங்., கூட்டணி வேட்பாளர் பிரதீபா பாட்டீல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது, தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார் பிரதீபா பாட்டீல்.சமீபத்தில் ஜமாயத் உலேமாஇஹிந்த மவுலானா அர்ஷத் தானி, காங்., மூத்த தலைவர் ஹசன் அலி, டில்லி மேயர் தலத் சுல்தான் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள், பிரதீபா பாட்டீலை சந்தித்து பேசினர்.

அப்போது, இந்தியாவின் மேம்பாட்டில் முஸ்லிம் தலைவர்களின் பங்களிப்பை திரும்பத் திரும்ப வெகுவாக பாராட்டினார் பிரதீபா. முஸ்லிம் பெண்கள் பர்தா அணியும் விஷயத்தில், தான் கூறிய கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டு விட்டது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.தொடர்ந்து, “முகலாயர்கள் பெண்களுக்கு பெரிதும் மதிப்பும் மரியாதையும் அளித்தனர். பர்தா என்பது பெண்களுக்கு முகலாயர்கள் அளித்த மரியாதை தான்’ என்று கூறினார் பிரதீபா.

பிரதீபாவின் விளக்கமும், மறுப்பும் தங்களை பெரிதும் திருப்தியடைய வைத்ததாக முஸ்லிம் தலைவர்கள் தெரிவித்தனர்.ஜமாயத் அமைப்பு, அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது. இந்த அணியில் 10 எம்.எல்.ஏ.,க்களும், ஒரு எம்.பி.,யும் உள்ளனர். அவர்களின் ஓட்டுகளை பெறும் முயற்சியாகவே, முஸ்லிம் தலைவர்களை பிரதீபா சந்தித்தார். அதில், அவர் வெற்றி பெற்றுள்ளார்.

நன்றி : தினமலர்

ஜூன் 19, 2007

பிரதிபா பட்டிலுக்கு ஐக்கிய தவ்ஹீத் ஜமாத்(ITJ) கண்டனம்

ஜனாதிபதி வேட்பாளர் பிரதீபா பட்டீல் பேச்சுக்கு ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.

ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத்தின் கடலூர் மாவட்ட தலைவர் எ.கலிமுல்லாஹ் விடும் அறிக்கையின் விபரம் வறுமாறு:

முஸ்லிம் பெண்கள் பர்தா அனியக்கூடாது என்று ராஜஸ்தான் கவர்னரும், காங்கிரஸ் கூட்டணியுடைய ஜனாதிபதி வேட்பாளருமான பிரதிபா பட்டீல் ஒரு கூட்டத்தில் பேசி இருப்பது முஸ்லிம்களுடைய மத உணர்வை புண் படுத்தியுள்ளது. உயரந்த பொருப்பில் உள்ளவர்கள் எந்த கருத்தை தெரிவிப்பதாய் இருந்தாலும் அது சம்மந்தமாக அனைத்தையும் தெரிந்து கருத்தை வெளிப்படுத்தவேண்டும். ஆதுவும் மத பிற சம்மந்தமான கருத்தை வெளியிடுவதை தவிர்த்துககொள்ளவேண்டும். ஜனாதிபதி வேட்பாளர் என்ற எண்ணம் இல்லாமல் உண்மைக்கு புறம்பான பர்தா சம்மந்தமான முஸ்லிம்களின் நம்பிக்கை என்ன? என்பதை துளியும் தெரியாமல் பர்தா சம்மநதமாக பிரதிபா பட்டீல் கருத்து தெரிவித்திருப்பது இவர் ஜனாதிபதி அந்தஸ்துக்கு சற்றும் தகுதி இல்லாதவர் என்பது தெளிவாகின்றது.

இதுப்போன்ற பொறுப்பற்ற தனமாக பிற மத விசயங்களில் எதுவும் தெரியாமல் தலையிட்டு முஸ்லிம்களின் மத உணர்வை புண் படுத்தும் விதமாக கருத்து கூறிய பிரதீபா பட்டீலை கடலூர் மாவட்ட ஐக்கிய தவஹீத் ஜமாஅத் வண்மையாக கணடிக்கின்றது.

பிரதீபா பட்டீல் போன்ற பொறுப்பற்றவர்களை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதை காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று கடலூர் மாவட்ட ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கின்றது.

இவன்
ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் (ITJ)
(அரசு பதிவு என் 53/2007)
(ததஜ வில் இருந்து உடைந்து உருவான அமைப்பு)
93.Big Bazaar Street, Parangipettai-608502.
PH: 04144 – 243386, 243789, 252312, 243486, Fax: 253814. Cell: 9443402576.
E.mail:
itjcuddist@gmail.com

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.