தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 27, 2008

வேடாதாரிகளை இனம் காண்போம்

Filed under: Ikhwanism, MNP — முஸ்லிம் @ 9:40 முப
வேடாதாரிகளை இனம் காண்போம்

நாங்கள் இஸ்லாமிய ஆட்சி அமைக்கப் போகிறோம், வாருங்கள் என்று கூறி சமுதாயத்தை ஏமாற்றும் ஒரு கூட்டம் நம்மிடைய உளா வருவதை நாம் அறிந்ததே! இவர்கள் வோடதாரிகள் என்பதை மக்களுக்கு உணர்த்தவே இந்த ஆக்கம். இவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம், அந்த இடங்களில் இஸ்லாத்தை எப்படி புரிந்து நடக்கிறார்களோ, அவ்வாறு இவர்கள் வோடமிட்டு மக்களை தங்களின் கொள்கையற்ற இயக்கத்தில் சேர்ப்பார்கள். இவர்களின் வோடத்தை அறிய இவர்கள் தற்போது செயல்படும் இடங்களை ஆராய்ந்தால் நன்றாக தெரிய வரும். இவர்களின் வோடத்தை பாருங்கள்,

  • சவூதியில் முழு தவ்ஹீத் வேடம்
  • துபாயில் முக்கா தவ்ஹீத் வேடம்
  • தமிழகத்தில் அரை தவ்ஹீத் வேடம்
  • கேரளவில் கால் தவ்ஹீத் வேடம்
  • கர்நாடகாவில் முழு தர்ஹா வேடம்

தவ்ஹீத் கொள்கையில் உள்ளவர்களிடம் தவ்ஹீத் வோடத்தில் சென்று அவர்களிடம் வசுல் வோட்டை நடத்துவார்கள். சுன்னத் வல் ஜமாத் என்று கூறி கொள்பவர்களை அவர்களின் வோடத்தில் சென்று வசுல் வோட்டை நடத்துவார்கள். இவர்களின் வோடத்தால் அதிகமான மக்கள் ஏமாற்றப்பட்டு இந்த கொள்கையற்ற இயக்கத்தில் இணைகிறார்கள். இந்த இயக்கத்தில் இணைந்த பின்னர் இந்த இயக்கத்தை விட்டு வெளியேறவும் முடியாமல், உள்ளே இருக்கவும் முடியாமல் திணறுகிறார்கள். இந்த கொள்கையற்ற கோமான்கள், சவுதியில் இடும் முழு தவ்ஹீத் வோடத்தாலும், தமிழகத்தில் இடும் அரை தவ்ஹீத் வோடத்தாலும், தவ்ஹீத் கொள்கையில் உள்ள மக்களும் மற்றும் பல தவ்ஹீத் மார்க்க அறிஞர்களும் கூட இவர்களின் சதி வலையில் விழ்ந்து இவர்களை தூக்கி பிடிக்கிறார்கள். இஷ்வான்களின் கொள்கையை (இவர்களுக்கு கொள்கை என்று ஒன்று கிடையாது) ஆரம்பம் முதலே அதன் குறைகளை சுட்டிக்காட்டி எதிர்த்து வரும் ஸலபிகளின் கல்விக் கூடங்களில் படித்து வரும் பல ஆலிம்களும் கூட இவர்களின் சதி வளையில் சிக்கியுள்ளார்கள்.

நாங்கள் இஸ்லாமிய ஆட்சி அமைக்க போகிறோம் என்று ஏமாற்றும் இவர்கள், இஸ்லாமிய ஆட்சி செய்ய வேண்டிய எதையாவது செய்தார்களா என்றால், இல்லை என்பது தான் பதில். தியாகிகளை போல உலா வரும் இவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ளுவது நல்லது. தமிழகத்தில் இந்த கொள்கையற்ற இயக்கத்தின் முன்னால் தலைவர் பொருந்தகை மு. குலாம் முஹம்மது க்கு இந்த கொள்கையற்ற இயக்கத்தில் மாத சம்பளம் ரூபாய் 22 ஆயிரம் ஆகும். நாங்கள் தஃவா செய்கிறோம் என்று கூறி மக்களை ஏமாற்றி பணம் வசுலித்து 22 ஆயிரம் ரூபாயை தங்களது தரிக்கா தலைவருக்கு சம்பளமாக கொடுத்து கொலுக்க வைத்தவர்கள், இவர்கள். இன்று அதை குறை கூறுகிறார்கள். அதுபோல, இந்த கொள்கையற்ற இயக்கத்தின் கொள்கையற்ற தலைவர் திருவாளர் குலாம் முஹம்மது தனது மகளின் திருமணத்தில் இந்த கொள்கையற்ற இயக்கத்தின் அனைத்து இயக்க பொருப்பாளர்களையும் அழைத்து திருமணத்தை ஆடம்பரமாகவும், பெண்களை ஃபர்தா இன்றி மேடையில் ஏற்றியும் சாதனை படைத்தார். இதை இயக்கத்தில் உள்ள சிலரும் இயக்கத்தில் வெளியில் உள்ளவர்களும் இந்த மேகா திருமணத்தைப் பற்றி கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள், அப்போது இந்த உத்தமா இயக்கம் என்ன செய்தது தெரியுமா? தனது இயக்க தாயிகளுக்கு (இந்த தாயிகளுக்கு 10 முதல் 15 திருக்குர்ஆன் வசனங்கள் மட்டும் தான் தெரியும் என்பது வேறு விஷயம்) திருவாளர் குலாம் நடத்திய திருமணத்திற்கு இஸ்லாமிய சாயம் புசுவது எப்படி? என்று பயிற்சி அளித்தது. இன்று அந்த திருமணம் தவறு என்று தம்பட்டம் அடிக்கிறது அதே கும்பல்.

அன்று ஜனநாயகம் ஷிர்க் என்று ஊர் ஊராக தம்பட்டம் அடித்து திரிந்த இந்த கும்பல் இன்று ஜனநாயகத்தை தனது தர்மிக வழியாக தேர்ந்தெடுத்து உண்ணா விரதம் இருக்கிறது. அல்லாஹ் தான் நமக்கு ஆட்சியாளன், அவனிடம் தான் நாம் எல்லாவற்றையும் கேட்க வேண்டும் என்று ஏமாற்றிய இவர்கள், இன்று சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறி கருணாநிதியிடம் பிச்சை கேட்கிறார்கள்.

இன்னும் இவர்களின் அறியாமையையும் ஏமாற்று வித்தையையும் கேளுங்கள். ‘நான் இஸ்லாமிய ஆட்சி அமைத்து வெற்றியாளனக மதினா மற்றும் மக்காவில் நுழையும் போது செய்ய வேண்டிய முதல் காரியம் அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் ஜனாஸாவை தோண்டி எடுப்பது தான் (நவுதுபில்லாஹ்)’ என்ற இமாம் (?) கொமைனியின் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு, எதிர்ப்புகள் கிளம்பிய பின்னர் இமாம் கொமைனி இஸ்லாமிய ஆட்சிதான் அமைத்தார் என்றார்கள். பின்னர் இல்லை என்றார்கள். அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் ஜனாஸாவை தோண்டி எடுப்போன் என்று சொன்னவருக்கு இஸ்லாமிய சாயம் புசினார்கள், இந்த மகான்கள். அதுபோல், ‘கிலாஃபத் இல்லாததால் ஜும்ஆ தொழ தேவை இல்லை’ என்று கூறி ஜும்ஆ தொழ மறுத்த உலக புகழ் (?) பெற்ற அறிஞர் (?) செய்யத் குதுப் அவர்களை போற்றி புகழ்ந்து ‘நவீன இஸ்லாமிய எழுச்சியின் சிந்தனைச் சிற்பி’ என்ற புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்கள். இது போன்ற ஒரு அறியாமையை எவரும் உலகில் வெளிபடுத்தியது கிடையாது. இப்படிபட்ட அறிஞரை (?) இவர்கள் போற்றி மக்களையும் தனது இயக்கதவர்களையும் ஏமாற்றி வருகிறார்கள். இவர்கள் எளிதாக ஏமாற்ற காரணம், இவர்களின் இயக்கத்தில் உள்ளவர்களில் அதிகமானோர், செய்யத் குதுப் என்று எழுத கூட தெரியதா பள்ளி மாணவர்கள் மற்றவர்கள் தலையாட்டி பொம்மைகள்.

இன்று இவர்கள் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த போகிறார்களாம். நாம் இவர்களிடம் கேட்கிறோம், இன்று உங்கள் இயக்கத்தின் பலத்தை காட்ட வேண்டும் என்று உயரிய (?!) நோக்கத்தில் அணிவகுப்பு நடத்துகிறீர்கள். ஆனால், இஸ்லாமிய ஆட்சி செய்ய வேண்டிய ஒரு விஷயத்தை கூட இவர்கள் செய்யவில்லை. இசை ஹராம் என்று கருதும் உங்களின் கொள்கைப்படி இசையில்லாமல் இந்த அணிவகுப்பு நடக்குமா? அல்லது உங்களின் வழிகாட்டி அறிஞர் யுசுப் அல் கர்ளாவி அவர்களின் கருத்துப்படி இசை கூடும் என்று அடிப்படையில் இசை அடிக்க படுமா? அல்லது உங்களின் கேரளா பிரிவின் சுன்னத்துபடி இசை அடிக்கப்படுமா? என்ன? குழம்பிவிட்டிர்களா? பாவம்! இவர்கள் தான் குழப்பத்தின் மறு பெயர். இவர்களின் வோடங்கள் இனி கிழிக்கப்படும் இன்ஷா அல்லாஹ். கிழிக்க போவது யாருமல்ல, முன்னால் சகோதரர்களும் இவர்களின் கூற்றுப்படி இன்னால் முனாஃபிக்களுமான (இவர்களின் கருத்துப்படி இவர்களின் தவறை எதிர்த்தால் முனாஃபிக்) இந்த கொள்கையற்ற இயக்கத்திற்க்காக அல்லும் பகலும் உழைத்தவர்கள்.

குறிப்பு: தற்போது இவர்களிடம் என்ன குறை சொன்னாலும் குலாம் தான் அப்படி செய்தார், நாங்கள் அப்படி செய்வில்லை என்கிறார்கள். இது சுத்த பொய். குலாம் இவர்களுடன் இருக்கும் போது இவர்களும் முடிவெடுக்கும் விசயங்களில் ஈடுபட்டு இருந்தார்கள்.

தொடரும் இன்ஷா அல்லாஹ்……

Create a free website or blog at WordPress.com.