தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஓகஸ்ட் 27, 2008

முஸ்லிம் லீக் – ஆர்.எஸ்.எஸ். நேர்காணல் நிகழ்ச்சி

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 3:25 பிப

சன் நியூஸ் தொலைக்காட்சியில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., ஆர்.எஸ்.எஸ். கொள்கைபரப்புச் செயலாளர் திருமதி ராதாராஜன் ஆகியோர் பங்கேற்கும் அமர்நாத் ஆலய விவகாரம் பற்றிய நேர்காணல் நிகழ்ச்சி, 23-08-2008 சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கும், இதன் மறுஒளிபரப்பு 25-08-2008 திங்கள் மாலை 5.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது – காணத் தவறாதீர்கள்.

லால்பேட்டை இணைய தளம்

பறவைகளின் அதிசய உலகம்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 3:24 பிப

“பறவைகளின் அதிசய உலகம்”

கோவை திருக் குர்ஆன் அறக்கட்டளை

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO

.

தமிழ் முஸ்லிம் மீடியா

சுதந்திர தின அணிவகுப்பு – மதுரை – புகைப்பட காட்சிகள் (PHOTO GALLERY PART-02)

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 3:23 பிப


தமிழகத்தின் மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா கடந்த ஆகஸ்ட் 15, 2008 அன்று மதுரையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது தொண்டர் படையை கொண்டு இந்திய சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் அணிவகுப்பு நடத்தியது. அந்த அணிவகுப்பின் புகைப்படக் காட்சிகளின் இரன்டாம் பகுதியை காண கீழே உள்ள சுட்டியில் சொடுக்கவும். (முதல்பகுதி இங்கே..)

பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (PFI)

சுதந்திர தின அணிவகுப்பு – மதுரை

புகைப்பட காட்சிகள் (PHOTO GALLERY PART-02)

.
படங்கள் உதவி : கோவை தங்கப்பா

அரசியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் அழைப்பிதழ்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 3:22 பிப

எந்த சமுதாயம் தன்னைத்தானே மாற்றிக் கொள்ளவில்லையோ…அந்த சமுதாயத்தை அல்லாஹ் மாற்றுவதில்லை (அல் குர்ஆன்)

அரசியல் அதிகாரத்தை நோக்கி….
இரவல் அரசியலுக்கு விடை கொடுக்க..
முஸ்லிம்களின் முதல் பொது அரசியல் கட்சி

இந்திய தேசிய மக்கள் கட்சி

IDMK யின்

அரசியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
அழைப்பிதழ்

நாள் : 22-08-2008 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.00 மணியளவில்
இடம் : மூர் தெரு சந்திப்பு
மண்ணடி, சென்னை 600001

தலைமை

A.K சான் பாஷா (வட சென்னை மாவட்ட அமைப்பாளர் )

வரவேற்புரை

S.P. ஷேக் அப்துல்லா (திருவள்ளுர் மாவட்ட அமைப்பாளர்)

முன்னிலை

V.S. காஜா முகம்மது (தலைமை நிலைய பொருப்பாளர்)
D.அஸ்கர் (துறைமுக பகுதி அமைப்பாளர்)
A.B ராஜன்
S. நியமத், H. சலீம்
(R.K நகர் பகுதி அமைப்பாளர்கள்)
நேதாஜி நகர் ஷாகுல் (3 வது வட்ட அமைப்பாளர்)
சேப்பாக்கம் கலீலுர்ரஹ்மான், N. ஹமீத் பாஷா (13 வது வட்ட அமைப்பாளர்)

விளக்கவுரை

E.M. சாகுல் ஹமீது – மதுரை

வழக்கறிஞர் கண்ணன் M.A. M.L

M.I ஜஹாங்கீர் (முகவை மாவட்ட செயலாளர்)
Dr. M. பக்ருதீன் (ஆட்சி மன்ற குழு உறுப்பினர்)
V.S. வருசைக்கனி (மாநில பொதுச் செயலாளர்)
தமிழகம் S.இக்பால் (மாநில துனைப் பொதுச் செயலாளர்)

திருக்குர்ஆன் விரிவுரையாளர்
காஞ்சி அப்துல் ரவூப் பாக்கவி அவர்கள்

சிறப்புரை

M. குத்புதீன் ஐபக் M.A
(மாநில தலைவர்)

நன்றியுரை

M. அஜ்மீர் அலிகான்
(துறைமுகப் பகுதி அமைப்பாளர்)

துவண்டு கிடக்கும் சமுதாயத்தை தூக்கி நிமிர்த்திட
தூங்கிக் கொண்டிருக்கும் சமுதாயத்தை விழிக்கச் செய்திட
துள்ளிக குதித்து வாரீர் !! வாரீர்!!! வாரீர்!!!

அன்போடு அழைக்கிறது

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
தொடர்புக்கு : 9940050565 , 944417866
கீழே உள்ள புகைப்படத்தில் செடுக்கி பெரிதாக்கி பார்க்கவும்



கலைஞர் அரசே சமநீதி வழங்கு!! – MNP கருத்தரங்கம் (24.08.2008) திரன்டு வாரீர்…

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 3:20 பிப

எந்த சமுதாயம் தன்னைத்தானே மாற்றிக் கொள்ளவில்லையோ…அந்த சமுதாயத்தை அல்லாஹ் மாற்றுவதில்லை (அல் குர்ஆன்)

அரசியல் அதிகாரத்தை நோக்கி….
இரவல் அரசியலுக்கு விடை கொடுக்க..
முஸ்லிம்களின் முதல் பொது அரசியல் கட்சி

இந்திய தேசிய மக்கள் கட்சி

IDMK யின்

அரசியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
அழைப்பிதழ்

நாள் : 22-08-2008 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.00 மணியளவில்
இடம் : மூர் தெரு சந்திப்பு
மண்ணடி, சென்னை 600001

தலைமை

A.K சான் பாஷா (வட சென்னை மாவட்ட அமைப்பாளர் )

வரவேற்புரை

S.P. ஷேக் அப்துல்லா (திருவள்ளுர் மாவட்ட அமைப்பாளர்)

முன்னிலை

V.S. காஜா முகம்மது (தலைமை நிலைய பொருப்பாளர்)
D.அஸ்கர் (துறைமுக பகுதி அமைப்பாளர்)
A.B ராஜன்
S. நியமத், H. சலீம்
(R.K நகர் பகுதி அமைப்பாளர்கள்)
நேதாஜி நகர் ஷாகுல் (3 வது வட்ட அமைப்பாளர்)
சேப்பாக்கம் கலீலுர்ரஹ்மான், N. ஹமீத் பாஷா (13 வது வட்ட அமைப்பாளர்)

விளக்கவுரை

E.M. சாகுல் ஹமீது – மதுரை

வழக்கறிஞர் கண்ணன் M.A. M.L

M.I ஜஹாங்கீர் (முகவை மாவட்ட செயலாளர்)
Dr. M. பக்ருதீன் (ஆட்சி மன்ற குழு உறுப்பினர்)
V.S. வருசைக்கனி (மாநில பொதுச் செயலாளர்)
தமிழகம் S.இக்பால் (மாநில துனைப் பொதுச் செயலாளர்)

திருக்குர்ஆன் விரிவுரையாளர்
காஞ்சி அப்துல் ரவூப் பாக்கவி அவர்கள்

சிறப்புரை

M. குத்புதீன் ஐபக் M.A
(மாநில தலைவர்)

நன்றியுரை

M. அஜ்மீர் அலிகான்
(துறைமுகப் பகுதி அமைப்பாளர்)

துவண்டு கிடக்கும் சமுதாயத்தை தூக்கி நிமிர்த்திட
தூங்கிக் கொண்டிருக்கும் சமுதாயத்தை விழிக்கச் செய்திட
துள்ளிக குதித்து வாரீர் !! வாரீர்!!! வாரீர்!!!

அன்போடு அழைக்கிறது

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
தொடர்புக்கு : 9940050565 , 944417866
கீழே உள்ள புகைப்படத்தில் செடுக்கி பெரிதாக்கி பார்க்கவும்



ஓகஸ்ட் 19, 2008

வீக்கான லீக் – புதுக் கட்சி குத்பதீன் பாய்ச்சல்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 7:59 பிப

வீக்கான லீக்
புதுக் கட்சி குத்பதீன் பாய்ச்சல்
முஸ்லிம் சமுதாயத்திற்கான புதிய அரசியல் வரவு இந்திய தேசிய மக்கள் கட்சி (ஐ.டி.எம்.கே) “இஸ்லாமிய பணக்காரர்களும் இணைந்த அமைப்பாக மாறிவிட்டது முஸ்லிம் லீக்” என்ற குற்றச் சாட்டுடன் நம்மை சந்தித்தார் ஐ.டி.எம்.கே வின் மாநிலத் தலைவர் குத்புதீனு் ஐபக். 25 ஆன்டுகளுக்கு முன் நெல்லை மாவட்டம் மீனட்சிபுரத்தில் ஏற்ப்பட்ட மதக் கலவரத்தால் பாதிக்கப் பட்ட தலித் மக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்துக்கு மாறினார்கள். அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கூறியூர் கிராமத்தில் தேவேந்திர மக்கள் பலர் மதம் மாறினர். அதை முன்னின்று நடத்திய முன்னால் போலீஸ்காரர் முகம்மது அலி ஜின்னா, ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய வாரிசுகளில் ஒருவர்தான் குத்புதீன் ஐபக்.

இவருடைய முதன்மை கோபம் முஸ்லிம் லீக் மீதுதான். அதுகுறித்த விமர்சனத்துடன் வந்தவரிடம், ஐ.டி.எம்.கே வின் தேவை என்ன என்பது பற்றி கேட்டோம்.

“முஸ்லிம் மக்களுக்காக பல இயக்கங்கள் இருக்கும்போது ஐ.டி.எம்.கே கட்சியை தொடங்க வேண்டிய அவசியம் என்ன?”

இது குறிப்பிட்ட மதத்திற்கான கட்சி அல்ல. ஒடுக்கப்பட்ட, பிற்ப்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கான கட்சி இது. அதே நேரத்தில் சிதறிக் கிடக்கும் முஸ்லிம்களை பெரும் அரசியல் சக்தியாக உருவாக்க வேண்டுமென்பதுதான்” எங்கள் லட்சியம்.”

“திடீரென் முஸ்லிம் லீக் மீது குற்றம் சுமத்த என்ன காரணம்?”

“தனியாக ஒரு நாட்டையே (பாக்கிஸ்தான்) பெற முடிந்த கட்சிதான் முஸ்லிம் லீக் ஆனால், இன்றைக்கு தோடதலுக்காக ஏதாவது ஒரு கட்சியில் சீட் வாங்கி அந்த கட்சி சின்னத்திலேயே போட்டியிட்டு அதற்கு பிரதிநிதியாகிவிடுகின்ற நிலைமைதான் உள்ளது. அதற்கு இப்ப எம்.பி யாக இருக்கிற காதர்மொய்தீன் முஸ்லிம்கள் நலன் பற்றியோ, தமிழ்நாட்டு நலன் பற்றியோ பார்லிமென்டில் பேசியிருக்கிறாரா? லீக் இன்றைக்கு எங்க சமுதாயத்திலிருந்து லீக்காகி, சீக்காகி,வீக்காகி விட்டது அதனால்தான் புதிதாக தோன்றிய த.மு.மு.க தவ்ஹீத் ஜமாத் அமைப்புகள் வேகமாக வளர்ந்தன். ஆனால் அவர்களும் சரியில்லை, இவர்களை அடையாளம் காட்ட எங்கள் இந்திய தேசிய மக்கள் கட்சி பாடுபடும்.

என்று சொன்ன குத்புதீன் ஐபக் “தமிழகத்தன் பல பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் ஐ.டி.எம்.கே யின் கிளைகளை தொடங்கி வருகிறோம்” என்றார். இஸ்லாமியர்களுக்கான இந்த புதிய அமைப்புக்கு தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் ஆதரவும் ஆலோசனையும் வழங்கி வருவதால் ஐ.டி.எம்.கே யின் கவனம் நாடாளுமன்றத் தேர்தல் களத்தின் மீது பதிந்துள்ளது.

– சேகுவேரா

நன்றி : நக்கீரன் 21.06.2008

.
“முஸ்லிம் மக்களுக்காக பல இயக்கங்கள் இருக்கும்போது ஐ.டி.எம்.கே கட்சியை தொடங்க வேண்டிய அவசியம் என்ன?”
.
சமூக ஒற்றுமைக்கு என்ன செய்வீர்கள்?
.
தமுமுக அரசியலுக்கு வந்துவிட்டதே ஐடிஎம்கே வை கலைத்து விடுவீர்களா?
.
என பல கேள்விகளுக்கும் ஐடிஎம்கே தலைவர் குத்புதீன் ஐபக் தமிழன் வடி யில் அளித்து பேட்டியின் ஆடியோவை கேட்பதற்கு….
.
“ஓற்றுமையை நோக்கி” கலந்துரையாடல் (FULL AUDIO)

சுதந்திர தின அணிவகுப்பு – மதுரை – புகைப்பட காட்சிகள் (PHOTO GALLERY)

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 7:57 பிப

தமிழகத்தின் மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா கடந்த ஆகஸ்ட் 15, 2008 அன்று மதுரையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது தொண்டர் படையை கொண்டு இந்திய சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் அணிவகுப்பு நடத்தியது. அந்த அணிவகுப்பின் புகைப்படக் காட்சிகளை காண கீழே உள்ள சுட்டியில் சொடுக்கவும்.

பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (PFI)

சுதந்திர தின அணிவகுப்பு – மதுரை

புகைப்பட காட்சிகள் (PHOTO GALLERY)

.
படங்கள் உதவி : கோவை தங்கப்பா

என் மகன் கபூர் குற்றவாளி அல்ல – குண்டு வெடிப்பு சதியின் பின்னணியில் TNTJ – கபூரின் தந்தை பேட்டி

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 5:25 பிப

தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க முயன்ற தீவிரவாதி அப்துல் கபூர் நெல்லை பேட்டையில் கைது செய்யப்பட்டதாக காலை நாளிதழ்கள் கடந்த ஜூலை 28ம் தேதி காலை முழுக்கமிட்டபோது தமிழகமே ஏன் இந்தியாவே அதிர்ச்சி அடைந்தது என கூறலாம்.
ஜூலை 27ம் தேதி நள்ளிரவு நேரத்தில் நெல்லை களக்காடு காவல் நிலையத்தில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.மஞ்சுநாதா சேக் அப்துல் கபூர் (39) I.E.D.(Improvised Explosive Devices) செய்வதில் கைதேர்ந்தவர். மேலும், நெல்லை டவுணைச் சேர்ந்த ஹீரா காவல்துறையிடம் தெரிவித்த தகவலின் பேரில் கைது செய்யப்பட்டதாக கூறியதுடன் கபூர் வீட்டில் கைப்பற்றப்பட்டதாக சில பேட்டரி மற்றும் வயர்கள் போன்றவற்றை காண்பித்தனர்.

நாம் மக்கள் உரிமைக்காக கபூர் தந்தை சேக் முகம்மதுவுடன் சந்தித்ததில் அவர் கூறியதாவது. ‘என் மகனின் மைத்துனர் திருமணம் மற்றும் மறுவீடு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருந்த கபூரை மதியம் சுமார் 3.30 மணிக்கு என் வீட்டுக்கு வந்த இருவர், ‘நாங்கள் R.D.O அலுவலகத்திலிருந்து விசாரணைக்காக கபூர் வர வேண்டும் என கூறினார். அப்போது எனது வீட்டை அடையாளம் காட்ட வந்த தவ்ஹீத் ஜமாத்தைச் சார்ந்த செய்யது அலியிடம் நான் எனது மகன் அவனது மாமனார் வீட்டில் இருப்பதாக கூறி அனுப்பிவிட்டேன். பின்பு அவன் வந்தவர்களால் அழைத்து செல்லப்பட்டு வெகு நேரமாகியும் வராததால் பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தேன். மறுநாள் காலையில் செய்தித்தாள்களை பார்த்த பின்னே அவன் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டதை அறிந்து கொண்டேன். அவன் தவ்ஹீத் ஜமாத்தில் பரங்கிமலை கிளை பொருளாளராக செயல்பட்டு வந்த நிலையில் எங்கள் ஜமாத்தில் பிரச்சினை செய்து பேட்டை தவ்ஹீத் ஜமாத்தினரை கண்டித்தான். அவர்கள்தான் போலீசில் போட்டு கொடுத்து அப்பாவியான என் மகனை குற்றவாளி போல ஆக்கிவிட்டனர் என கூறினார்.

கபூரின் மனைவி ஜீனத் நஜ்மா நம்மிடம், ‘அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். என் கணவர் சமீபத்தில் ஆலந்தூரில் உள்ள ஒரு பள்ளியில் பாலியல் முறைகேடு நடந்தபோது அதை வெளிகொணர்ந்து நடவடிக்கை மேற்கொண்டார். அப்படிப்பட்டவரை தீவிரவாதியாக சித்தரிப்பது மிகுந்த மன உளைச்சலாக உள்ளது’. த.மு.மு.க.தலைமை இதில் தலையிட்டு என் கணவரை காப்பாற்ற வேண்டும் என கண்ணீருடன் கூறினார்.
கடந்த 28ம் தேதி காலையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹீரா பிடிபட்டு அவர் கொடுத்த தகவலின் பேரில் கபூர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், ஹீராவின் தந்தை, கபூர் செய்யப்பட்டு சுமார் 4 மணி நேரம் கழித்து தன் மகனிடம் போனில் பேசியுள்ளார். முதலில் வெளி மாநிலங்களுடன் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டது. பின்பு, காவல்துறையினர் விசாரணையில் அவ்வாறு இல்லை என்பது தெளிவானது. ஐ.நு.னு. வெடி மருந்துகள் செய்வதில் வெறும் 7வது வகுப்பே படித்த கபூர் தேர்ச்சி பெற்றவர் எனக் கூறப்பட்டதற்கும், அவர் வீட்டில கைப்பற்றப்பட்ட பொருள்களுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை. அவருடைய வீட்டில் பொருள்கள் கைப்பற்றப்பட்டபோது யாரிடமும் கையெழுத்து பெறப்படவுமில்லை.
மேலும், மதுரை பாண்டி கோவில் பகுதியில் கைப்பற்றப்பட்டதாக கிடைத்த வெடி பொருட்கள் எதுவும் பத்திரியாளர்களுக்கு காட்டப்படவில்லை. இது அல்லாமல் கடையநல்லூர் அருகே சேர்ந்தமரம் பகுதியில் பெருமளவில் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டு 3 பேர் (முஸ்லிம் அல்லாதோர்) கைது செய்யப்பட்டுள்ளனர். இத்துடன் பெங்களுர் வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட மைசூரை சேர்ந்த வெடிஉப்பு வியாபாரிகள் சந்துரு, சிக்க கவுடா ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் சிவகாசியை சேர்ந்த பன்னீர் செல்வம், தாமஸ், ராஜ்பால் ஆகியோரை மைசூர் மேட்டுகாளி போலீசார் தேடி வருகின்றனர்.
இவையெல்லாம் ஊடகங்களில் முறையாக வெளிக்கொணரப்படவில்லை. ஆனால், இரண்டு வருடங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தை தகர்க்கப் போவதாக நெல்லையிலிருந்து இ-மெயிலில் அனுப்பியதாக நெல்லையில் உள்ள ஒரு கல்லூரியின் பேராசிரியர் கைது செய்யப்பட்டு அதில் உண்மை இல்லை என பின்பு விடுவிக்கப்பட்டார். அவ்வழக்கு பின்பு என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியாமலேயே போய் விட்டது.
செய்தி : நெல்லை உஸ்மான்.

ஆகஸ்ட் 15 – தடையை தாண்டிய இஸ்லாமிய படை

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 5:23 பிப
பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (PFI)

சுதந்திர தின அணிவகுப்பு – மதுரை

புகைப்பட காட்சிகள் (PHOTO GALLERY)

ஆகஸ்ட் 15 – தடையை தாண்டிய இஸ்லாமிய படை


தமிழகத்தின் மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு என மூன்று மாநிலங்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது தொண்டர் படையை கொண்டு இந்திய சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் அணிவகுப்பு நடத்த போவதாக அறிவித்த தினத்தில் இருந்து இந்த அணவகுப்பை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட ஃபாசிச சக்திகளோடு உளவுத்துறை, காவல் துறை என அரசின் அனைத்து துறைகளும் கங்கனம் கட்டிக் கொண்டு களம் இறங்கின. காவல்துறையும், உளவுத் துறையும், ஃபாசிச சக்திகளோடு சோந்து பல சதித் திட்டங்களை திடு்டி நிறைவேற்றின. தமிழகத்தில் இது இன்னும் கனஜோராக நடந்தது.

தமிழக காவல்துறை இன்னும் ஒரு படி மேலே போய் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் தீவிரவாதிகளாக சித்தறிக்கும் முயற்சியில் இரங்கியது. இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டார்கள், வெடி குண்டு புரளிகள் கிளப்பப்பட்டன, தினமலர் போன்ற ஃபாசிச ஆதரவு பத்திரிகைகள் இந்த பதட்டத்தை சற்றும் குறையாமல் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியல் ஈடுபட்டன.


அதிராம்பட்டினம், காயல்பட்டினம், கீழக்கரை என இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வரும் ஊர்களில் முஸ்லிம்களின் வீடுகள் சோதனையிடப்பட்டன, முஸ்லிமகள் சித்திரவதைக்காளாக்கப்பட்டார்கள். இதை எந்த சமுதாய பத்திரிகைகைளும் கண்டிக்காத நிலையில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த சில சகோதரர்களால் நடத்தப்பட்டு வரும் அதிரை எக்ஸ்பிரஸ் என்ற வலைப்பதிவு மட்டும் காவல்துறை மற்றும் ஃபாசிச பத்திரிகை சக்திகள் நடத்தி வரும் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களை கண்டித்து பல கட்டுரைகளை வெளியிட்டு இந்த இக்கட்டான சமயத்தில் சமுதாயத்தின் குரலாக அவ்வப்போது ஒலித்து வந்தது சற்று ஆறுதலான செய்தி.

தமிழகமெங்கும் மனித நீதிப் பாசறையின் உறுப்பினர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்டனர், காவல்துறைக்கு முறைப்படி தகவல் அளித்து விட்டு நடந்த மனித நீதிப் பாசறையின் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகைகள் ஃபாசிச பத்திரிகைகளால் பயங்கரவாத செயலாக சித்தறிக்கப்பட்டன. எப்படியாவது இந்த அணிவகுப்பை தடுத்து விடுவது என்று மனித நீதிப் பாசறையின் உறுப்பினர்கள் மிரட்டப்பட்டார்கள். இறுதியாக இந்த அணிவகுப்பை தடைசெய்து காவல் துறை ஆனை பிறப்பித்தது. இதை எல்லாம் எதிர் பார்த்திருந்த மனித நீதிப் பாசறை உடனடியாக இன்றும் சாகாமல் இருக்கும் இந்திய நீதித்துறையை அனுகியது. உடனடியாக காவல்துறையின் தடையை நீக்கிய நீதிமன்றம் மனித நீதிப் பாசறை தனது சுதந்திர தின அணிவகுப்பை எந்த சிரமமும் இல்லாமல் நடத்த உத்தரவு பிறப்பித்தது.

திட்டமிட்டபடி கடந்த ஆகஸ்ட் 15, இந்திய சுதந்திர தினத்தன்று அனைத்து தடைகளையும் தகர்த்த மனித நீதிப் பாசறையின் போராளிகள் தங்கள் சுதந்திர தின அணிவகுப்பை செவ்வென நடத்திக்காட்டினர். மதுரை மாட்டுத்தாவனி பேரூந்து நிலையம் அருகில் உள்ள விறகுபேட்டையில் வெள்ளையருக்கு எதிராக போராடிய இந்திய சுதந்திர போராளியான மாவீரன் மருதநாயகம் பெயரில் அமைக்கப்பட்டிருந்த மைதானத்தில் சரியாக மாலை 3.00 மணிக்கு அணிவகுப்பு துவங்கியது.
மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் மறியாதைக்குறிய அபுபக்கர் சாஹிப் அவர்கள் அணிவகுக்க தயாரான முஸ்லிம் படையினரின் முதல் மறியாதையை பெற்றுக் கொள்ள அணிவகுப்பு துவங்கியது. 20 வீரர்கள் அடங்கிய “பேன்ட் ட்ரூப்ஸ்” எனப்படும் இசைக்குழுவினர் தேசிய ஒருமைப்பாட்டு கீதமான “ஸாரே ஜஹான் சே அச்சா” என்ற கீதத்தை உணர்ச்சி பெருக்போடு வாசிக்க மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் 800 போராளிகள் அணிவகுத்து செல்ல நிகழச்சிகள் ஆரம்பமாயின.


பின்னர் மனித நீதிப் பாசறையின் பொதுச்செயளாலர் திரு. ஏ. யா முஹைதீன் தனது வரவேற்புரையை வழங்கினார், பின்னர் மனித நீதிப் பாசறையின் தலைவர் திரு.முகம்மது அலி ஜின்னா அவர்கள் சுதந்திர தின உறுதிமொழியை வாசித்தார்.

” இறைவனின் திருப்பெயரால் இந்த உறுதி மொழியை எடுத்து கொள்கின்றோம், சுதந்திர போராட்டங்களில் தங்கள் இன்னுயிரையும், உடைமைகளையும், உடலுறுப்புக்களையும் இழந்து ஏற்றி வைத்த இந்த சுதந்திர கனலை நாங்கள் என்றும் ஏந்திச் செல்வோம், அரும்பாடு பட்டு பெறப்பட்ட இந்த சுதந்திரத்தை நாங்கள் எந்த வலை கொடுத்தேனும் தக்க வைத்து கொள்வோம். எங்கள் தாய்த்திருநாடு இந்தியாவையும், இந்தியர்களனைவரையும் நாங்கள் நேசிக்கின்றோம், இனமோ,நிறமோ, மொழியோ, எவ்வித பேதங்களும் எம்மை பிறிக்காது. பிறப்பினால் யாரும் உயாந்தோர், தாழ்ந்தோர் இல்லை, நாட்டின் சுதந்திரமான அரசியல் சட்ட திட்டங்களையும், பாதுகாப்பையும், நீதியையும் நாங்கள் பாதுகாப்போம். சுதந்திரம் என்பது எமது பிறப்புரிமை, எமது நாடு ஆதிக்க சக்திகளின் முன் அடிமைப்படுத்தப்படுவதை நாம் ஒருபோதும் அனுமதியோம், இந்திய மக்களை தூண்டி விட்டு அவர்களிடையே கலவரத்தை விதைத்து அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளச் செய்யும் ஃபாசிச சக்திகளை நாம் தோற்கடிப்போம், வேற்றுமையில் ஒற்றுமை எனும் இந்திய தேசியக் கொள்கைகைய நாம் பற்றிப்பிடிப்போம், இதற்கு கடவுள் சாட்சியாக இருக்கட்டும்”

என்ற உறுதிமொழியை மனித நீதிப் பாசறையின் தலைவர் திரு. முகம்மது அலி ஜின்னா அவர்கள் வாசிக்க திரன்டிருந்த மக்கள் கூட்டமும் அணிவகுத்து நின்ற இஸ்லாமிய படையும் உறுதிமொழியை சோந்து கூறி உறுதி மொழி எடுத்தது. பின்னர் அஸ்ஸாம் மாநிலத்தின் “யுனைட்டட் டெமாக்ரட்க் ஃப்ரன்ட்” என்ற அமைப்பின் தலைவரும் நிகழச்சியின் சிறப்பு விருந்தினருமான ஹாபிழ் ரஷீத் சவுத்திரி அவர்கள் தனது உரையை ஆரம்பித்தார், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் பணிகளை புகழந்த அவர் கட்டாயம் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அரசியில் அடியெடுத்து வைக்க வேண்டும் என வலியுருத்தினார். அதன் பின்னர் பேசிய உயர் நீதி மன்ற மூத்த வழக்குறைஞர் திரு. பவானி மோகன் அவர்கள், ஃபாசிஸ்ட்டுகள் தான் உண்மையான தீவிரவாதிகள் என்றும், இஸ்லாமியர்கள், ஹிந்துக்கள், சீக்கியர்கள் என அணைத்து தரப்பு மக்களாலும் போராடி பெறப்பட்ட சுதந்திரத்தை திருட முனைவதாகவும், இன்னும் தமிழக அரசு உடனடியாக சிறையில் உள்ள 8 வருடங்களை கடந்த கைதிகள் அனைவரையும் இன பேதம், மத பேதம் இல்லாமல் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விடுவிகக் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட வீரர்களான மறியாதைக்குறிய வைத்தியலிங்கம் அவர்கள், மறியாதைக்குறிய குலாம் அப்துல் ஆரிஃப், மறியாதைக்குறிய சேக், மறியாதைக்குறிய மாயன்டி பாரதி ஐயா ஆகியோரை மனித நீதிப் பாசறையின் தலைவர் திரு முகம்மது அலி ஜின்னா அவர்கள் கவுரவித்தார்கள்.

பின்னர் பேசத் துவங்கிய பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் திரு. ஆபபக்கர் சாஹிப் அவர்கள் பல்வுறு சோதனைகள் மற்றும் தடைகளை தாண்டி சுதந்திர தினத்தை கொண்டாட திரண்டிருந்த மக்களை புகழந்தார். அரசு தனது குடிமக்களை சரிசமமாக நடத்தாததால்தான் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா இந்த அஜென்டாவை கையில் எடுத்ததாக் குறிப்பிட்ட அவர், நாட்டில் நடைபெறும் குண்டுவெடிப்புக்களுக்கெல்லாம் முஸ்லிம்கள் மீது பலியை போட்டுவிட்டு உண்மையான குற்றவாளிகள் எளிதாக தப்பி செல்வதற்கு உதவி வரும் அரசை வண்மையாக கண்டித்த அவர், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த பிரச்சினைகளை மறைக்க மத்திய அரசே அஹமதாபாத்தில் குண்டுவெடிப்புக்களை நிகழ்த்தியாதாக பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சுஷ்மா சுவராஜின் பேச்சை குறிப்பாக சுட்டிக் காட்டி பேசினார். 1993 ல் இருந்து நாட்டில் நடைபெற்ற அணைத்து குண்டுவெடிப்புக்களையும் விசாரிக்க ஒரு சுதந்திரமான கமிசனை அமைக்க கோரிக்கை விடுத்தார். இந்தியா சுதந்திரமடைந்த கடந்த 61 வருட காலமாக இந்திய முஸ்லிம்கள் அரசியலில் நேரேதிர் நிலையை எடுத்ததன் விளைவு இந்திய முஸ்லிம்கள் சொல்லெனா துயருக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். இனிவரும் காலங்களில் அரசியல் அதிகாரங்களை கைப்பற்றுவதங்காக வேண்டி இஸ்லாமியர்கள் நேரடி அரசியலில் ஈடுபட வேண்டும் இன்னும் தலித்துகளோடு கைகோர்த்து பணி செய்ய வேண்டும் என்றும் குறிபபிட்டார்.

பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் திரு. ஆபபக்கர் சாஹிப் அவர்களின் உரைக்கு பின்னர் அஸ்ஸாம் மாநிலத்தின் “யுனைட்டட் டெமாக்ரட்க் ஃப்ரன்ட்” என்ற அமைப்பின் தலைவரும் நிகழச்சியின் சிறப்பு விருந்தினருமான ஹாபிழ் ரஷீத் சவுத்திரி அவர்களும், நீதி மன்ற மூத்த வழக்குறைஞர் திரு. பவானி மோகன் அவர்களும், NCHRO செக்கரட்டரி SMA ஜின்னா ஆகியோரும் கவுரவிக்கப்பட்டார்கள்.


பின்னர் மனித நீதிப் பாசறையின் துனைத் தலைவர் திரு. தெஹ்லான் பாக்கவி் அவர்கள் தனது சிறப்புரையை துவக்கினார், இந்திய சுதந்திரப் போரில் தங்கள் விகிதாச்சாரத்தை விட அதிக எண்ணிக்கையில் பங்கெடுத்து உயிர் உடமைகளை இழந்த இந்த இஸ்லாமிய சமுதாயத்திற்கு இன்று இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடப்படுவதற்கு அரசே அனுமதி மறுக்கும் நிலையை சுட்டிக்காட்டி பேசுகையில் “இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் உரிமை இந்திய முஸ்லிம்களுக்கே இல்லை என்றால் வேறு யாருக்குமு் அந்த உரிமை கிடையாது” என்றும், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை விதித்த காவல் துறையை கடுமையாக கண்டித்த அவர் மதுரை மாநகர கமிசனர் நந்தகோபாலனுக்கும் ஆர்.எஸ்.எஸ ஃபாசிச சக்திகளுக்கும் இடையே உள்ள தொடர்பை விசாரிப்பதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுருத்தினார். இன்னும் தமிழக சிறைகளில் 8 வருடங்களுக்கும் மேலாக வாடிக்கொண்டிருக்கும் அனைத்து முஸ்லிம் சிறைவாசிகளையும் வரும் செப்டம்பர் 25 பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று விடுதலை செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

நிகழச்சியின் இறுதியாக மனித நீதிப் பாசறையின் பொருளாலரும், விடியல் வெள்ளி ஆசிரியருமான திரு. எம். முகம்மது இஸ்மாயில் அவர்கள் நன்றியுரை வழங்கினார் அதன் பின்னர் கூடியிருந்த கூட்டம் அமைதியாக கலைந்து சென்றது.

மதுரையை உலுக்கும் வகையில் நடந்த இந்நிகழச்சியில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் திரு. ஆபபக்கர் சாஹிப் , அஸ்ஸாம் மாநிலத்தின் “யுனைட்டட் டெமாக்ரட்க் ஃப்ரன்ட்” என்ற அமைப்பின் தலைவர் ஹாபிழ் ரஷீத் சவுத்திரி, மனித நீதிப் பாசறையின் தலைவர் திரு முகம்மது அலி ஜின்னா , மனித நீதிப் பாசறையின் துனைத் தலைவர் திரு. தெஹ்லான் பாக்கவி், உயர் நீதி மன்ற மூத்த வழக்குறைஞர் திரு. பவானி மோகன், மதுரை ஐக்கிய முஸ்லிம் ஜமாத் பொருளாலர் திரு. நிஷ்ட்டர் அஹமத், NCHRO செக்கரட்டரி SMA ஜின்னா உட்பட பலர் கலந்து கொண்டார்கள், நிகழச்சியை காண தமிழகமெங்கும் இருந்து பல ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரன்டு வந்திருந்தனர்.

செய்திகள் உதவி: திரு. A. முகம்மது யூசுஃப் , மிடீயா கன்வீனர், மனித நீதிப் பாசறை

இமயத்தை விஞ்சும் தியாகத்தின் சொந்தமே – சுதந்திர தின சிந்தனைகள் (AUDIO)

Filed under: IDMK — முஸ்லிம் @ 5:21 பிப


கடந்த 2007 ம் ஆன்டு இந்திய தேசிய மக்கள் கட்சியினரால் வெளியிடப்பட்ட சுதந்திர தின சிந்தனைகள் ஆடியோ வெளியீடு.

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK) சேர்ந்த ஜனாப். குத்புதீன் ஐபெக் அவர்கள் இமயத்தை விஞ்சும் தியாகத்தின் சொந்தமே!! என்ற தலைப்பில் ஆற்றிய உரையினை கேட்பதற்கு இங்கு சொடுக்கவும்.

உரையை கேட்பதற்கு அல்லது டவுன்லோட் செய்வதற்கு
CLICK HERE TO LISTEN OR DOWNLOAD
.
தமிழ் முஸ்லிம் மீடியா
காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்
Older Posts »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.