தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 13, 2008

எங்கப்பன் குதிருக்குள் இல்லை – அதிரை ஏ.எம். ஃபாரூக்

Filed under: பி.ஜே, பிராடு, Bakar, PJ, TNTJ — முஸ்லிம் @ 2:36 பிப

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பின் சகோதர, சகோதரிகளே,

நாம் வல்லத்தில் பெருந்தோல்வியுடன் நடந்த கொண்டிருக்கும் ததஜ வின் “தவ்ஹீத் எழுச்சி மாநாட்டின் செய்திகளை” தந்திருந்தோம் உடனே அலறி அடித்து கொண்டு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக தனக்கு தானே சுயமாக ஆப்ப வைத்துக் கொண்டர் அழைப்பு பணியில் அதிரை பாரூக் அவர்கள். அன்பரின் அறிவிப்பு இதோ மக்கள் பார்வைக்காக.

************************************************

அல்லாஹ்வின் திருப்பெயரால்….

தவ்ஹீத் எழுச்சி மாநாடு தகவல்கள் .

எதிர்பார்த்ததை விட மக்கள் கூட்டம் மடைதிறந்நத வெள்ளமாய் வல்லத்தில் நிரம்பி வழிந்தனர். திரண்டு வந்த மக்கள் வெள்ளத்தை உட்கொள்ள முடியாமல் திணறியது ராட்சஸ அரங்குகள்.

எந்தெந்த ஊர்களிலிருந்து எத்தனை வாகணங்களில் எவ்வளவு மக்கள் வந்தார்கள் என்ற துல்லியமான கணக்கு சொல்வதெல்லாம் மிகைப் படுத்தப் படுவதாக அமையும்.

எனது சொந்த ஊர் அதிரையிலிருந்து 30 வேன்கள் சென்றதாக அதிரை கிளை தலைவரிடமிருந்து தகவல் பெற்றுக் கொண்டேன். (அதிரையில் இருந்து 250 பேர் வந்ததாக் நாம் எழுதியுள்ளோம் வேன் ஒன்றுக்கு 10-12 பேர் வந்ததாகவும் எழுதியுள்ளார் நமது செய்தியாளர் அதை உண்மை படுத்தியுள்ளார் அதிரை பாரூக்)

இவ்வாறு ஒவ்வொரு ஊர்களிலிருந்துமாக தமிழ்நாட்டின் நாலாப் புறங்களிலிருந்தும் மக்;கள் புடைசூழ்ந்ததால் மதியத்திற்கு மேல் அரங்குகள் மக்களை பிpதுங்க தொடங்கியது. அதனால் பெண்களுக்கு மட்டும் உள்ளே தங்க அனுமதி வழங்கிவிட்டு ஆண்கள் வெளியேற்றப்பட்டனர்.

குறைபாடுகள்

எதிர்பார்த்ததை விட அதிகப்படியான மக்கள் வருகை தந்ததால் ஏற்கனவே வாக்களிக்;கப்பட்ட அடிப்படை வசதிகள் தோல்வியை தழுவின.

அதிகப்படியான மக்கள் குழுமுவார்கள் என்று ஏற்கனவே எதிர்பாரத்தது தான் ஆனால் மேல்படி நிகழ்;ச்சிகளின் ஏற்பாடுகளுக்காக நியமிக்;கப்பட்ட பொறுப்பாளர்கள் தகுதியற்றவர்கள் அவ்வளவு தான்.

100 ஏக்கர் நிலத்தை செப்பனிடுவதும் அரங்கத்திற்கான பந்தல் அமைப்பதிலுமே கவனம் செலுத்தியவர்கள் அடிப்படை வசதிகளின் மீது சரியான கவனம் செலுத்த வில்லை என்பதற்கு பல டாய்லெடட்டுகளில் பீங்கான் பதிக்கவேப் படாமல் விடப்பட்டிருப்பது ஒரு காரணமாகும்.

வதந்திகள்

அதிகமான மக்;கள் குழுமவில்லை என்று ஒருவர் கூறுவதை நம்ப வேண்டாம் ? இது வடிகட்டியப் பொய் ! (எங்கப்பன் குதிருக்குள் இல்லை!!)

மக்களுக்கான அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்தப் படவில்லை என்பது மட்டுமே உண்மை.

கஃபா செட்டப் நொறுங்கி விழுந்ததாகவும் அதனால் மக்கள் அல்லோல கல்லோப் பட்டதாக கூறுவதையும் நம்ப வேண்டாம் பொய் அதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறவில்லை.

இது பலநாட்களுக்கு முன் அதற்கான அரங்கில் செட் பண்ணும் பொழுது அந்த செட்டப் விழுந்ததும் அதை மீண்டும் அமைத்து விட்டார்கள். (இந்த வாக்கியத்திற்கும் மேலுல்ல வாக்கியத்திற்கும் நேரடி முரன்பாடு!! கவணிக்கவும்)

இறுதி தகவல்

பக்கத்தில் இயங்கும் போர் செட்டிவிலிருந்து பிவிசி பைப் மூலமாக மாநாட்டு அரங்கிற்கு இன்று தண்ணிர் கொண்டுவரப்பட்டு விட்டதது. நேற்று திரும்பிச் சென்றவர்களில் பலரும், நேற்று வரமுடியாதவர்களில் பலரும் தகவல் அறிந்து இன்று வருகை தந்தவண்ணமிருக்கின்றனர் அதனால் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. (மீண்டும் எங்கப்பன் குதிருக்குள் இல்லை!!)

அஸ்ஸலாமு அலைக்கும் அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

ஜூலை 11, 2007

முபாஹலா இஸ்லாத்தில் உள்ளதா? சுதர்சனுக்கு பதில்

Filed under: பி.ஜே, பிராடு, முபாஹலா, TNTJ — முஸ்லிம் @ 9:57 பிப

அன்பின் சகோதரர் சுதர்சன் அவர்களுக்கு,

இஸ்லாத்தைக் குறித்து நன்கு அறிந்து வைத்திருப்பதைப் போன்று அமைந்த தங்களின் கீழ்க்காணும் கேள்விகளுக்கும் இதற்கு முன்னர் தாங்கள் கேட்ட கேள்விகளுக்கும் மிக்க நன்றி!


பல்வேறு தளங்களில் இக்கேள்வியை கேட்டதில் இங்கு மட்டுமே என் கேள்வி எவ்வித எடிட்டிங்கும் இல்லாமல் பதிக்கப்பட்டுள்ளது.அதற்காக முதலில் தோழர் முகவைத்தமிழன் அவர்களுக்கு என் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

என் கேள்விக்கு பதிலளிக்க “முயன்றுள்ள” தோழர் அஸ்மின் அவர்களுக்கும் என் நன்றி.

ஆனால் உங்களின் பதில் என் கேள்விக்கு போதுமான பதிலாக இல்லை.

என் கேள்வி நேரடியானது.

1. “ஒருவர் செய்த பாவத்தை இன்னொருவர் சுமக்கமாட்டார்” எனில், ஆண்கள் தங்களுக்குள் நடத்திய கொடுக்கல், வாங்கல் போன்ற மற்று விஷயங்களில் செய்த தவறுகளுக்கு எதுவும் அறியா பச்சிளம் குழந்தைகளையும் பொதுவில் குற்றவாளி போன்று நிறுத்தி, அவர்கள் மீதும் சாபம் இறங்கட்டுமாக எனக் கூறுவது எவ்வகையில் சரியானது?

2. அறிவுப்பூர்வமான இஸ்லாம் இவ்விஷயத்திற்கு கூறும் அறிவுப்பூர்வமான விளக்கம் என்ன?

இதனை நான் மாற்று வார்த்தையில் கேட்பதானால்,

மஹாபாரத கதையில்…. ஓ! இ(த்)தி(போன)காசத்தில்(!), கட்டிய மனைவி திரௌபதியை மக்கள் மத்தியில் தன் சுயகவுரவத்தை காக்க பந்தயப்பொருளாக வைத்து சூதாடுகிறானே யுதிஷ்டிரன் – இந்து சனாதன தர்மம் அவதார புருஷனாக எடுத்துக்காட்டும் இவனின் செய்கைக்கும், அறிவுப்பூர்வமான மார்க்கமான இஸ்லாத்தை தூக்கி நிறுத்த அறிவுப்பூர்வமான விளக்கங்கள் அளித்து மற்றவர்களை மதம்மாற்ற முயலும் உங்களின் அறிஞர் பி.ஜெய்னுலாபித்தீன் மற்றும் அவரின் எதிரிகளாக இருந்த அந்த 8 பேர்களின் செய்கைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? இதனை அறிவுப்பூர்வமாக விளக்க இயலுமா?

நன்றி,
சுதர்சன்.

தாங்கள் என்ன நோக்கத்தில் இக்கேள்வியை கேட்கின்றீர்கள் என்பது புரியவில்லை. இஸ்லாத்தைக் குறித்து மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற அறிவு வேட்கையின் காரணமாக கேட்கின்றீர்கள் எனில் தங்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதத்தில் இஸ்லாம் கூறும் “முபாஹலா” குறித்தும் தங்களின் கேள்விக்கு பதில் அளிக்க கோரியும் நாம் விடுத்த வேண்டுகோளை அடுத்து எம் இஸ்லாமிய சகோதரர்களிடம் இருந்து ஏறாளமான மடல்கள் தங்களது கேள்விகளுக்கு விளக்கமாக எம்மிடம் கடந்த தினங்களில் வந்து மலை போல் குவிந்துள்ளன.

மற்றபடி தாங்கள் இங்கே கேட்டுள்ள பெரியவர் பி.ஜே நடத்திய முபாஹலா நிகழ்ச்சிக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இஸ்லாமிய வழிகாட்டல்களை தவறாக விளங்கியுள்ள பல முஸ்லிம்களைப் போன்று இவர்களும் “முபாஹலாவை” தவறாக விளங்கிய காரணத்தினாலேயே, தங்களை மக்கள் மத்தியில் நியாயவான்களாக சித்தரிக்க வேண்டி இப்படிப்பட்ட காரியங்களை செய்கின்றனர். இன்னும் தங்களின் கேள்விக்கு பதில் அளிப்பதாக கூறிக் எமக்கு நீங்கள் கூறிய பெரியவர் பி.ஜே அவர்களின் இயக்கத்தினரும் ஒரு மடல் அனுப்பியிருந்தனர் அம்மடலில் முபாஹலா இஸ்லாத்தில் உள்ளதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக எம்மை ஒரு முபாஹலாவிற்கு அழைத்திருந்தனர் இதுதான இவர்களின் நிலை.

எனவே தாங்கள் இவர்களின் இச்செயல்களை இஸ்லாத்தோடு தயவுசெய்து தொடர்பு படுத்த வேண்டாம். “ஒருவரின் சுமையை மற்றொருவர் சுமக்க இயலாது” என அறிவுறுத்தும் இஸ்லாத்தின் கொள்கைகளை தெளிவாக அறிந்துள்ள இத்தகையோர், “எவ்வகையில் தாய், தந்தையர்கள் செய்த தவறுக்கான தண்டனையை குழந்தைகளும் பெறும் விதத்தில் சாபம் கோர இஸ்லாம் கூறும்” என்ற சாதாரண கேள்வி மனதில் எழும் அளவிற்கு கூட சிந்தனை செய்யும் மனநிலையில் இவர்கள் இல்லை என்பதை தான் இச்சம்பவங்கள் காட்டுகின்றன.

எப்பொழுதும் எல்லா இடத்தும் கூறப்படுவது போல், முஸ்லிம் அல்லாத மாற்று சகோதரர்களிடம் ஒரு வேண்டுகோள்:


“இஸ்லாத்தை இஸ்லாத்தில் மட்டுமே தேடுங்கள். இஸ்லாமியர்களின் செய்கைகளில் தயவு செய்து தேடாதீர்கள்.”

அவ்வாறு நீங்கள் இஸ்லாமிய மார்க்கத்தை இஸ்லாத்தில் மட்டுமே தேடும் பொழுது, இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் தான் என்பதை எவ்வித சந்தேகமும் இன்றி அறிந்து கொள்வீர்கள்.

ஆர்வத்துடன் இஸ்லாத்தைக் குறித்து சந்தேகம் எழுப்பிய சகோதரர் சுதர்சனுக்கு நன்றிகள். தங்கள் சந்தேகங்களை தாராளமாக மேலும் கேளுங்கள். இயன்றவரை அறிந்த வகையில் விளக்க முற்படுகின்றோம்.

இக்கட்டுரைகள் குறித்த விமர்சனங்களும், கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் முபாஹலாவிற்கு விளக்கம் அளித்து கட்டுரை அனுப்பக்கூடியவாக்ள் இனிமேல் கட்டுரைகள் அனுப்ப வேண்டாம் எதிர்பார்த்த அளவை விட அதிகமான கட்டுரைகள் வந்துள்ளதால் அவையே போதுமான பதிலாக அமைந்துள்ளன. தங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பித்தந்து தனி மனித செயலை இஸ்லாத்தோடு ஒப்பிட்டு நடத்திய குற்ச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்த அணைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றி. ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

நன்றி
முகவைத்தமிழன்

*********************************************************

சகோதரர் சுதர்சனின் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையிலும் முபாஹலா இஸ்லாத்தில் உள்ளதா இல்லையா என்ற கேள்விக்கு விளக்கமாகவும், தெளிவான பதிலாகவும் வந்து குவிந்த கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகள் மட்டும்.1) இஸ்லாமிய இணையப் பேரவை (IIP) என்ற ஒருங்கிணைக்கப்பட்ட இஸ்லாமியர்களின் இணையத்தளங்கள் மற்றும் முஸ்லிம் வலைப்பதிவாளர்களின் கூட்டமைப்பு அனுப்பியிருந்த கட்டுரை :

அன்பின் சுதர்சன் அவர்களுக்குதாங்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்று துவங்கி முபாஹலா பற்றிய ஒரு தகவலைத் தெரிவித்து அதனோடு கிருத்துவ நம்பிக்கையையும் பொருத்தி முபாஹலாவுக்கு இஸ்லாம் வழிகாட்டுகிறது எனில் இஸ்லாம் எந்த வகையில் அறிவுப்பூர்வான மார்க்கம் என விளக்கம் கேட்டுள்ளீர்கள்.

முஸ்லீம்களாகிய நாங்கள் வணங்கத் தகுதியான ஒரே இறைவனாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கமாட்டோம், வணங்கக் கூடாது. இஸ்லாம் அல்லாத மற்ற மதங்களில் அவரவர் கொள்கைப்படி தாங்கள் கடவுள் என்று எவைகளை எல்லாம் நம்பியுள்ளார்களோ அவைகளை வணங்குவார்கள். மேலும் படிக்க……..

2) தமிழகத்தின் பிரபல அறிஞரும் பி.ஜே என்பவருடன் பல காலம் ஒன்றாக இருந்து பின்னர் பி.ஜே யின் தவறான கொள்கை பிடிக்காமல் வெளியேறியவருமான திரு.பஸ்லுல் இலாஹி என்பவர் தமிழகத்தின் வரலாற்றில் முபாஹலா என்ற இந்த வழக்கத்தை முதலில் தோற்றுவித்தது யார் என்பதில் இருந்து இந்த முபாஹலா வின் சரித்திரப் பின்னணியை ஆராய்ந்துள்ள அருமையான கட்டுரை.

தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை மூலம் சகோதரர் சுதர்சன் அவர்கள் முபாஹலா சம்பந்தமாக விளக்கம் கேட்டுள்ளார். ஆண்கள் தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை நியாயப்படுத்த தங்களின் மனைவி மற்றும் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளின் மீது கடவுளின் சாபம் உண்டாகட்டுமாக என சாபமிடுவது எந்த வகையில் அறிவுக்கு பொருத்தமாக இருக்கிறது? இவ்வாறு சாபம் கோர இஸ்லாம்தான் வழி காட்டுகிறது எனில், இஸ்லாம் எந்த வகையில் அறிவுப் பூர்வமான மார்க்கமாகிறது? இதுதான் சுதர்சன் அவர்கள் முஸ்லிம்களிடம் நேரடியாக வைத்துள்ள கேள்வி. இதற்கு விளக்கம் அளிக்க கடமைப்பட்ட முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களே விளக்கம் பெற வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள். மேலும் படிக்க……..

3) துபையை வசிக்கும் தமிழக சகோதரார் திரு அஹமத் இமாம் அவர்கள் தங்களுக்கு முபாஹலா பற்றிய விளக்கத்தை குர்ஆனின் ஒளியில் விளக்கியுள்ளார்.

திரு.சுதர்சனம் அவர்களூக்கு,

நீங்கள் எழுப்பிய கேள்வி அர்த்தம் நிரம்பியது.முஹாபலா(முக்காபுலா அல்ல) என்ற பெயரில் ஒன்றும் அறியாத குடும்பத்தினர் மீது சாபம் இடுதல் இஸ்லாத்தில் இல்லாதது.மேலும் படிக்க……..

4) அத்துடன் தங்களுக்கு வலைகுடாவில் வாழும் எமது சகோதரர் திரு. அபு ஃபாத்திமா அவர்கள் ஒரு கேள்வி ஒன்றையும் வைத்துள்ளார்கள் அதையும் இங்கு தங்களுக்கு அறியத் தருகின்றோம்.

தன்னை மதங்களுக்கு அப்பாற்பட்டவனாக கூறி இஸ்லாமிய மார்க்கத்தின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்பிய சகோதரர் சுதர்சன் அவர்களிடம் ஒரு சிறு கேள்வி.தாங்கள் கேள்வி எழுப்பும் பொழுது, மதங்கள் மக்களிடையே பகைமையை வளர்க்கின்றன எனவும், மூட நம்பிக்கைகளை வளர்க்கின்றன எனவும் கூறினீர்கள்.

தங்களின் இக்குற்றச்சாட்டுகளுக்கு இஸ்லாம் எவ்வகையிலும் உகந்ததல்ல என்பதை மிக உறுதியுடன் கூற இயலும்.

இஸ்லாம் வளர்க்கும் பகைமை, மூடநம்பிக்கைகளை தாங்கள் பட்டியல் போட்டு காட்ட இயலுமா? பொத்தாம் பொதுவாக அனைத்து மதங்களுமே அப்படித்தான் எனக் கூறுவதை விடுத்து எந்த மதங்கள் எந்தெந்த வகையில் மூட நம்பிக்கைகளை வளர்க்கின்றன எனப் பட்டியல் போடுங்கள். அதில் தாங்கள் இஸ்லாத்தின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த விளக்கமளிக்க நாம் மிக்க ஆவலுடன் உள்ளோம்.

ஆனால் அதே சமயம், கடவுள் என்ற ஓர் கொள்கையை ஏற்றுக் கொள்ளாமல் நாத்திகம் பேசுபவர்களால் பகைமையே உருவாவதில்லை என்பது போலவும், அவர்களிடம் மூட நம்பிக்கைகள் இல்லை என்பது போலவும் தாங்கள் கூறியுள்ளதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

தமிழகத்தை மட்டுமே எடுத்துக் கொண்டால் கூட, நாத்திகம் பேசுபவர்களுக்கு இடையில் ஒருமித்த சிந்தனை இல்லாததும், அவர்களுக்கென குறிப்பிட கொள்கையில் ஒத்த கருத்து இல்லாததும் அனைவரும் அறிவர். ஏன் கடவுள் இல்லை எனக் கூறிய பெரியாருக்கே சிலை வைத்து இன்று மாலை மரியாதைகளுடன் பூஜிக்கும் நிலையில் தான் நாத்திகர்கள் இன்று உள்ளனர்.

மற்றவர்களுடன் இவர்கள் வைத்து வளர்க்கும் பகைமையை விட, இவர்களுக்கிடையே இருக்கும் பகைமை தான் மிக அதிகம் உள்ளது. எனவே பகைமை வளர மதக்கோட்பாடுகள் தான் காரணம் எனப் பொதுவாக குற்றம் சுமத்துவது எவ்வகையிலும் நியாயமில்லை.

அதே போன்றே மூடநம்பிக்கைகளும். இன்று மூடநம்பிக்கைக்கு எதிராக களமிறங்கியுள்ளதாக மெச்சிக் கொள்ளும் பகுத்தறிவுவாதிகளின் நிலை எவ்வாறு உள்ளது என்பதற்கு பெரியார் சிலை விவகாரமே மிகச் சிறந்த உதாரணமாகும்.

ஏன் அங்கு வரை செல்ல வேண்டும். இங்கு கேள்வியை எழுப்பிய நாத்திகவாதியான தங்கள் கேள்வியின் கருத்தில் அடங்கியுள்ள வாசகம் ஒன்றே நாத்திகவாதிகளின் அறியாமையை தோலுரிக்கின்றதே.

தாங்கள் கேள்வியை ஆரம்பிக்கும் பொழுது, “அனைவருக்கும் வணக்கம்” என்று கூறி ஆரம்பித்துள்ளீர்கள்.

“வணக்கம்” என்ற சொல்லின் பொருள் என்ன என்பதை அறிந்து தான் தங்களைப் போன்றவர்கள் அவ்வாறு கூறுகின்றார்களா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.

ஏனெனில், வணக்கம் என்ற பெயர்சொல் ஒருவரை நோக்கிக் கூறப்படும் பொழுது, “அன்னாரை வணங்குகிறேன்” என்ற பொருளிலேயே கொள்ளப்படுகின்றது.

இவ்வுலகில் “வணங்குவதற்கு தகுதியானவர் யார்?” என்ற ஓர் கேள்வியை நாத்திகம் பேசும் தங்களைப் போன்றவர்கள் இதுவரை எழுப்பியுள்ளீர்களா?. மரியாதை கொடுக்கின்றோம் என்ற பெயரில், “வணங்குதல்” என்ற வார்த்தைக்கு எவ்வித தகுதியும் பெறாத சக மனிதர்களை நாத்திகம் பேசுபவர்கள் “வணங்கிக்” கொண்டிருக்கின்றீர்களே. இது எவ்வகையில் அறிவார்ந்த செயல் என்பதை விளக்க முடியுமா?

இவ்வுலகில் வணங்குதலுக்கு தகுதியானவர், “யார் இவ்வுலகு அனைத்தையும் படைத்து காத்து, பராமரித்து வருகிறாரோ அவர் மட்டுமே” என இஸ்லாம் கூறுகின்றது. “ஒருவரை வணங்க வேண்டும் எனில், யார் என்றே தெரியாத அந்த சக்தியை மட்டுமே வணங்க வேண்டும்” எனவும், எவ்வகையிலும் சக மனிதனை வணங்குதல் கூடாது எனவும் இஸ்லாம் கூறுகின்றது.

மற்ற அனேக மதங்கள் கண்டவை அனைத்தையும் வணங்கக் கூறுகின்றது. அல்லது மற்ற மதத்தினர் அவ்வாறு வணங்குகின்றனர். அதே போன்றே கடவுள் இல்லை எனக் கூறும் நாத்திகவாதிகளான தங்களைப் போன்றவர்களும் மனிதர்களை வணங்குகின்றனர். இது எவ்வகையில் அறிவார்ந்த செயல் என்பதை சற்றி விளக்க முடியுமா?

அறிவு ரீதியாக தங்களைப் போன்றவர்கள் சிந்திப்பர் என்பதனாலேயே தங்களிடம் பதிலாக இக்கேள்வி வைக்கப்பட்டது. அல்லாமல் தங்களின் கேள்விக்கு எதிர் கேள்வி கேட்கவேண்டும் என்பதற்காகவோ, அல்லது தங்களை வருத்தப்படுத்தும் நோக்கிலோ அல்ல. ஒரு தவறு கண்ட பொழுது எவ்வாறு தாங்கள் இங்கு “முபாஹலா” குறித்த கேள்வியை எழுப்பினீர்களோ, அதே போன்றே சிந்திக்க வேண்டும் என்ற நோக்கில் இக்கேள்வியை தங்கள் முன் வைக்கின்றேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

நன்றி

அபு ஃபாத்திமா

ஜூன் 14, 2007

பதிலை எதிர்பார்த்த பி.ஜேக்கு ஐக்கிய தவ்ஹித் ஜமாத்தின் (KADALOOR ITJ) பதில்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

தேதி : 10.06.2007

அனுப்புதல்:

முன்னால் கடலூர் மாவட்ட டிஎன்டிஜே நிர்வாகிகள்

சார்பாக அ.கலிமுல்லாஹ்,

93.பெரிய கடை தெரு,

பரங்கிப்பேட்டை – 608502.

பெறுதல்:

பி.ஜைனுல் ஆபிதீன்

மாநில டிஎன்டிஜே தலைவர்,

30. அரன்மனைக்காரன் தெரு,

மண்ணடி, சென்னை-1.

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்..

எங்களுடனான முபாஹலா சம்மந்தமாக தங்களின் 06.06.2007 தேதிய தபால் கிடைக்கப் பெற்றோம். எங்களுடைய முபாஹலா பிரசுரத்தை ஏற்றுக்கொண்டு, கடந்த 03.06.2007. கடலூர் கூட்டத்தில் 16.06.2007 அன்று முபாஹலாவுக்கு தயார் என்று அறிவித்ததாக கடிதத்தில் ஆரம்பமாக கூறும் தாங்கள்; அடுத்தடுத்த வரிகளில் தாங்கள் கூறிய பல விசயங்களை கணடுக்கொள்ளாத வகையில் எங்கள் கடிதம் அமைந்துள்ளதாக தாங்கள் கூறுவது சரியல்ல. காரணம் நாங்கள் முபாஹலா பிரசுரத்தில் நான்கு வகையான குற்றச்சாட்டுகளை உங்கள் மீது கூறி அதற்கு முபாஹலாவுக்கு தயாரா? ஏன்று கேட்டிருந்தோம். அதற்கு தாங்கள் அந்த பிரசுரத்தை குறிப்பிட்டு கூறியே அதற்கு தயார்! என்று கூறினீர்கள்.

(கடலூர் கடிதத்திற்கு பி.ஜே யின் பதில் கடிதம் – ததஜ அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள கடிதம் படிப்பதற்கு இங்கு சொடுக்கவும்)

உண்மையாளர்களாகவும, உண்மையில் அல்லாவுக்கு அஞ்சக்கூடியவர்களாய் இருப்பவர்கள், தங்கள் மீது குற்றச்சாட்டு என்று வரும்போது அந்த விசயத்தில் தாம் தூய்மையானவர்தான் என்று நிரூபிக்க வேறு எதனையும் முன்வைக்காமல் நிபந்தனையேதுமின்றி முன்வருவார்கள்.

முபாஹலா சம்மந்தமான குர்ஆன் வசனம் 3:61 கூட ஒரு குறிப்பிட்ட முக்கிய பிரச்சினையின் வெளிப்பாடாகத்தான் கூறப்பட்டுள்ளதே தவிற, ஒரு சமுதாய முக்கிய பிரச்சினையில் குற்றச்சாட்டை நிரூபிக்க வருபவர் மீது வேறொரு குற்றச்சாட்டை கூறி சமப்படுத்திக்கொள்ளவோ, நியாயப்படுத்திக்கொள்ளவோ அல்ல, என்பதை தாங்கள் புரிந்துக்கொள்ளவேண்டும். முபாஹலாவுக்கு தங்களின்; இஷ்டத்திற்கு கற்பனையாக விளக்கமளித்து முபாஹலாவிலிருந்து நழுவிக்கொள்ளமாட்டீர்கள் என்று நம்புகின்றோம்.

ஆகவே, முபாஹலா சம்மந்தமாக நாங்கள் கூறிய நான்கு விசயங்கள் மற்றும் அதை ஒட்டி தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்ட இரண்டு விசயங்கள் ஆக ஆறு விசயங்களுக்கு மட்டுமே நாங்களும் நீங்களும் முபாஹலா செய்வதற்கான விசயங்களாகும்;. இந்த முபாஹலா அறிவிக்கப்பட்டதே மேற்படி விசயங்களுக்கு மட்டுமே.

அதை விடுத்து, நாங்களும் நீங்களும் வேறு எந்தெந்த விசயங்களில் பரஸ்பரம் அநீதி இழைக்கப்பட்டோமோ அவைகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு, குழாயடி சன்டை நடத்துவதற்கு அல்ல. அவைகள் இந்த முபாஹலாவிற்கு தேவையற்றது.

முபாஹலா செய்வதற்கு தெளிவான விசயங்களை இனங்காட்டி அழைத்து அதை ஏற்றுக்கொண்டப்பின் வேறு விசயங்களை காட்டி தாங்கள் நழுவ பார்ப்பது உங்களிடம் உண்மையில்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதாகும்.

முபாஹலாவோ விவாதமோ எதுவானாலும் ஒரு பக்கச் சார்பாக அவை இருக்கக் கூடாது என்று எழுதும் நீங்கள்,; விவாதத்தில் எதைப்பற்றி விவாதம் செய்ய போகிறோம் என்று தெரியாமல் அங்குப்போய் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி விவாதம் செய்வீர்களா? அல்லது விவாதம் எது பற்றியானது என்பதை முன்பே அறிந்து அதற்குள்ள தயாரிப்போடு செல்வீர்களா? உங்களிடம் ஏன் இந்த முரன்பாடு?.

முபாஹலா செய்ய வருபவர்கள் எதற்காக முபாஹலா செய்ய வருகிறோம் என்பதை விளங்கி வரவேண்டும். மனைவி மக்களை அழைத்து வரும்பொழுது அவர்களுக்கும் எதற்காக முபாஹலா என்ற விபரம் தெரிய வேண்டும், தெரிந்து வருபவர்கள் தான் இறையச்சமுடையவர்கள். எதற்காக முபாஹலா என்ற விபரம் ஏதும் தெரியாமல் அந்த சமயம் வரை ஞாபகத்தில் வருவதையெல்லாம் சொல்லுங்கள் என்று கூறுவது மோசடித்தனமும் முனாபிக்தனமும் ஆகும் அதை தாங்கள் புரிந்துக்கொள்ளுங்கள். இதற்கு மேலும் தாங்கள் இது விசயத்தில் பிடிவாதம் பிடித்தால் முபாஹலாவிலிருந்து தாங்கள பின் வாங்குகிறீர்கள் என்பதே பொருள்.

குறிப்பிட்டுள்ள சமுதாய இயக்கத்தின் தலையாய பிரச்சினையில்; எழுப்பப்பட்டிருக்கும் குற்றச்சாட்டில் குற்றம் சாட்டுபவர், குற்றச்சாட்டுகளை தெளிவாக கூறி அதுப்பற்றி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவேண்டும். இதை மறுத்து எதிர் தரப்பினரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இதை தவிற, குற்றம் சாட்டப்படுபவர் குற்றம் சாட்டுபவர் மீது வேறு எந்த குற்றசாட்டையும் எழுப்ப அனுமதிக்க முடியாது. மேலும், இதிலும் தாங்கள்; பிடிவாதம் பிடித்தால் முபாஹலாவிலிருந்து தாங்கள் பின் வாங்குகிறீர்கள் என்பதே பொருள்.

தாங்கள் கற்பனையாக உங்கள் விருப்பத்திற்கு எழுதியதெல்லாம், மேடையில் அறிவிப்பதெல்லாம் முபாஹலாவின் சட்டம் அல்ல. முபாஹலாவிற்கு நாங்களும், எங்கள் மனைவிகளும், எங்கள் பொறுப்பில் இருக்கும் எங்கள் புதல்வ புதல்விகளுடனும் தான் வருவோம். யாரும் யாருக்காகவும் அடையாள அணி வகுப்பு நடத்தமுடியாது. இதிலும் தாங்கள் பிடிவாதம் பிடித்தால் முபாஹலாவிலிருந்து தாங்கள பின் வாங்குகிறீர்கள் என்பதே பொருள்.

மேலும், முக்கியமாக 16.06.2007 அன்று நெல்லிக்குப்பம் தேவநாதன் திருமண மன்டபத்தில் மாலை 7 மணிக்கு முபாஹலா என்று தாங்கள் அறிவித்தீர்கள், அதற்கு நாங்களும் எங்களின் 05.06.2007 தபாலில் ஒப்புதல் அளித்தோம். ஆனால், தாங்கள் 06.06.2007 தபாலில் 16.06.2007 அன்று காலை முதல் மேற்படி அந்த மண்டபத்தில் தங்கள் அமைப்பின் செயல் வீரர்கள் கூட்டம் நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளீர்கள். தங்களின் செயல் வீரர்கள் கூட்டமும் முபாஹலாவும் ஒரே மண்டபத்தில் நடக்க இருப்பதால் அதில் கலந்துக்கொள்ளும் எங்கள் பெண் மக்களுக்கு பாதுகாப்பு இன்மையும், தங்கள் செயல் வீரர்களால் சன்டை சச்சரவு வரவும் வாய்ப்புள்ளது.

ஆகவே, ஒன்று தாங்கள் செயல் வீரர்கள் கூட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளுங்கள், அல்லது முபாஹலாவை அதே நாளில் வேறு இடத்தில் மாற்றி வைய்யுங்கள், உங்களால் அது முடியாவிட்டால் அதே நாளில் முபாஹலாவிற்கு வேறு இடத்தை ஏற்பாடு செய்யும் பொருப்பை எங்களிடம் விட்டு விடுங்கள். இன் ஷாஅல்லாஹ் நாங்கள் ஏற்பாடு செய்கின்றோம். இதிலும் தாங்கள்; பிடிவாதம் பிடித்தால் முபாஹலாவிலிருந்து தாங்கள் பின் வாங்குகிறீர்கள் என்;பதே பொருள்.

மேலும், நாங்கள் 05.06.2007ல் தங்களுக்கு எழுதிய தபாலில், முபாஹலா பிரச்சினையின்றி நடைபெற இரு தரப்பிலும் இரு கட்டுப்பாட்டாளரை நியமிப்பது சம்மந்தமாக குறிப்பிட்டிருந்தோம் அதை தங்கள் வசதிக்கு கண்டுக்கொள்ளாமல் விட்டுள்ளீர்கள் அந்த விசயத்திற்கும் தாங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

முபாஹலா நடைபெறும் இடத்திற்கு உங்கள் தரப்பில் உங்கள் குடும்பத்தை தவிற 25 நபர்களும், எங்கள் எட்டு பேர் தரப்பில் எங்கள் குடும்பங்களை தவிர, எட்டு பேர் சார்பிலும் 25 நபர்களும் மட்டுமே கலந்துக்கொள்ள நாங்கள் சம்மதிக்கின்றோம். இதை, முன்பு எங்கள் தபாலிலேயே தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றோம்.

மேற்படி நாங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து விசயங்களும் நடைமுறைக்கும், உண்மையில் கண்டிப்பாக முபாஹலா நடைப்பெற வேணடும் சத்தியம் வெளிப்படவேண்டும் அதற்கு எதுவும் தடையாக இருந்து விடக்கூடாது என்பதற்குத்தான். இதை தாங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகின்றோம். இத் தபால் தங்களுக்கு இன் ஷாஅல்லாஹ் 12.06.2007 ல் கிடைக்கும், இதற்கு தங்களின் உடனடியான ஒப்புதல் தபாலை எங்களுக்கு 14.06.2007 க்குள் அனுப்பவும்.

இன்ஷா அல்லாஹ், தங்கள் ஒப்புதல் தபால் கிடைத்தவுடன் குடும்பத்துடன் முபாஹலாவில் சந்திப்போம். நன்றி, வஸ்ஸலாம்.

எங்கள் எட்டு பேர் தரப்பில் முபாஹலாவில் கலந்துக்கொள்ளும் எங்கள் குடும்பத்தினர் விபரம் வறுமாறு:

1. அ.கலிமுல்லாஹ், கவுஸ்ஹமீதா(மனைவி), காமிலா பர்வீன்(மகள்), முஹம்மது முஜாஹித்(மகன்), அப்துல் காதிர்(மகன்), அப்துல் அலீம்(மகன்)

2. எஸ். ஷேர்அலி, நூரா(மனைவி), ஹய்தர்அலி(மகன்), யாஸ்மின்(மகள்).

3. இசட். ஷாஹீல் ஹமீது, ஹாஜிரா பேகம்(மனைவி), உமர் முக்தார்(மகன்)

4. எம். செய்யது ஹமீது, ஆபிதாபி(மனைவி), சையத்யாசீன்(மகன்).

5. டி.எம்.பக்கீர் முஹம்மது, ஆமினா(மனைவி), N ஷக்முஹம்மது(மகன்), மூமினா(மகள்), பஹீமா(மகள்), முனவ்வரா(மகள்).

6. எ.எஸ்.எம்.ரசூல் பா ஷா, ஷர்மிலி(மனைவி), மெஹ்தாப்(மகள்), மரியம்(மகள்), அப்துர்ரஹ்மான் சையது(மகன்).

7. எஸ். அப்துர்ரஹ்மான், தவ்லத்நி ஷா(மனைவி), இப்ராஹிம்(மகன்);, ரஹீமுன்னிசா(மகள்), அப்துல்லாஹ்(மகன்).

8. ஐ. ஷேக் உமர், பாரூன்பேகம்(மனைவி), முஹம்மதுஇத்ரீஸ்(மகன்), ஷமீமா நஸ்ரின்(மகள்).

அன்புடன்.

முன்னாள் கடலூர் மாவட்ட டிஎன்டிஜே நிர்வாகிகள். (கையொப்பமுடன்).

1.எ.கலிமுல்லாஹ் :

2.எஸ்.ஷேர் அலி :

3.இசட். ஷாஹீல் ஹமீது :

4.எம். செய்யது ஹமீது :

5.டி.எம். பக்கீர் முஹம்மது :

6.எ.எஸ்.எம். ரசூல் பாஷா :

7.எஸ்.அப்துர்ரஹ்மான் :

8.ஐ.ஷேக் உமர் :

ஜூன் 10, 2007

பி.ஜே யின் முபாஹலாக்கள் – ஒரு சிறப்பு பார்வை

முபாஹலாவிலிருந்து பின் வாங்கும் பி.ஜெ.

பிராடு பி.ஜெ.யின் பித்தலாட்டத்தனங்களை அறியாத கடலூர் மாவட்ட த.த.ஜ. முன்னால் நிர்வாகிகள் பி.ஜெ.யை முபாஹலாவுக்கு அழைத்திருந்தனர். பி.ஜெ.யின் வண்டவாளங்களை ஆதி முதல் அந்தம் வரை அறிந்துள்ளவர்கள் அவரை மட்டும் முபாஹலாவுக்கு அழைக்க மாட்டார்கள். பி.ஜெ. ஒரு நாத்திகர் என்ற காரணத்தால் அல்லாஹ்வை பற்றிய பயம் இல்லாமல் முபாஹலா செய்து பொய்யை உண்மை ஆக்கி விடுவார். அதனால் பி.ஜெ.யுடன் த.த.ஜ.வின் மாநில தலைமை நிர்வாகிகளையும் சேர்த்துதான் முபாஹலாவுக்கு அழைத்திருப்பார்கள்.

கடலூரைப் பொறுத்த வரை த.த.ஜ. முன்னால் நிர்வாகிகள் அனைவரும் முபாஹலாவுக்கு வரும்பொழுது அவர்களுக்கு எதிர் அணியான த.த.ஜ.வின் மாநில தலைமை நிர்வாகிகளும்தான் முபாஹலாவுக்கு வர வேண்டும். இதுதான் சரியான நியதி. ஓவ்வொரு காலத்திலும் முபாஹலாவிலிருந்து பின் வாங்க பி.ஜெ. பல பல்டிகளை அடித்துள்ளார். அது போல்தான் கடலூர் மாவட்ட த.த.ஜ. முன்னால் நிர்வாகிகளுடனான முபாஹலாவிலிருந்து பின் வாங்க புதிய வியூகம் வகுத்துள்ளார்.

சமுதாய நன்மையை கருத்தான் கடலூர் மாவட்ட முன்னால் ததஜ நிர்வாகிகள் பி.ஜே யின் பிராடுகளையும் ததஜ வின் செக்ஸ் ஊழல்களையும் நிரூபிக்க முபாஹலாவிற்கு அழைத்தார்கள். அதிலும் அந்த முபாஹலாவில் பேச வேண்டிய விசயங்களையும் நியாயமான முறையில் குறிப்பிட்டிருந்தார்கள். முபாஹலாவிற்கு வைக்கப்பட்ட எதுவும் தனிப்பட்ட காரியங்கள் அல்ல. பொதுவாக ததஜவும் பி.ஜே யும் மறுக்கும் காரியங்களை இவர்கள் இது உண்மை தான் பி.ஜே இவ்வாறு சொன்னார், பாக்கர் நந்தினி என்ற பென் மட்டுமல்லாது ததஜ வின் மதரஸாவில் பயிலும் பென்களுடன் உரவு வைத்தள்ளதை ததஜ பென்கள் மதரஸா ஆம்கள் அறிவர் மற்றும் சமுதாய சம்பந்தப்பட்ட பொதுவான விசயங்களை வைத்து அவை எல்லாம் பி.ஜேக்கு தெறியும் அவர் சொன்னதுதான் என்றும் அப்படி நாங்கள் பொய் சொன்னால் எங்கள் மீதும் எங்கள் குடும்பத்தினர் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்றும் கூறுவதற்கு தயார் பி.ஜே உண்மையாளராக இருந்தால் பாக்கர் மதரஸா பென்களுடன் உரவு வைக்கவில்லை, நந்தினியோடு தகாத முறையில் பயனம் செய்வில்லை, களியக்காவிளையில் இன்னொருவர் மனைவியுடன் செல்லவில்லை எனவும் அவ்வாறு தான் கூறவில்லை எனவும் அப்படி கூறியிருந்தால் அல்லாஹ்வின் சாபம் தன் மீதும் தனது குடும்பத்தின் மீதும் இறங்கட்டும் என்று பி.ஜே கூற வேண்டும்.

இதுதான் நியாயம், ஆனால் பி.ஜே என்ற இந்த மஹா மோசடிக்காரர் அவ்வாரெல்லாம் செய்யாமல் தானும் முபாஹலாவிற்கு தயார் என்றும் அத்துடன் முபாஹலா நடக்கும் நிமிசம் வரை ஞாபகம் வருவதையெல்லாம் முபாஹலா செய்ய வேண்டும் என்றும், தனக்கு கடலுர் ததஜ முன்னால் நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் என்னென்ன அநீதி இழைத்தள்ளாhக்ள் என்றும் தான் அவர்களுக்கு தனிப்படட முறையில் என்னென்ன அநீதி இழைத்தள்ளேன் என்றும் கூறி முபாஹலா செய்ய வேண்டும் என்று குழப்பியுள்ளார் இதை ததஜ வின் விசிலடிச்சான் குஞ்சுகளும் மாவீரத்தனமாக பேசி வருகின்றார்கள்.

இப்படித்தான் ஒவ்வொரு முறையும் தமக்கு ஆபத்து வருகின்றது தாம் பொய்யன் என நிறுபிக்கப்போகின்றார்கள் என்று தெறிய வரும்பொதெல்லாம் பி.ஜே என்ற இந்த மஹா மோசடியாளன் செய்யும் நாடகம்தான் இந்த முபாஹலா அழைப்புகள். ஓவ்வொரு முறையும் இவரது முபாஹலாவறிகு ஒத்துக் கொண்டோ அல்லது இவரை முபாஹலவிற்கு அழைத்தோ பிரபல அறிஞர்களும், சான்றோர்களும் வரும்போது தான் தோற்றுவிடுவோம் என்று தெறிந்தவுடன் இறுதியில் ஒரு பல்டி அடித்து மாவீரத்தனமாக தான் முபாஹலாவிற்கு தயார் என்றும் அதில் எந்த விசயங்கள் குறித்து முபாஹலா செய்ய அழைக்கப்பட்டிருந்ததோ அது அல்லாத பிரச்சினைக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத பல விசயங்களை சொல்லி அதையெல்லர் முபாஹலா செய்ய வேண்டும் என்று அழைப்பார் அதே அழைப்பில் இதற்கெல்லாம் நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லையென்றால் நீங்கள் முபாஹலாவில் இரந்து பின்வாங்கிவிட்டதாக நாங்கள் எடுத்தக் கொள்வோம் என்று இவரே முடிவையும் எழுதி விடுவார். இதுதான் ஒவ்வொரு முறையும் இவர் கையாளும் திருட்டுத்தனங்கள். இந்த முறையும் பல பல்டி அடித்தும் கடலூர் முன்னால் ததஜ சகோதரர்கள் விடுவதாக இல்லையென்பதாலும் இவரது வன்டவாளங்களை தன்டவாளத்தில் ஏற்றி விடுவார்கள் என்பதாலும் எப்போதும் போல பிரச்சினைக்கு சம்பந்தம் இல்லாத பல விசயங்களை குறிப்பிட்டு முபாஹலாவிற்கு அழைத்தள்ளார் அத்துடன் இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் முபாஹலவில் கடலூர் சகோதரர்கள் பின்வாங்கி விட்டதாக முடிவு செய்வாராம்.

இவ்வாறாக திருட்டுத் தனங்களாலும் கள்ள நாடகங்களாலும் முபாஹலா முக்காபுலா என்று பொன்டாட்டியையும் புள்ளைகளையும் இழுத்துக் கொண்டு அல்லாஹ்விற்கு சற்றும் அஞ்சாத இந்த அயோக்கியன் பி.ஜேயின் சில கிரிமினல் முபாஹலாக்களையும் அவற்றின் முடிவுகளையும் இங்கு பார்ப்போம்.

எந்த இயக்கத்திலும் இல்லாத பஸ்லுல் இலாஹியுடனான முபாஹலாவிலிருந்து பின் வாங்க சம்சுல் லுஹா பெயரால் நோட்டீஸ் வெளியிட்டார். அதில் பாகிஸ்தான் தூதரகத்தில் ஐ.எஸ்.ஐ உளவாளிகளுடன் சந்திப்பு. நாகூர் பார்சல் வெடி குண்டு சித்தீக் என்றெல்லாம் எழுதி இவற்றுக்கும் முபாஹலா செய்யணும் என்றார்.

வெளிநாடுகளுக்கே செல்ல மாட்டேன் அதற்காகத்தான் பாஸ்போர்ட்டு கூட எடுக்காமல் இருக்கிறேன் என்று சொன்ன பி.ஜெ. 1992இல் திடீரென இலங்கை சென்றார். அங்குள்ள பாகிஸ்தான் தூதரகம் சென்று ஐ.எஸ்.ஐ உளவாளிகளுடன் சந்தித்துப் பேசினார். அந்த தொடர்பில்தான் தமிழகத்தில் பல சம்பவங்கள் நடந்தன. தேவர் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்க ஆள் அனுப்பியவர் பி.ஜெ. அதனால் ஏற்பட்ட கலவரங்களை காரணம் காட்டி புதிய தமிழகம் கிருஷ;ணசாமியை நான்தான் இயக்குகிறேன் என்று கூறி; ஐ.எஸ்.ஐ உளவாளிகளிடம் பி.ஜெ. பணம் கேட்டார்.

சுகமான சுமைகள் என்ற சினிமாவில் பகவத் கீதைக்குள் பார்சல் குண்டு அனுப்பும் காட்சி வருகிறது. எனவே அதுபோல் பார்சல் குண்டு அனுப்ப வேண்டும் என்ற யோசனையை சொன்னவர் பி.ஜெ.தான். பி.ஜெ. யோசனைபடிதான் நாகூர், நாகப்பட்டிணம் பார்சல் வெடி குண்டு தயாரிக்கப்பப்பட்டது என்பது உட்பட அனைத்துக்கும் முபாஹலா செய்யத் தயார் என்றார் எந்த இயக்கத்திலும் இல்லாத பஸ்லுல் இலாஹி.

உடனே சம்பந்தம் இல்லாமல் முபாஹலா கூடாது என்ற கொள்கை உடைய ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி ஆகியவர்களையும் எந்த இயக்கத்திலும் இல்லாத பஸ்லுல் இலாஹியுடன் முபாஹலாவுக்கு அழைத்து வர வேண்டும் என்று கூறி பி.ஜெ. பின் வாங்கினார்.

சமீபத்தில் முஜிபுர்றஹ்மான் உமரி அவர்கள் பி.ஜெ.யுடன் முபாஹலாவுக்கு தயார் என்றார். அதிலிருந்து பின் வாங்க முஜிபுர்றஹ்மான் உமரி ஆபீஸில் வைத்துதான் ஹாமித் பக்ரி லஷ;கரே தையிபா தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் என்பது பற்றியும் முபாஹலா செய்யனும் என்றார். அதற்கும் முஜிபுர்றஹ்மான் உமரி அவர்கள் தயார் என்றதும் பின் வாங்கினார் பி.ஜெ.

காரணம். ஹாமித் பக்ரியுடன் லஷ்கரே தையிபா தீவிரவாதிகள் பேச்சு வார்த்தை நடத்த வழி வகுத்தவர் பி.ஜெ.தான். பி.ஜெ.யின் உத்தரவுப்படிதான் த.த.ஜ.வின் இன்றைய ஜித்தா நிர்வாகி ஜிப்லி என்பவர் ஏற்பாடு செய்தார். அந்த ஜிப்லி பி.ஜெ.யின்
பினாமியாக இன்றும் பல வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பாக உள்ளார் என்பது சம்பந்தமாகவும் முபாஹலா செய்யப்படக் கூடும் என்று பி.ஜெ. அஞ்சினார் எனவே சப்தம்
காட்டாமல் வாபஸ் ஆகி விட்டார். முஜிபுர்றஹ்மான் உமரிக்கு விட்ட முபாஹலா அழைப்பை த.த.ஜ.சைட்டிலிருந்தே தூக்கி விட்டார்.

இதுவரை ஒவ்வொரு முபாஹலா அழைப்பின் போதும் முக்கிய விஷயங்களை தலையாய விஷயங்களை முன் வைத்துதான் அழைப்பு விடுக்கப்பட்டது. என்ன என்ன விஷயங்களில் முபாஹலா என்று தெளிவாக அறிவித்துதான் அழைப்பு விடுக்கப்பட்டது. இதுதான் இஸ்லாம் காட்டியுள்ள வழி முறை. கடலூர் மாவட்ட த.த.ஜ. முன்னால் நிர்வாகிகளுக்கும் பி.ஜெ.க்கும் உள்ள முக்கிய பிரச்சனையே தலையாய பிரச்சனையே பி.ஜெ. பாக்கர் பற்றி கூறியுள்ள குற்றச்சாட்டுகள்தான். இதனால்தான் மாவட்ட நிர்வாகமே மாறியது. எனவே இந்த ஒரு முக்கிய பிரச்சனை குறித்து முபாஹலா நடந்து விட்டால் அனைத்துக்கும் முடிவு வந்து விடும்.

காதியானிகளை முபாஹலாவுக்கு அழைத்த பி.ஜெ. மிர்ஸா நபியா? என்ற ஒரு முக்கிய விஷயத்தில் தலையாய விஷயத்தில் முபாஹலா செய்தால் போதும் என்றுதான் கூறினார். இப்பொழுது முக்கிய பிரச்சனையான தலையாய பிரச்சனையான பி.ஜெ. பாக்கர் நந்தினி விஷயத்தில்தான் முபாஹலா செய்ய வேண்டும். அதை திசை திருப்ப பி.ஜெ. கூறியுள்ள புதிய நிபந்தனையே பி.ஜெ. ஒரு நாத்திகர் என்ற காரணத்தால் அல்லாஹ்வை பற்றிய பயம் இல்லாமல் முபாஹலா செய்து பொய்யை உண்மை ஆக்கி விடுவார் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

முபாஹலா செய்ய வருபவர்கள் எதற்காக முபாஹலா செய்ய வருகிறோம் என்பதை விளங்கி வர வேண்டும். மனைவி மக்களை அழைத்து வரும்பொழுது அவர்களுக்கும் எதற்காக முபாஹலா என்ற விபரம் தெரிய வேண்டும். தெரிந்து வருபவர்கள்தான் இறையச்சமுடையவர்கள். எதற்காக முபாஹலா என்ற விபரம் எதையும் தெரியாமல் அந்த சமயம் வரை ஞாபகத்தில் வருவதையெல்லாம் சொல்லுங்கள் என்று அழைப்பவர்கள் நபிகளார் காலத்தில் வாழ்ந்த முனாபிக்குகள் மாதிரி ஆட்களாகத்தான் இருக்க முடியும் அல்லாஹ்வையும் தூதரையும் ஈமான் கொள்ளாமல் வெளிப்பார்வைக்கு முஸ்லிம்கள் காட்டி கொண்ட அவர்களின் வாரிசுகள்தான் இந்த மோடி வேலை முபாஹலாவுக்கு அழைப்பார்கள்.

பி.ஜெ.யின் இந்த புதிய நிபந்தனை மூலம் முபாஹலாவிலிருந்து அவர் பின் வாங்கி விட்டார். பாக்கர் மடியில் நந்தினியும். நந்தினி மடியில் பாக்கரும் என்ற குற்றச்சாட்டை பி.ஜெ. கூறியுள்ளது உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்.

ஆக மக்களே இந்த முபாஹலா பிராடை, உலக மஹா பொய்யனை மார்க்கத்தை வைத்து தம்மிடம் படிக்க வரும் பென்களையும், தங்கள் மதரசாவில் ஓதும் பென்களையும் தங்கள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களுக்கும் தனது காரியத்தை சாதித்து கொள்வதற்காக இன்னும் பலருக்கும் சல்லாப விருந்து படைத்து அவற்றை வைத்து பிளாக் மெயில் செய்யும் இந்த அயோக்கியனை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். இன்னும் இவன் ஆசிரமங்கள் நடத்தி அப்பாவி பென்களை காம வேட்டையாடிய பிரேமாநந்தா, சங்கராச்சாரி போன்ற சாமியார்களை விடவும் மஹா மோசமானவன். இந்த சமுதாயம் உடனடியாக இந்த மஹா அயோக்கியனுக்கு எதிராக திரன்டு எழ வேண்டும். தமிழக அரசு நிலைமை கை மீறி போவதற்குள் ததஜவினால் நடத்தப்படும் பென்கள் கல்லூரிகள் மற்றும் மதரஸாக்களில் அதிரடி சோதனை நடத்தி பி.ஜே என்ற இந்த போலிச் சாமியாரின் அந்தரங்கங்களையும் இவனது சமூக விரோத செயல்களையும் வெளிக் கொனர வேண்டும்.மதரஸாக்கள் காமுகர்களின் கூடாரங்டகளாக மாற்றப்படுவதையும், இஸ்லாம் என்ற பெயரில் முஸ்லிமாக மதம் மாறும் சகோதரிகளுக்கும் மாhக்கம் பயில அனுப்பப்படும் நமது முஸ்லிம் பென்களுக்கும் இவர்களால் காம பாடம் நடத்தப்பட்டு அவர்கள் வழி கெடுக்கப்படுவதையும் இன்னும் நாளை நமது சமுதாயத்திற்கு இதனால் பெரும் இழுக்கு ஏற்படுவதையும் தடுப்பதற்காக பிற சமுதாய அமைப்புக்களும் முஸ்லிம் பொதுமக்களும் இணைந்து இதை தடுக்க முன்வர வேண்டும்.

இறுதிச் செய்தி : பொய்யாக ததஜ வின் கடலூர் முன்னால் நிர்வாகிகள் மீது லட்சக்கணக்கல் வெளிநாட்டில் ததஜ பெயரைச் சொல்லி வசூல் செய்து திருடி விட்டதாக ஒரு வக்கீல் நோட்டிசை பி.ஜே அனுப்பியிருந்தார் அதற்க பதில் நோட்டிசை அந்த சகோதரர்கள் அனுப்பி வழக்கை சந்நதிக்க தயாராக இருப்பதாக தெறிவித்திருந்தனர். தற்போது திருடன் பி.ஜே அடுத்தவர்கள் மீது திருட்டு குற்றம் சாட்டி அனுப்பிய வக்கீல் நோட்டிஸை வாபஸ் பெற்றிருப்பதாக வரக்கூடிய தகவல்கள் தெறிவிக்கின்றன.

Create a free website or blog at WordPress.com.