தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 13, 2008

எங்கப்பன் குதிருக்குள் இல்லை – அதிரை ஏ.எம். ஃபாரூக்

Filed under: பி.ஜே, பிராடு, Bakar, PJ, TNTJ — முஸ்லிம் @ 2:36 பிப

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பின் சகோதர, சகோதரிகளே,

நாம் வல்லத்தில் பெருந்தோல்வியுடன் நடந்த கொண்டிருக்கும் ததஜ வின் “தவ்ஹீத் எழுச்சி மாநாட்டின் செய்திகளை” தந்திருந்தோம் உடனே அலறி அடித்து கொண்டு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக தனக்கு தானே சுயமாக ஆப்ப வைத்துக் கொண்டர் அழைப்பு பணியில் அதிரை பாரூக் அவர்கள். அன்பரின் அறிவிப்பு இதோ மக்கள் பார்வைக்காக.

************************************************

அல்லாஹ்வின் திருப்பெயரால்….

தவ்ஹீத் எழுச்சி மாநாடு தகவல்கள் .

எதிர்பார்த்ததை விட மக்கள் கூட்டம் மடைதிறந்நத வெள்ளமாய் வல்லத்தில் நிரம்பி வழிந்தனர். திரண்டு வந்த மக்கள் வெள்ளத்தை உட்கொள்ள முடியாமல் திணறியது ராட்சஸ அரங்குகள்.

எந்தெந்த ஊர்களிலிருந்து எத்தனை வாகணங்களில் எவ்வளவு மக்கள் வந்தார்கள் என்ற துல்லியமான கணக்கு சொல்வதெல்லாம் மிகைப் படுத்தப் படுவதாக அமையும்.

எனது சொந்த ஊர் அதிரையிலிருந்து 30 வேன்கள் சென்றதாக அதிரை கிளை தலைவரிடமிருந்து தகவல் பெற்றுக் கொண்டேன். (அதிரையில் இருந்து 250 பேர் வந்ததாக் நாம் எழுதியுள்ளோம் வேன் ஒன்றுக்கு 10-12 பேர் வந்ததாகவும் எழுதியுள்ளார் நமது செய்தியாளர் அதை உண்மை படுத்தியுள்ளார் அதிரை பாரூக்)

இவ்வாறு ஒவ்வொரு ஊர்களிலிருந்துமாக தமிழ்நாட்டின் நாலாப் புறங்களிலிருந்தும் மக்;கள் புடைசூழ்ந்ததால் மதியத்திற்கு மேல் அரங்குகள் மக்களை பிpதுங்க தொடங்கியது. அதனால் பெண்களுக்கு மட்டும் உள்ளே தங்க அனுமதி வழங்கிவிட்டு ஆண்கள் வெளியேற்றப்பட்டனர்.

குறைபாடுகள்

எதிர்பார்த்ததை விட அதிகப்படியான மக்கள் வருகை தந்ததால் ஏற்கனவே வாக்களிக்;கப்பட்ட அடிப்படை வசதிகள் தோல்வியை தழுவின.

அதிகப்படியான மக்கள் குழுமுவார்கள் என்று ஏற்கனவே எதிர்பாரத்தது தான் ஆனால் மேல்படி நிகழ்;ச்சிகளின் ஏற்பாடுகளுக்காக நியமிக்;கப்பட்ட பொறுப்பாளர்கள் தகுதியற்றவர்கள் அவ்வளவு தான்.

100 ஏக்கர் நிலத்தை செப்பனிடுவதும் அரங்கத்திற்கான பந்தல் அமைப்பதிலுமே கவனம் செலுத்தியவர்கள் அடிப்படை வசதிகளின் மீது சரியான கவனம் செலுத்த வில்லை என்பதற்கு பல டாய்லெடட்டுகளில் பீங்கான் பதிக்கவேப் படாமல் விடப்பட்டிருப்பது ஒரு காரணமாகும்.

வதந்திகள்

அதிகமான மக்;கள் குழுமவில்லை என்று ஒருவர் கூறுவதை நம்ப வேண்டாம் ? இது வடிகட்டியப் பொய் ! (எங்கப்பன் குதிருக்குள் இல்லை!!)

மக்களுக்கான அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்தப் படவில்லை என்பது மட்டுமே உண்மை.

கஃபா செட்டப் நொறுங்கி விழுந்ததாகவும் அதனால் மக்கள் அல்லோல கல்லோப் பட்டதாக கூறுவதையும் நம்ப வேண்டாம் பொய் அதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறவில்லை.

இது பலநாட்களுக்கு முன் அதற்கான அரங்கில் செட் பண்ணும் பொழுது அந்த செட்டப் விழுந்ததும் அதை மீண்டும் அமைத்து விட்டார்கள். (இந்த வாக்கியத்திற்கும் மேலுல்ல வாக்கியத்திற்கும் நேரடி முரன்பாடு!! கவணிக்கவும்)

இறுதி தகவல்

பக்கத்தில் இயங்கும் போர் செட்டிவிலிருந்து பிவிசி பைப் மூலமாக மாநாட்டு அரங்கிற்கு இன்று தண்ணிர் கொண்டுவரப்பட்டு விட்டதது. நேற்று திரும்பிச் சென்றவர்களில் பலரும், நேற்று வரமுடியாதவர்களில் பலரும் தகவல் அறிந்து இன்று வருகை தந்தவண்ணமிருக்கின்றனர் அதனால் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. (மீண்டும் எங்கப்பன் குதிருக்குள் இல்லை!!)

அஸ்ஸலாமு அலைக்கும் அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

வல்லம் தவ்ஹீத் எழுச்சி மாநாடு – சிறப்பு செய்திகள்

Filed under: பி.ஜே, Bakar, PJ, TNTJ — குறிச்சொற்கள்:, , , , — முஸ்லிம் @ 2:34 பிப
மாநாட்டு பந்தலில் பிசுபிசுத்த கூட்டம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரால் தஞ்சை மாவட்டம் வல்த்தில் நடத்தப்படும் “தவ்ஹீத் எழுச்சி மாநாடு” பற்றி ஆஹோ..ஓஹோ வென புகழந்து அறிவிப்புகளும், அட்டகாசங்களுமாக இருந்தன. இடையிடையே இம்மாநாடு எதற்காக, என் நடத்தப்படுகின்றது என ததஜ வின் முக்கியத்தலைவர்களெல்லாம் தினந்தோறும் தொலைக்காட்சிகளில் மணிக்கணக்கில் புசிய வண்ணம் இருந்தனர் உச்சகட்டமாக ததஜ வனி் தலைவர் பி.ஜே அவர்கள் இம்மாநாட்டிற்கு 10 லடசத்திற்கும் அதிகமாக மக்கள் வருவர் என தனது 10 லட்ச புரானத்தையும் பாடினார். வலைகுடா நாடுகலெங்கும் ததஜ வின் தொண்டர்கள் அரபியிலும், ஆங்கிலத்திலும், தமிழிலுமாக பல மொழிகளில் அச்சடித்து நேட்டிஸ்கள் விநியோகித்து அரபுச் சள்ளிகளை வீதியெங்கும், ஏழை தொழிலாளர்கள் வசிக்கும் கேம்புகளென ஓடி..ஓடி பொருக்கி தங்கள் தலைமைக்கு லட்சங்களில் அனுப்பி வைத்தனர். இறுதியாக அந்த நாளும் வந்து விட்டது ததஜ வினர் ஆவலுடன் எதிர்பார்த்த “தவஹீத் எழுச்சி மாநாடு” நேற்று (10-05-2008) அன்று மிக தாமதமாக தொடங்கி இரவு 8 மணிக்கு முன்னராகவு முதல்நாள் அமர்வு முடிவடைந்து விட்டது. .

“தவ்ஹீத் எழுச்சி மாநாடு” குறித்து பலரும் பலவாறு எதிர்பார்த்து காத்திருக்க வரக்கூடிய தகவல்களோ உண்மை தவ்ஹீது் வாதிகளுக்கு மகிழச்சியை அளிக்க கூடியதாகவே உள்ளது. மாநட்டில் ஊடுருவியுள்ள நமது சிறப்பு செய்தியாளர் சகோ. சலீம் அவர்கள் மாநாடு தொடங்கியதில் இருந்து இரவு 10.00 மணிவரை நடந்த தகவல்களை தொகுத்து அனுப்பியுள்ளார் அதை செய்தித் துளிகளாக உலகெங்கும் இம்மாநாடு குறித்த செய்திகளுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் மக்களுக்காக வழங்குகின்றோம்.

10 லட்சம் பேருக்கு வசதியா? 100 ஏக்கரில் பந்தலா? மக்கள் ஏமாற்றம்

மாநாட்டிற்கு 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை தருவர் என ஆஹோ ஓஹோவென தகவல்கள் அள்ளி வீசப்பட்டிருந்தன, இணையமெங்கும் ததஜ வின் தொண்டர்கள் தரணி பாடிக் கொண்டிருந்தனர் 100 ஏக்கரில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது, ISO தரச்சான்றிதழ் உடன் தமிழகமே கண்டிராத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என மிகைப்படுத்தப்பட்ட தகவல்களும், புகைப்படங்களும் வெளியிடப்பட்டு வலைகுடா நாடுகள் எங்கும் மக்கள் நம்ப வைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் ஆரம்பமே வந்திருந்த மக்களுக்கு பேரதிர்ச்சி அளிக்க கூடியதாக இருந்தது முக்கியமாக வலைகுடா நாடுகிளில் இருந்து அரபுச்சள்ளிகளை கட்டி அனுப்பிவிட்டு சிறப்பு விருந்தினராக வந்திருந்த வலைகுடா நாடுகிளன் பொருப்பாளர்களுக்கு.

ஆம் 100 ஏக்கரில் பந்தல் என்று அடித்து விடப்பட்ட கதையை நம்பியிருந்தவர்களுக்கு 3 ஏக்கருக்கும் குறைவான நிலப்பரப்பில் எந்த வசதியும் இல்லாது அமைக்கப் பட்டிருந்த பந்தல் பேரதிர்ச்சியாக இருந்தது. ஒரு ஏக்கருக்கு நெருக்கி அமாந்தாலும் பத்தாயிரத்துக்கு மேல் கொள்ளாது மூன்று ஏக்ரில் முப்பதாயிரம் பேர் கொள்ளளவு உள்ள பந்தலே அமைக்கப்பட்டிருந்தது.

மாநாட்டில் பென்கள் கலவரம்

மாநாடு தொடங்கி சரியாக சுமார் 3.00 மணியளவில் மாநாட்டிற்கு வந்திருந்த பென்கள் கலவரத்தில் ஈடுபடத் தொடங்கினர், காரணம் மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு எந்த ஒரு வசதியும் தங்குவதற்கோ, இயற்கை உபாதைகளை நிறைவுற்றுவதற்கோ செய்து தராமல் இருந்ததுதான். முக்கியமாக பென்களுக்கு தனி இட வசதி ஏதும் செய்திருக்கவிலிலை, பல்வேறு ஊர்களில் இருந்தும் வாகனங்களில் ஏற்றிவரப்பட்ட பென்கள் எவ்வளவு தூரம்தான் இத்தனை ஆன்களுக்கு மத்தியில் மூத்திரமோ, மலமோ கழிக்காமல் இருக்க இயலும்? முதலில் சரியான வசதிகள் இல்லை, இரன்டாவதாக தண்ணீர் சுத்தமாக இல்லை அவ்வளவுதான் பென்கள் கலவரத்தில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். உடனடியாக விழுப்புரம், சென்னை போன்ற பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் கூட்டம் கூட்டமாக மாநாட்டு பந்தலில் இருந்து வெளியேறி தங்கள் ஊர்களுக்கு செல்ல துவங்கி விட்டனர்.

மாநாட்டிற்கு 10 லட்சம் பேர் வந்தனரா?

மாநாட்டில் கடைகள் அணைத்தும் பி.ஜே மற்றும் அவரது சுற்றத்தனராலேயே நடத்தப்பட்டது சாப்பாடு ஒன்று ரூ 50 க்கும் குடிநீர் பாக்கெட் ஒன்று 4 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டதை கண்டு மக்கள் கொதித்து போய் விட்டனர்.பி,ஜே யின் கணக்கு இங்கு தவறி விட்டது என்பதை வந்திருந்த கூட்டம் நிறுபித்தது. காவரி டெல்டா பகுதிகளில் இருந்து அதிகமாக கூட்டம் வரும் என்று மனக்கணக்கு போட்டுத்தான் வல்லத்தில் ஏற்பாடு செய்தார் ஆனால் பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக அவர் மிகவும் எதிர் பார்த்த பகுதிகளில் இருந்து மக்கள் குறைவாகவே வந்திருந்தனர் உதாரனமாக முத்துப்பேட்டையில் இருந்து சுமார் 500 பேர் மட்டும், அதிராம்பட்டினத்தில் இருந்து 250 பேர், பொதக்குடியில் இருந்து 1 கார் மட்டும், பண்டாரவடையில் இருந்து 2 வேன்கள், திருவாருரில் இருந்து சுமார் 100 பேர் என் மிகக ஏமாற்றமளிக்கும் வகையிலேயே கூட்டம் வந்திருந்தது.

மொத்தமாக உளவுத்துறை மற்றும் இவர்களின் கூட்டத்தை கவணித்து வரும் சில அமைப்புகளின் தகவல்படி 9 ம் தேதி இரவில் இருந்து 10 ம் தேதி இரவு சுமார் 10.00 மணி வரை வல்லத்துக்குள் தரை மார்க்கமாக நுலைந்த வாகனங்களின் எண்ணிக்கை கீழ் வருமாறு :

வேன்கள் (அனைத்து வகை) – 308 (1 வேனுக்கு 8 முதல் 12 பேரே அமாந்து வந்துள்ளனர்)

  • பஸ்கள் (அனைத்து வகை) – 172 (1 பஸ்சுக்கு 25 முதல் 40 பேர் வரை வந்துள்ளனர்)
  • சுமோ வகை கார்கள் – 78
  • ஸகார்பியோ இன்ன பிற வகை கார்கள் – 40
  • அம்பாசடர் கார்கள் – 79
  • மோட்டார் பைக் 2 சக்க வாகனங்கள் – 264

மொத்தமாக 10ம் தேதி மாலை வரை வந்த கூட்டம் சுமார் 13,000 த்தல் இருந்து 17,000 ம் வரையே. இந்த கூட்டத்திற்கே பந்தலில் முறையான வசதிகள் செய்யப்படவில்லை. ஆகையால் இதில் ஒரு பகுதியினர் மாலை 3 மணிக்கு மேல் தங்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆரம்பித்ததை காண முடிந்தது.

 

30,000 பேரே அமர இயலாத பந்தலுக்கு ஏறத்தால 46,000 சேர்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு குவித்து வைக்கப்பட்டிருந்தது இவர்களின் சரிவர திட்டமிடாமையை காட்டியது. இடையில் பென்களின் ஊடே மாநாட்டிற்கு வந்திருந்த சில இளைஞர்கள் புகுந்து சில்மிசங்களில் ஈடுபட்டதால் அமளி ஏற்ப்பட்டது உடனே திரு. பாக்கர் அவர்களும், திரு. பி.ஜே அவர்களும் மைக்க பிடித்து உடணடியாக பென்களின் ஊடே ஊடுருவி உள்ள ஆன்கள் வெளியேறுமாறு தொடாந்து அறிவித்த வண்ணம் இருந்தனர்.

நொருங்கி விழுந்த காபா செட்

அசம்பாவிதங்களின் உச்ச கட்டமாக உலகெமெங்கும் எதிர்ப்பை மீறி மக்காவில் அமைந்துள்ள காபத்துல்லா என்ற இறையில்லம் போன்று அமைக்கப்பட்டிருந்த அந்த அமைப்பு (செட்) ன் ஒரு பகுதி நொருங்கி விழுந்தது. உடன்டியாக மாநாடெங்கும் பரபரப்பு ஏற்ப்பட்டது. ஏற்னவே அக்கிணி வெயிலிலிலும் அனல் காற்றிலும் சரிவர எந்த வசதியும் செய்து தராததால் மனம் வெதும்பி போய் இருந்த பென்களுக்கு இது போன்று தண்ணீரோ மூத்திரம் பேய்வதற்கு கூட வசதிகளோ இல்லாததால் கூக்குரலிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர், இந்த நிலையில் காபா போன்று அமைக்கப்பட்ட செட்டும் உடைந்து விழுந்துவிட மக்களும் கட்டுப்பாடின்றி உரை எதையும் கேட்காமல் அங்கும் இங்கும் அலைய ஆரம்பித்தவுடன் வெறுப்பாகி போன் பி,ஜே யும் பாக்கரும் மேடையில் ஏறி சும்மாக்காச்சும் அழுது காட்டி மக்களை சென்டிமென்டாக டச் பண்ண முயற்சி செய்தனர் பாச்சா எதுவும் பலிக்கவில்லை என்றவுடன் விரைவாக மீட்டிங் முடிக்கப்பட்டது.

நிகழச்சியில் தன்னாலும் முடியும் என்ற போட்டி மனப்பான்மையுடன் பீஸ் மாநட்டில் ஏற்பாடு செய்திருந்தது போல் ஒரு கண்காட்சிக்கும் முயற்சி செய்திருந்தனர் அந்த கண்காட்சியல் வைக்கப்பட்டிருந்த தகவல்தான் கொடுமையிக் உச்சம், அதாவது இஸ்லாத்தின் வரலாறு என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் நபிமார்கள். சஹாபாக்கள், தாபியின்கள், அறிஞர்கள் என்ற வரிசையில் பலரின் பெயர், பிறந்த வருடம் ஊர் என குறிப்பிடப்பட்டிருந்தது அந்த வரிசையில் இமாம் புகாரி (ரஹ்) இப்னு தைமியா(ரஹ்) என இவர்களுக்கு அடுத்தபடியாக பி.ஜெயினுல்லாபுதீன் அவர்களின் பெயரை குறிப்பிட்டு மாபெரும் மார்க்க அறிஞர் என அவரின் பிறந்த வருடமும் குறிப்பிடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது பலரை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது..

அதுவும் இமாம் புகாரி (ரஹ்) வரிசையில் இப்னு தைமிய்யா அவர்களுக்கு அடுத்தபடியாக உலகில் இஸ்லாத்திற்கு முக்கிய சேவையாற்றியவர் என பி.ஜெயினுல்லாபுதீன் அவர்களின் தகவல் வைக்கபபட்டிருந்ததை பார்த்த ததஜ வினர் பலருக்கே நெருடலாக இருந்ததை உணர முடிந்தது.

அத்துடன் இடையில் வெளியடப் பட்ட அறிவிப்பு ஒன்று இன்னும் மக்கள் சங்கடப்பட வைத்தது அதாவது நாளை (இன்று 11-05-2008) நடைபெறும் நிகழ்ச்சியில் பி.ஜெயினுல்லாபுதீன் அவர்களுக்கு தவ்ஹீதை காத்ததற்காக பட்டம ஒன்று வழங்கப்பட உள்ளது என்ற செய்தி. நிகழ்சி எதிர் பார்த்தபடி நடக்காததாலும் மக்கள் கூட்டம வராததாலுமட் வந்திருந்த மக்களுக்கு முறைப்படி வசதிகள் இல்லாததால் சலசலப்பு ஏறப்பட்டு கலைந்து சென்றதாலும் வெறுப்பின் உச்சத்தில் இருந்த பி.ஜே பலரை கடும் வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்ததை சாதாரன தொண்டர் முதற்கொண்டு காண முடிந்தது.

இறுதியில் மைக்கை பிடித்த பி.ஜே நீலிக் கண்ணீர் வடித்தும் மக்கள் மசியாததால் பதினைந்தாயிரம் பேரே கூடாத இந்த கூட்டத்தை கும்பகோனத்தில் நடக்கும் மகாமகத்துக்கும், மக்காவில் நடக்கும் ஹஜ்ஜீக்கும் ஒப்பிட்டார், ஹஜ்ஜீக்கு லட்சக்கணக்கில் வசூல் செய்யும் சவுதி அரசாங்கத்தாலேயே வரக்கூடிய மக்களுக்கு சவுகரியங்கள் செய்ய இயலவில்லை அது இது என சாக்கு போக்குகள் சொல்லி மற்றவர்களின் தவறுகளையும் குறைகளையும் எடுத்து சொல்லி அத்துடன் இம்மாநாட்டில் உள்ள குறைகள் ஒன்றும் பெரிததல்ல என்பது போல் ஒப்பீடு நடத்தியது வந்திருந்த மக்களுக்கு மேலும் எரிச்சலை ஏறப்படுத்தியது.

இடையி்ல் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை பி.ஜேயும் பாக்கரும் நடத்தினர் வந்திருந்த பத்திரிகையாளர்களுக்கு மத்தியில் உரையாற்றிய பி.ஜே மாநாட்டிற்கு ஒரு லட்சத்திற்கு அதிகமாக மக்கள் வந்திருப்பதாக தனது சுருதியை குறைத்து (10 லட்சம் என ஏற்கனவே பலமுறை அடித்து விட்டவர்) வாசித்தார் ஆனால் விடாத இந்தியா டைமஸ் நிருபர் ஒரு லட்சம் என்கின்றிர்கள் வந்திருப்பது மிக குறைவாக உள்ளதே என்றதற்கு மழுப்பினார்.

பின்னர் மற்றொரு நிருபர் நேற்று வேலுர் கோட்டையில் தமுமுக வினர் தொழுகை நடத்த திரண்டு நடத்திய போராட்டத்தையும் அங்கு கூடிய மக்களையும் சுட்டிக் காட்டி கேள்விகளை எழுப்பினார் அதற்கும் மழுப்பலாக பி.ஜே நாங்கள் நடத்தும் இம்மாநாடு மக்களிடையே பிள்ளி, சூனியம், மந்திரம் தந்திரம் போன்ற மூட நம்பிக்கைகளை போக்கவும், வரதட்சினை போண்ற கொடுமைகளை ஒழிக்கவும் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவுமே நடத்தப்படுகின்றது என திரும்ப திரும்ப கூறிக் கொண்டேயிருந்தார் ஒரு இடத்தில் கூட ஏகத்துவத்தை நிலைநாட்டவும், இஸ்லாத்தை பற்றிய எழுச்சியை மக்களிடையே ஏற்படுத்தவும் என கூறவில்லை. இறுதியாக மற்றோர் ஆங்கில பத்திரிகை நிருபர் தமுமுக வின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இம்மாநாடு குறித்து கருத்து தெறிவிக்கையில் “இது பொழுது போக்கிற்காக” நடத்தப்படும் நிகழச்சி (It is an entertainment gathering) என்று கூறியுள்ளார் இது குறித்து தங்கள் பதில் என்ன என்று கேட்டதற்கு மழுப்பலாகவே ஏதோ சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டார்.

தென்மாவட்டங்களில் இருந்து அதிகமாக கூட்டம் வரவில்லை வந்த சில வாகனங்களையும் திருச்சியிலேயே நிறுத்தி வைத்துள்ளதாக தகவல், இங்கு இட வசதி இல்லை என்ற காரனத்தினால் பலர் திரும்பி சென்று கொண்டுள்ளனர், பெரும் தூரங்களில் இருந்த வந்திருந்த பென்கள் தங்குவதற்கும், இயற்கை உபாதைகளை நிறைவேற்றுவதற்குதம் கூட மறைவான இடம் இல்லை. நுறு (100) ஏக்கர் பந்தல் கதை அம்பேலாகி விட்டது.

மாநாட்டிற்கு வந்திருந்த மக்கள் காறித்துப்பாத குறையாக நிர்வாகிகளை பிடித்து உழுக்கி கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது. அரசியல் அனுபவமே இல்லாத தப்லீக் ஜமாத்தனர் கூட இரன்டு லட்சத்திற்கு அதிகமாக மக்கள் கூடிய தங்கள் இஜ்திமாவில் முறையாக உணவு, கழிப்’பிடம், தங்கும் வசதிகளை செய்திருந்தனர் ஆனூல் அரசியல் வித்தகர்களாக கூறிக்கொள்ளும் இவர்களால் 15 ஆயிரம் பேருக்கு வசதிக் செய்ய முடியவில்லை என பேசிக் கொண்டிருந்தனர்.

இறுதியாக மக்கள் தகவலுக்காக 10 லட்சம் பேர் வரவேண்டும் என்றால் எத்தனை வாகனம் வேண்டும் என்ற கணக்கு கீழே உள்ளது பார்த்து கொள்ளவும், இன்னும் 10 லட்சம் பேர் கூடிய ஒரு நிகழ்வு ஹஜ்ஜீக்கு அடுத்தபடியாக நிகழ்ந்ததென்றால் ஈரான் மதகுரு திரு. கொமெனி அவர்களின் சவ ஊர்வலத்தின்போது தான் தமிழகத்தில் பேரரிஞர் அண்ணா மரணித்தபோது இத்தனை பேர் கூடவில்லை என்பது வரலாறு.இது மக்ள் கற்பித்த பாடமா? இல்லை தற்பெருமைக்கு இறைவனால் வைக்கப்பட்ட ஆப்பா? …. செய்தி தொடரும்…

10,00,000 – பத்து இலட்சம்

கும்பகோணத்தில் நடைபெற்ற பேரணியில் பத்து இலட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக த.த.ஜ.வினர் கூறிவருகின்றனர். பத்து இல்லை பதினைந்து, பதினெட்டு என்று கூறுவோரும் உண்டு. பத்து இலட்சம் மக்கள் கலந்துகொண்டால் வாகன வசதி பின்வருமாறு இருக்க வேண்டும்.

5,000 – ஒப்பந்த ஊர்திகள்

34 பேர் பயணம் செய்யக்கூடிய பேருந்தில் மிக அதிகபட்சமாக 50 பேர் பயணம் செய்தார்கள் எனக்கொண்டால் 2,50,000 பேர்.

10,000 – வேன்கள்

11பேர் பயணிக்கக்கூடிய வேனில் மிக அதிகபட்சமாக 20 பேர் பயணம் செய்தனர் எனக் கணக்கிட்டால் 2,00,000 பேர்.

25,000 – பைக்குகள்

2 பேர் பயணம் செய்யக்கூடிய பைக்குகளில் 3 நபர் வீதம் பயணம் செய்தனர் என்று கணக்கிட்டால் 75,000 பேர்.

உள்ளூர் மக்கள்

கும்பகோணத்தின் மொத்த மக்கள் தொகை (இந்துக்கள் உள்பட) சுமார் 1,60,000. இதில் 1,50,000 பேர் கலந்து கொண்டார்கள் எனக் கருதுவோம்.

அக்கம் பக்கத்தினர் – 3,25,000

தஞ்சை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மண்ணார்குடி, சென்னை சாலை என 5 வழித் தொடர்பு உள்ள கும்பகோணத்திற்கு ஒவ்வொரு வழியிலிருந்தும் அரசு பேருந்துகள் மூலமாக சுமார் 1000 பேருந்தில் ஒவ்வொரு பேருந்திலும் குறைந்தது 65 நபர்கள் பயணம் செய்தால் 3,25,000 மக்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

அதாவது மேலே குறிப்பிடப்பட்டுள்ள 5 வழித்தடங்களிலிருந்தும் காலை 4மணி முதல் மாலை 4 மணிவரை – 12 மணிநேரத்தில் சுமார் 1000 பேருந்துகள் வரவேண்டும். அதாவது ஒரு மணிநேரத்திற்கு சுமார் 83 பஸ்கள் – புரியும்படி சொன்னால் இந்த ஐந்து வழிகளில் ஒவ்வொரு வழியிலிருந்தும்
45 விநாடிகளுக்கு ஒரு பேருந்து வரவேண்டும். இப்படி பேருந்து சேவை உள்ள பகுதி உலகில் எங்குமே இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.

அக்கம் பக்கத்தினர் வருவதற்கு மட்டுமே 45 விநாடிகளுக்கு ஒரு பேருந்து. ஒப்பந்த ஊர்திகளில் வருவோரும் இந்த 5 வழிகளில்தான் வரவேண்டும். இதையும் சேர்த்தால் 12 மணி நேரத்தில் சராசரியாக 22.5 விநாடிகளுக்கு ஒரு பேருந்து வந்திருக்க வேண்டும். இவை பேருந்துக்கான கணக்கு மட்டுமே. வேன்களின் எண்ணிக்கையும் சேர்த்து நீங்களே கணக்கு செய்து கொள்ளுங்கள்.

பேரணி – மாநாடு முடிந்து இந்த வாகனங்களில் வந்தவர்கள் திரும்பி செல்வதாயிருந்தால் மொத்தம் 45,000 வாகனங்கள் ஒவ்வொரு வழியிலும் 9,000 வாகனங்கள் திரும்புவதாகக் கணக்கிடுவோம். 5 விநாடிக்கு ஒரு வாகனம் வீதம் நிமிடத்திற்கு 12 வாகனங்கள். ஒரு மணி நேரத்திற்கு 720 வாகனங்கள். 12.5 மணி நேரத்திற்கு 9000 வாகனங்கள் ஆகியிருக்கும். ஒரு நிமிடத்திற்கு 12 வாகனங்கள் வீதம் சென்றால் எத்துனை அசம்பாவிதங்கள் நடக்கும். எத்துனை போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதையெல்லாம் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

இது சாத்தியமா? இத்துனை மக்கள் கும்பகோணத்தில் கூட முடியாது என்பதும் கூடினால் என்னென்ன விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதெல்லாம் அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தெரியாதா? பின் யாரை ஏமாற்ற 10 இலட்சம்? வெளிநாடுகளில் இருக்கும் தமிழக முஸ்லிம்கள் நாம் சொல்வதை அப்படியே நம்பிவிடுவார்கள் என்ற எண்ணம்தானே இப்படிச் சொல்ல வைக்கின்றது. அவர்கள் சிந்திக்க மாட்டார்கள் என்று நினைக்காதீர்கள்.

குறிப்பு: பேரணி நடந்த மறுநாள் நான் போட்ட கணக்கு இது. பத்து இல்லை. அதில் பாதி கூட கலந்து கொள்ளவில்லை என்பதை தேர்தல் நிரூபித்துவிட்டது. எனினும், த.த.ஜ.வினர் பொய்க் கணக்குகளை, புள்ளி விபர மோசடிகளை இன்றும் அப்படியே நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவி பக்தர்கள் அறிந்து கொள்வதற்காக இப்போது பதிகிறேன்

மே 3, 2008

பி.ஜே யோடு கைகோர்த்து பணி செய்ய காத்திருக்கின்றேன் – மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

Filed under: இம்தாதி, ததஜ, பி.ஜே, PJ, TNTJ — முஸ்லிம் @ 9:00 பிப

கண்டு விட்டீர்களா? மெளலவி ஜமால் மதனியின்…ததஜ வை விமர்சிப்பது ஏன்?

அல்லாஹ்வின் திருநாமத்தால்……..

நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்’ 51:55, ‘எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினை இருக்கிறது’50:35.

அன்புச் சகோதரரே! பல சகோதரர்களின் உருவப்படங்களுடன் எனது உருவப் படத்தையும் இணைத்து நீங்கள் தொகுத்த ஒரு ஆக்கம் கண்டேன். அதைக் கண்டபோது அதைத் தொகுத்த நீங்கள் தவ்ஹீதில் அக்கறை உள்ளவர் என்பதும், அதே நேரம் நீங்கள் தமிழகத்தில் தவ்ஹீத் உருவான, உருவாகி வளர்ந்த வரலாறு தெரியாதவர் என்பதும் பளிச்சென தெரிந்து விட்டது. எனவே உங்களைப் போன்று தமிழகத்தில் தவ்ஹீத் உருவான வரலாறு தெரியாமலேயே செயல்படும் பல இளைஞர்கள் உண்மையைப் புரிந்து உரிய பலனைப் பெற வேண்டுமென்ற நன் நோக்கில் மேற் குறிப்பிட்டிருக்கும் இறைவாக்கிற்கொப்ப இதனை அறியத் தருகிறேன். யா அல்லாஹ்! சத்தியத்தை சத்தியமாகக் காட்டி அதனை பின் பற்றும் பாக்கியத்தையும் அசத் தியத்தை அசத்தியமாகக் காட்டி அதனை தவிர்ந்து கொள்ளும் பாக்கியத்தையும் தந்தருள்வாயாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

அன்புச் சகோதரரே! தமிழகத்தில் குர்ஆனும் ஹதீசும்தான் மார்க்கம் அவ்விரண்டிற்கும் மாற்றமானவை மார்க்கமற்றவை என்பதை நமது நாட்டில் துவங்கி பல இடையூறுகளை அனுபவித்து அல்லாஹ்வின் மா பெரும் அருளால் அது வளர ஆரம்பித்ததும் தமிழகத்தில் பல பகுதிகளில் பல்வேறு பெயர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பல அமைப்பின் சகோதரர்கள் திருச்சியில் 1986 களில் கூடிய ஒருசமயத்தில் எல்லோர் உள் ளத்திலும் ஒரே பெயரில் நாம் இயங்கினால் நன்றாக இருக்குமே என்று எண்ணியபோது நிறுவப்பட்ட அமைப் புதான் ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன், வல்ஹதீஸ்., அன்றைக்கு அந்த சிந்தனையைப் பரப்புவதில் அதிகப் பங்கு வகித்தவர்களில் முக்கியமாக இருந்த உங்களின் தலைவர் தான் அப்போதைக்கு முதலாவதாக தற் காலிகத் தலைவராக இருந்தார் அதன் பின்னர் கூடிய கூட்டத்தில் தான் உங்களின் தலைவரும் சேர்ந்து இவ்வமைப்பிற்கு தற்போது இருந்து வரும் கமாலுத்தீன் மதனி தலைவராக்கப்பட்டார்.

அன்று உருவாகப் பட்ட அமைப்பில் அங்கம் வகித்த நான் அன்றிலிருந்து இன்று வரை அல்லாஹ்வின் பேரருளால் அதே கொள்கையில் அதே தலைமையில் அதே அமைப்பில் இருந்து செயல்பட்டு வருகிறேன். அல்லாஹ் இதே நிலையில் என்னை இறுதி வரை வாழ வைத்து ஈமானுடன் உண்மை முஸ்லிமாக மரணிக்கச் செய்ய வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டுமிருக்கிறேன். ஒரே அமைப்பில் இருக்கிறேன் என்று சொல்வதால் உங்கள் தலைமையை கண்மூடித்தனமாக உங்களைப் போன்றவர்கள் பின்பற்றுவது போல என்று எண்ணி விடக்கூடாது. மாறாக, அல்ஹம்து லில்லாஹ் தலைமையில் காணுகின்ற குறைகளை அன்றும் இங்கு வரு வதற்கு சில தினங்களுக்கு முன்பும் கூட தயவுதாட்சண்யமின்றி சுட்டிக் காட்டித்தான் வந்திருக்கிறேன்., அல்ஹம்துலில்லாஹ் எங்களது தலைவர் உங்களின் தலைவர் போன்றில்லாமல் தவறை உணர்த்தப்பட்டால் உடனே மன்னிப்புக் கேட்கும் தலைவர். அச்சுபாவம் உங்களின் தலைவருக்கு இல்லாததால் தான் அமைப்பு அமைப்பாக தலைவர் தலைவராகத் தாவிச் சென்று இறுதியில்– நான் எந்த அமைப்பிலும் கேள் விப்படாத தலைவரை உதவித் தலைராக்கிவிட்டு–தானே தலைவராகிவிட்டார்.

உங்களின் தலைவர் பகிரங் கமாகக் கூறிய பொய்ச் செய்தியைச் சுட்டிக்காட்டியபோதும் கூட அதை ஏற்காதவர். மட்டுமின்றி நாங்கள் ஒரே தலைமையின் கீழிருந்த காலத்தில் நான் சுட்டக்காட்டிய அளவிற்கு உங்கள் தலைவர் சுட்டிக் காட்ட வில்லை –அவருக்கு தலைமையின் மூலம் இலாபமிருந்தது– மட்டுமின்றி தனது கருத்தைத்தான் தலைவர் செய்ய நிர்ப்பந்திப்பார்.

விஷயத்திற்கு வருவோம்;.

எனது படத்தைப் போட்டுவிட்டு எனது பெயரைக் குறிப்பிடாமல் …குராஃபாத் அமைப்புகளில் பைஅத் செய்து கொண்டதாகவும் ஏகத்துவத்தைக் கை கழுவி விட்டதாகவும் எழுதியிருந்ததைப் பார்த்ததும் உங்களின் மீது அனுதாபம்தான் எனக்கு ஏற்பட்டது. ஹைர்! அல்லாஹ்வே சாட்சி! அல்லாஹ்வே போது மானவன்! நீங்கள் கூறியதை சாட்சியோடு இன்னவரிடம் பைஅத் செய்துள்ளார், இன்ன இடத்தில் தவ்ஹீ துக்கு மாற்றமாக பேசியுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தால் நீங்கள் ஒரு தெளிவான தவ்ஹீத்வாதி என ஏற்றுக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு நம்மைச் சுற்றி என்ன கூறினாலும் ஏற்றுக் கொள்ள ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது என்ற மதமதப்பில் உங்கள் தலைவர் போல பல செய்திகளை அடித்துவிட்டிருக்கிறீர்கள்.

நினைவுக்கு வந்த சிலவற்றைத் தருகிறேன், படியுங்கள் சிந்தியுங்கள், திருந்துங்கள், திருத்துங்கள்.நான் குறிப்பிட்டவற்றில் தவறு கண்டால் சுட்டிக் காட்டுங்கள், ஆதாரத்துடன் தவறை சுட்டிக்காட்டுபவருக்கு நன்றி கூறி திருத்திக் கொள்வேன். இவையெல்லாம் சுட்டிக் காட்டுவதன் நோக்கமே தவறு செய்தவர்கள், செய்ப வர்கள் திருந்த வேண்டுமென்ற நல்லெண்ணத்தில்தான். தவறெனத் தெரிந்ததும் திருந்துபவர், திருத்திக் கொள்பவர், திருத்த முயற்சி செய்பவர் ஆகிய அனைவரும் இறையன்பைப் பெறும் தகுதிக்குரியவர், தவறைத் திருத்திக் கொள்ளாமல் நியாயப்படுத்த நினைப்பவர் ஷைத்தானின் அடிமைகள். யா! அல்லாஹ் ஏகத்துவ வாதிகளை உன் அன்பைப் பெறத் தகுதியானவர்காக ஆக்கி அருள்வாயாக!.


நீங்கள் உங்களின் ஆக்கத்தில் கூறியிருக்கிற குற்றச்சாட்டுகள் உங்கள் தலைவரைத்தான் என்பதை நீங் களே நான் தருகின்ற ஆக்கங்கள் மூலம் புரிந்துகொள்வீர்கள் இன்ஷா அல்லாஹ்.

உங்களின் தலைவர் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சத்தியத்தைக் கூறுவதெற்கென்றே தமிழகத்தில் உருவாக்காப்பட்ட அமைப்பிலிருந்து தடம்புரண்டு வேறு அமைப்பில் பைஅத்துச் செய்து கொண்ட பின் அவரின் முரண்பாடுகளில் சில:

ஏகத்துவ மேடைகளில் (நான் ஏகத்துவ மேடை என்று குறிப்பிடுவது 1986 களில் தமிழகத்தில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உருவாகப்பட்ட அமைப்பு) தர்க்காவிற்கு செல்வது அல்லாஹ் மன்னிக்கவே மாட்டேன், நிரந்தர நரகம், அப்படிச் செய்பவர் முஷ்ரிக், காஃபிர் இத்தகையவர்களிடம் சமரசம் செய்து கொள்வதற்கு இடமே இல்லை என்று அழுத்தம் திருத்தமாகப் பேசிய அதே நாக்கு, முஸ்லிம் என்ற பெயர் உள்ள எல்லோரும் வாருங்கள் நீங்கள் எந்தக் கொள்கையில் இருந்தாலும் பரவாயில்லை, உங்களுக்காக குரல் கொடுப்ப தற்கே அமைப்பை உருவாக்கப்பட்டிருக்கிறது, இது தவ்ஹீதைக் கூறாது எனக் கூறி அந்த அமைப்பின் தலைவரிடம் பெயருக்கு பைஅத் செய்து அமைப்பாளராகி, தவைலரும் தனது கருத்தையே பிரதிபலிக்க வேண்டுமென்று அங்கிருந்து விலகும் வரை நிர்பந்தித்து கொண்டிருந்தவர்தான் உங்கள் தலைவர்.

  • அந்த மேடையில் எங்கள் தர்காவிற்கு பஸ் விடு என்று முழங்கினார். பித்அத்கள் நரகத்திற்கு இட்டுச் செல்லு மென முழங்கிய அதே குரலிலல் எங்கள் ஹஸரத்தைக் கூப்பிட்டு ஃபாத்திஹா ஓதச் செய் என்றும் முழங் கினார்-சத்தியம் அவர் உள்ளத் தில் இருந்ததால் பேசியபோதே நினைவு வந்தவுடன் தர்கா கூடுமா? கூடாதா என்பது வேறு என்றும் சொல்லிக் கொண்டார்- அரசியலுக்கு ஒரு தலைமை ஆன்மீகத்திற்கு ஒரு தலைவர் என்று முஸ்லிம் சமு தாயம் சென்றதால்தான் சமுதாயம் சீரழிந்து போய்விட்டது என்று பேசிய அதே குரல் தான் அரசியலுக் கும் ஒரு அமைப்புத் தேவை என்று அமைப்பாளரானார்.
  • அமைப்பாளரானதும் தவ்ஹீத் மேடைகளில் முஸ் லிம்களின் பின்னடைவுக்கு ஆலிம்களே காரணம், ஏனெனில் இவர்கள் ஆங்கிலேயனின் மீது கொண்ட வெறுப்பால் இங்லீஸ் படிக்ககக் கூடாது என்றனர், பேண்ட் போடக்கூடாது என்றனர் என்று முழங்கினார், அதே குரலில் தவ்ஹீத் அல்லாததைச் சொல்வதற்காக பைஅத் செய்து கொண்ட மேடையில் முழங்கும் போது –சுப்ஹானல்லாஹ் நரம்பில்லா நாக்கு என்பார்களே அதை அப்படியே மெய்ப்பிக்கும் விதமாக- நமது ஆலிம்கள் எப்படிப்பட்ட தியாகிகள் தெரியுமா? (தேச பக்திக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்பதைத் தவ்ஹீத் மேடையில் ஆணித்தரமாக அழுத்தம் திருத்தமாகப் பேசியவர்)தேசபக்தியின் காரண மாக ஆங்கிலம் படிப்பது ஹராமென்றார்கள், பேண்ட் அணியக்கூடாது என்றனர் என்று முழங்கினார் முரண்பட்டுப் பேசுகிறாறே என்று ஆட்சேபிக்க வேண்டிய உங்களைப் போன்ற தவ்ஹீத் வரலாறு தெரியாத வர்கள் அப்போதும் நாரே தக்பீர் அல்லாஹுஅக்பர் என்று முழங்கினார்கள்.
  • உங்கள் ஓட்டு யாருக்கு என்ற தலைப்பில் எல்லா அரசியல்வாதிகளையும் அலசி எவருக்கும் ஓட்டுப் போடக்கூடாது என்று பேசிய அதே வேகத்தில் எந்த அரசியல்வாதியும் செய்யாத ஒன்றை– அதாவது ஒரு முறை திமுக, அடுத்து அதிமுக, அதையடுத்து சில பகுதிகளில் திமுக, சில பகுதிகளில் அதிமுகவை ஆதரிக்கிறோம் என்று -தடுமாற்றத்தையே வாடிக்கையாகக் கொண்டவர் தான் நீங்கள் சார்ந்திருக்கும் அமைப்பின் தலைவர். மட்டுமா! ஜெயலலிதாவை மிகக் கடுமையாக கேவலமானவர் என்று ஆதார அடிப் படைகளுடன் விமர்சனம் செய்து உணர்விலும் எழுதி, மேடைகளிலும் பேசிவிட்டு அம்மையாரை முத லமைச்சாருக்குங்கள் என்று ஊர் ஊராகச் சென்று ஓட்டு வேட்டை நடத்தினார், அவரின் தலைமை யின் கீழுள்ள சிலர் அம்மாவின் ஆட்சியில் முஸ்லிம்கள் நிம்மதியாகத் தூங்குகிறார்கள் என்றாகள்.
  • தவ்ஹீத் (தமிழ் நாடு தவ்ஹீதல்ல) மேடையில் பெண்களிடம் ஆட்சியை ஒப்படைப்பவர்கள் மண்ணுக்கு மேல் வாழ்வதை விட மண்ணுக்கடியில் வாழ்வதே சிறந்தது என்ற ஹதீஸை அற்புதமாக எடுத்துரைத்த மாமேதை தான் உங்களின் தலைவர்.
  • ஜம்மியத் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்ற அமைப்பின் தற்காலிகத் தலைவராக இருந்து பின்னர் அவரும் இணைந்து இவ்வமைப்பிற்கு கமாலுத்தீன் மதனியை தலைவராகத் தேர்வு செய்து, அது வளர ஆரம்பித்த கட்டத்தில் தலைவரின் மீது பலரும் பல குற்றச் சாட்டுகளைக் கூற தலைவர் தனது தலைமைத் தனத்திலிருந்த விலகிக் கொள்கிறேன் என்று வந்தபோது இஸ்லாத்தில் தலைமையை மாற்ற இடமேயில்லை மரணிக்கும் வரை அவர்தான் தலைவர் என்றும் அதற்கு நானே அவரிடம் முதன்மையாக பைஅத் செய்கிறேன் என்றும் கூறினார். பின்னர் அதிகாரமுள்ள தலைவர் அதிகாரமற்ற தலைவர் என்ற தத்துவத்தை முன் வைத்து தமிழ் முஸ்லிம்களுக்கு ஆன்மீகத்திற்குத் தலைவர் ஒருவர் கிடையாது என்று இரண்டாம் முறையாக அவர் பைஅத் செய்து கொண்ட மேடைகளில் பேசினார், எழுதினார்.
  • இன்றைக்குத் தமிழகத்தில் சமுதாயப் பணிகள் செய்வதற்கு முஸ்லிம்கள் நம்பிச் செயல்பட, உதவிகள் செய்ய மிகத் தகுதியான அமைப்பு தமுமுக, மார்க்கப்பணிகள் செய்திட நம்பி உதவி செய்யத் தகுதியான அமைப்பு ஹாமித் பக்ரியின் தலைமையில் இயங்கும் அனைத்துத் தவ்ஹீத் ஜமாஅத் என்று என்று மனம் திறந்து மடல் என்று மடலை– தமிழகம் அவருடைய பேச்சைக் கேட்டுத்தான் எதுவும் செய்கிறது என்பது போல—உணர்வில் எழுதினார், சுப்ஹானல்லாஹ் எழுதிய சில மாதங்களிலேயே வஹி வந்தவர்போல தமுமுக தவ்ஹீத் வாசலை அடைத்துவிடக்கூடிய அமைப்பு, ஹாமித் பக்ரிக்கு தீவிர வாதிகளுடன் தொடர்பு இருக்கின்றது என்றார், சுப்ஹானல்லாஹ் சுப்ஹானல்லாஹ் சுப்ஹானல்லாஹ் கண்மூடித் தனமாக பின்பற்றும் தன்மையை ஒழிக்க வேண்டுமென முழங்கிய அவரே அத்தகைய கூட்டத்தின் தலைவராக மாறியிருக்கிறார்.

அல்லாஹ்வின் கிருபையால் தமுமுக அவர் வெளியே வந்த பின்னர் தமுமுக மேடையிலேயே தவ்ஹீதை பகிரங்கமாக முழங்கும் நல்ல சூழலுக்கு மாறியுள்ளது, பல நல்லவர்களிடம் தொடர்பு வைத்துக் கொள்ளும் அமைப்பாகவும் மாறியுள்ளது அல்ஹம்து லில்லாஹ்.

  • மா மனிதர் என்று ஒரு தலைப்பில் மிக அழகாக (ஸல்)அவர்களைப் பற்றி பல காலமாகப் பேசியிருக்கி றார். அதில் ஒரு முறை மாமனிதர் (ஸல்)அவர்கள் சபையில் இருக்கும்போது அவர்களைத் தேடி வருபவர்கள் முஹம்மத் யார் எனக் கேட்குமளவிற்கு மக்களோடு மக்களாக அமர்ந்திருப்பார்கள் என்ற உண்மையை அழகாக அழுத்தமாக எடுத்துச் சொன்னவர் உங்களின் தலைவர் இன்று வரை அவரை யாராவது பார்க்கச் சென்றால் நேரடியாகச் செல்ல முடியாது, ஏன் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் கூட நேரடியாக தொடர்பு கொள்ள இயலாது, சபையில் மக்களோடு மக்களாகப் பார்க்கவே முடியாது.
  • உங்களின் தலைவர், மா மனிதர் இடம், நேரம், காலத்திற்குத் தகுந்தாற்போல உங்களைப் போன்ற தம்பிகள் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு பேசுவதில் அவருக்கு நிகர் அவரே. சிறந்த அறிவாளி ஆனால் அறிவாளிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள் அற்றவர்.

ஒவ்வொரு அமைப்பை விட்டும் வெளியேறும்போது ஏதேனும் நொண்டிக் காரணங்களை தூய எண்ண முள்ளவர்கள் கூறுவதுபோல கூறிவிட்டு சென்ற பின்னர் தான் சார்ந்திருந்த காலங்களிலெல்லாம் அவர்க ளுடன் கைகோர்த்து எல்லாக் காரியங்களையும் செய்து விட்டு அல்ல அல்ல தனது சர்வாதிகாரத்தால் செய்ய வைத்துவிட்டு இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளைக் கூறுவார் உங்களைப் போன்ற புகழ் பாடும் கூட்டமிருப்பதால்! எந்த அளவிற்கென்றால் அல்லாஹ்வும் ரசூலும் வண்மையாக மிக மோசமான கெட்டவை என்று கண்டித்துக் கூறியதை அவரது கட்டுப்பாட்டிற்கு கீழிருந்த இருக்கிறவர்களில் இருவரை ஊர் ஊராக அனுப்பி குற்றங்களைத் துருவித் துருவி ஆராய்ந்து வீடியோவில் பதிவு செய்து அதைப் பார்க்கச் செய்து பலரை பெரும் பாவம் செய்ய வைத்தவர்.

சுருங்கச் சொல்வதாயிருந்தால் தமிழகத்தில் — இவரும் இணைந்திருந்த காலத்தில்–ஏகத்துவத்தை உருவாக்க இன்று வரை கஷ்ட, நஷ்டங்கள் பட்டுக் கொண்டிருப்பவர்களையும் அவர்கள் நடத்தப்பட்டு வரும் இதழ்கள், அழைப்பு மையங்கள், கல்லூரிகளை இழித்தும் பழித்தும் கூறிக் கொண்டிருக்கிறார்.

இவையெல்லாம் சரிதானே என்று உங்களைப் போன்ற ஒரு கூட்டமும் சேர்ந்து கொண்டு செய்கிறது. மிகத் துணிவாக பொய்களைக் கலந்து சேற்றை வாரி வீசுவதற்கு முக்கியக் காரணம் தற்போது அவர் பின்னாலிருக்கும் கூட்டம் உங்களைப் போன்ற தவ்ஹீதின் உருவாக்கத்தைத் தெரியாதவர்கள் என்பதுதான். நினைவுக்கு வந்த சிலவற்றைக் கூறியுள்ளேன், இதுவும் அவரின் குறைகளை அலச அல்ல. மாறாக உங்களைப் போன்று தவ்ஹீதை தவ்ஹீதுவாதிகள் மூலம் பெறாமல் செய்திச் சாதனங்கள் மூலமாக மடடும் தெரிந்து கொண்டு, தெரிந்த கொண்ட ஆர்வக் கோளாறுகளால் தலைவரைப் போன்றே உங்களைப் போன்றவர்கள் இறங்கிவிடுகிறார்கள், தெரிந்ததைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இவற்றை அறியத் தருகிறேன், நீங்கள் அவரை விட்டு வெளியேறிவிடுவீர்கள் என்ற எண்ணத்தில் அல்ல எடுத்துச் சொல்வது மட்டுமே அல்லாஹ் இட்ட கட்டளை!.

ஆரம்ப காலங்களில் தவ்ஹீதை பரவச் செய்ய பொருளால், அறிவால் இன்னும் பல வழிகளில் பாடுபட்ட பல நல்லவர்களை உங்கள் தலைவர் பகைத்துக் கொண்டு வரலாறு தெரியாத புதியவர்களோடு இணைந்திருக்கிறார்., பழையவர்களோடு இருந்தால்தான் குறை நிறைகளை தெரிந்து தன்னைச் சரிப்படுத்திக் கொள்ள முடியும், ஒருவேளை குறைகளே தெரியக்கூடாது என்று எண்ணுகிறாரோ என்னவோ! அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.

உங்களின் தலைவருக்கு உங்கள் மூலமாக இறுதியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது சத்தியம் இதுதான் என்று தெளிவாகத் தெரிந்த பின்னர் அதிலிருந்து பிரிந்து போவதற்கு தகுதியான காரணமின்றி பிரிந்து போவது மாபெரும் குற்றம் என பல சந்தர்ப்பங்களில் பேச்சுக்களின் மூலமும் எழுத்துக்கள் மூலமும் தெரிவித்திருக்கிறேன். இப்போதும் அதையேத் தெரிவித்துக் கொண்டு மற்றொன்றையும் சேர்த்து சொல்லிக் கொள்கிறேன்.

சத்தியம் இதுதான் என்று தெளிவாகத் தெரிந்த பின்னர் அதிலிருந்து பிரிந்து போவதற்கு தகுதியான காரணமின்றி பிரிந்து போவது மாபெரும் குற்றம் என்ற தலைப்பிலும், மற்றும் உலகம் முழுவதற்கும் பிறை ஒன்றே என்ற இந்த இரு தலைப்புளையும் பற்றி நீங்கள் விரிவாக அலசுவதற்குத் தயாரா? நாம் எப்போதும் தயார்.

இதையெல்லாம் இன்ஷா அல்லாஹ் நான் எங்கு வேண்டுமானாலும் சொல்லத் தயார் பல சமயம் இவற்றில் பலவற்றை தபால் மூலமும் உங்களின் தலைவருக்குத் தெரிவித்திருக்கிறேன்.

உங்களின் தலைவர் பழைய நிலைக்கு வரவேண்டி எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் என்றும் நான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்—ஒருவேளை உங்களின் தலைவர் பழைய நிலைக்கு வந்துவிட்டால் அவரோடு கைகோர்த்து முந்தைய காலங்களைப் போன்று பணி செய்யவும் காத்திருக்கிறேன்– அல்லாஹ் போதுமானவன்.

அவனே காரியங்களை நம்பி ஒப்படைப்பதற்கு மிகத் தகுதியானவன், மிக்க நல்லவன், யா அல்லாஹ் உள்ளங்களில் உணர்வுகளை அறிந்தவனே! உள்ளங்களை விரல்களுக்கிடையில் வைத்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பவனே! எந்தெந்த உள்ளங்களை ஈடு இணையற்ற உனது தவ்ஹீதைப் படிக்க பரப்ப தேர்ந்தெடுத்தாயோ அந்த உள்ளங்களை ஓரணியில் இணைப்பாயாக! உனது திருப் பொருத்தைத்தை மட்டுமே நாடி உனது பணியினை மேற்கொண்டு உண்மை முஸ்லிமாக வாழ்ந்து உண்மை முஸ்லிமாக மரணித்து முடிவே இல்லா நிரந்தர இன்ப பாக்கியங்கள் நிறைந்த சுவனபதியில் நலலோர்களுடன் இருக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக! ஆமின் ஆமின் யா ரப்பல் ஆலமீன்.

கே.எஸ்.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

அல்கோபர்

சவுதி அரேபியா

ஜூலை 2, 2007

விருந்தாக்கப்படும் தமிழ் முஸ்லிம் பென்கள் (EXCLUSIVE ARTICLE)

Filed under: தமிழ் முஸ்லிம் பென், பி.ஜே, Bakar, PJ, TNTJ — முஸ்லிம் @ 4:00 பிப
இறைவனின் திருப்பெயரால்

யாருக்காக கைதாகின்றார்கள்? கணவனுக்காகவா? எத்தனை போலிஸாரி்ன் கரங்கள் இம்மாதுகள் மீது பட்டிருக்கும்?

போராட்டமா? விருந்தா?
கட்டுரை ஆக்கம்: ஆமினா மைந்தன்
நமது முற்றம் ஏப்ரல் 2007.

அரசியல் கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்கு தொண்டர்களை அழைப்பது வழக்கம். தடையை மீறுவதும் போலிஸாரின் தடியடிப் பிரயோகத்திற்கு பயந்து தலைதெறிக்க ஓடுவதும் அரசியலில் சகஜம்.

உண்ணாவிரதப் போராட்டமா? நடை பயணமா? ஊர்வலமா? எதற்கென்றாலும் ஓடோடி வந்து கலந்து கொள்வதற்கு வேலையில்லாத அரசியல் கட்சித் தொண்டர்கள் ஏராளமானவர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.

அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட தலைவர்கள் அழைப்பு விடுத்தால்கூட போராட்டங்களில் கலந்து கொள்ள பெண்கள் யாரும் பெருமளவில் முன்வருவதில்லை.

பெண்களின் சிரமத்தை உணர்ந்து அரசியல் கட்சிகளும் ஆண் தொண்டர்களையே தங்கள் போராட்டங்களில் அதிகமாக கலந்து கொள்ள வைக்கின்றன.

ஆனால் பீ.ஜைனுல் ஆப்தீன் தலைமையிலான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கண்டனக் கூட்டங்கள், மாநாடுகள் அனைத்திலும் ஆண்களை விட பெண்கள் கூட்டமே அதிகமாக இருக்கிறது.

சமீபத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தழிழகமெங்கும் டி.என்.டி.ஜெ. ஆர்ப்பாட்டம் நடத்தியது, இதில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.

கொளுத்தும் வெய்யிலில் கைக்குழந்தைகளை தோளில் போட்டுக் கொண்டு வீதிக்கு வந்து இந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதை வேடிக்கை பார்க்க ஏகப்பட்ட கூட்டம்.

சில வருடங்களுக்கு முன்னால் வரை முஸ்லிம் பெண்கள் வெளியே வருவதே அரிதாக இருந்தது. அந்நிய ஆடவருக்கு தங்கள் முகத்தைக் காட்டவே வெட்கப்பட்ட அந்த முஸ்லிம் பெண்கள் இப்போதெல்லாம் விதவிதமான பர்தாக்களைப் போட்டுக் கொண்டு வீதிக்கு வந்து கோஷம் போடுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.

அலங்கரித்த அழகிகளாக மைக்கில் கூவுவது? யாருக்காக? காமம் அலைமோதும் அந்நிய ஆடவர்களின் கண்களுக்கு விருந்தாக!!

”தர்கா விழாக்களுக்கு பெண்கள் சென்றால் அந்நிய ஆடவர்கள் அவர்களைப் பார்ப்பதற்காகவே வருவார்கள். அது கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகிறது, அதனால் தர்காவுக்கு பெண்கள் செல்லக்கூடாது”” என்று பிரகடனம் செய்தவர்கள் தங்கள் இயக்கத்தின் வளர்ச்சியைக் ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட பெண்களை பயன்படுத்துவது கேவலமாக இருக்கிறது.

”பெண் மறைவாக இருக்க வேண்டியவள். அவள் வெளியே வருவதை எதிர்நோக்கி ஷெய்த்தான் (அவள் வீட்டு வாசலில்) காத்துக் கொண்டிருக்கிறான். வீட்டில் இருப்பவளோ இறைக் கருணையை நெருங்கியவளாக இருக்கிறாள்”” (திர்மீதி) என்று நபிகள் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

பெண்களை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து போராட்டம் நடத்த இஸ்லாம் சொல்லவில்லை. பெண்களை பாதுகாக்கும் பொறுப்பை இறைவன் ஆண்களிடம் தான் கொடுத்திருக்கிறான். ஆனால் அரசியல் லாபங்களுக்காக, தங்களுடைய சுயநலத்திற்காக முஸ்லிம் பெண்களை முச்சந்தியில் நிறுத்தி, ”இது தங்கள் இயக்கத்தின் வளர்ச்சி”” என்று மார்தட்டி சமுதாயத்தின் முகத்தில் எச்சில் துப்புகிறார்கள் சில அநியாயக்காரர்கள்.

”அலீயே! (ஒரு பெண் மீது) உமது பார்வை விழுந்த பின்னால் மீண்டும் உமது பார்வை அவளைத் தொடரக்கூடாது. முதல் பார்வை குற்றமாகாது, ஆனால் இரண்டாம் பார்வை உமக்கு ஆகுமானதல்ல!”” (திர்மீதி).


இது நபிகள் (ஸல்) அவர்களின் ஹதீஸ். ஆனால் என்ன நடக்கிறது?
பருவ வயதுப் பெண்கள், நடுத்தர வயதுப் பெண்களெல்லாம் எப்போதடா வெளியே சாடலாம் என்று காத்திருந்து, தங்கள் தலைவரிடமிருந்து அழைப்பு வந்ததும் ரோட்டுக்கு வந்து கொடி பிடிக்கின்றனர். பர்தா தங்களின் பாதுகாப்பிற்காக அல்ல, வெளியே பாய்வதற்காக என்பதை இவர்கள் நிரூபித்து வருகின்றனர்.

கணவனல்லாத ஆன்களுடன் ஒருமிக்க கலந்து…? எத்தன பேரு இடிப்பான்? எத்தன பேரு தடவி பார்ப்பான்?

அண்ணலார் பாதுகாக்கச் சொன்ன அழகுப் பெண்களின் மீது எத்தனை அழுக்குப் பார்வைகள்? வீதியில் செல்கின்ற ஆடவர் கூட்டம் கண்களை மூடிக் கொண்டா செல்கிறது? அவர்களுக்கு எந்த அரசாங்கமாவது இலவச கடிவாளம் வழங்கியிருக்கிறதா?.

பூமான் நபிகள் போற்றி வைத்த பொக்கிஷங்கள் – இன்று புழுதிப் பார்வைகளில் புரள்கிறது. அவைகளின் பொன்மேனியில் கண்டவர் கண்கள் கண்டபடி மேய்கிறது. கண்களையும் கால்களையும் பார்த்தே கற்பனையில் மிதக்கிறது. அது மட்டுமா? மறுநாள் பத்திரிக்கைகளில் பிரசுரமாகும் வண்ணப் படங்கள் வக்கணைக் கொண்டோரின் பேச்சுக்கு விருந்தாகும் அவலங்கள்.
டி.வி. நிகழ்ச்சிகளிலும் அவை காட்டப்பட்டு பலபேர் மனங்களில் மறையாத நினைவுகளை மலரச் செய்கின்ற மங்கையர் திலகங்களாக மாறியிருக்கிறார்கள். முஸ்லிம் சமுதாயத்து பெண்மணிகள்.

”இவளா? இவ நேற்று கலெக்டர் ஆபிஸ் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்ய வந்தவ! சூப்பரா இருக்கா”” என்று தனது நண்பர்களிடம் கடைவீதியில் பார்க்கும் பெண்களைப் பற்றி கமெண்ட் அடிக்கும் கயவர் கூட்டம்.

அலங்கரித்து ரோட்டில் நிற்க வைத்து கணவன் மட்டும் காணும் அழகை மற்றவருக்கும் காண செய்து மற்றவர்களை உணர்ச்சி மூட்டுவதற்காகவா? யார் பொன்டாட்டியோ? யாருடைய பார்வைக்காக?

”துலுக்கப்பயல்களெல்லாம் வெளிநாட்டில இருக்கான்,
துலுக்கச்சிகளெல்லாம் தெனவெடுத்து அலையிறாளுங்க. இவளுக எல்லாம் நமக்குத்தான் சொந்தம்”” என்று பகிரங்கமாக மேடைபோட்டு அராஜகமாக பேசும் அயோக்கியர்கள். இதற்கொல்லாம் வழிவகுத்துக் கொடுத்த சண்டாளர்கள் யார்?

”எந்த பெண்ணாவது தனது கணவருக்காக அல்லாமல் அந்நியருக்காக வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்வாளேயானால் நிச்சயமாக அது அறிவற்றதாகும். நரகத்தின் நெருப்பாகும்””;. என்பது நபிகளாரின் ஹதீஸ்.


வெளிநாட்டில் வேலைபார்க்கும் கணவன் அனுப்பித் தருகின்ற விலையுயர்ந்த வாசனைத் திரவியங்களை வீதிக்குப் போராட வருகின்ற அம்மணிகள் பீய்ச்சிக் கொண்டு வருவது யாருக்காக?

அந்நிய ஆடவர்களுடன் உடலோடு உடல் உரசி…இங்கு தக்வா வருமா? விரசம் வருமா? வெளிநாட்டில் இருக்கும் கணவன்மார்களே சிந்திப்பீர்களா?

இவர்கள் வீதிக்கு வந்து போராடவில்லையென்றால் அல்லாஹ் கோபித்துக் கொள்வானா? அல்லது இந்த பெண்களின் தலைவர் கோபித்துக் கொள்வாரா?

”அந்நிய ஆடவர் முன்னால் குரலை உயர்த்திப் பேசாதீர்கள்”” என்பது நபிகளின் கட்டளை!


குயில்கள் கூவினால் கேட்பதற்கு கசக்கவா செய்யும்?

கூடி நிற்கின்ற கூட்டத்தின் மத்தியில் அச்சம், நாணம், அடக்கம் அத்தனையும் துறந்து ஆரவாரக் கூச்சலிடுகின்ற இந்த இஸ்லாமியப் பெண்களைப் பார்த்து இபிலீஸ் சந்தோஷப்பட மாட்டானா?

கட்டாயம் சந்தோஷப்படுவான்!

இந்த பெண்களை அழைத்து வந்த இப்லீஸ்களும் சந்தோஷப்படுவார்கள். ”இவ்வளவு பெண்கள் நம் அழைப்பை ஏற்று போராட்டத்தில் கலந்துகிட்டாங்க, நம்ம வலிமையைப் பார்த்து நம்ம எதிரிங்க வயிறெறிஞ்சு போயிடுவாங்க”” என்று வக்கிர புத்தியோடு தங்கள் சுயநலவெறிக்காக முஸ்லிம் பெண்களை பயன்படுத்தி கேலப்படுத்துகின்ற அந்த இப்லீசுகளும் சந்தோஷப்படத்தான் செய்கிறார்கள்.

2003ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்ததைக் கண்டித்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்னால் முஸ்லிம்கள் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட அந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்து போலிஸார் தடியடி நடத்தினார்கள். ஆலிம்கள் உட்பட ஏராளமானவர்கள் தடகள பந்தயத்தில் கலந்து கொண்டவர்களைப்போல தலைதெறிக்க ஓடினார்கள். பலர் அடி பட்டார்கள், ஓட முயாமல் கீழே விழுந்தவர்களை மற்றவர்கள் மிதித்துக் கொண்டு ஓடினார்கள். ஆப்தீன் என்ற முதியவர் ஓடிவரும்போது ஒரு காரில் மோதி படுகாயம் அடைந்து சில நாட்களில் இறந்து போனார். ஆர்ப்பாட்டம் நடந்த இடம் போர்க்களமாக காட்சி தந்தது. வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று 80 பேர் மீது குற்றம் சுமத்தப்படடு அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது. இன்று வரை அந்த வழக்கு முடிவுக்கு வரவில்லை.

அந்நிய ஆடவர்களோடு ஒருமிக்க கலந்து…கணவர்களோ வெளிநாட்டில்…இங்கு தவறு நிகழாது என்பதற்கு யார் உத்தரவாதம்?

இப்படிப்பட்ட ஒரு அசம்பாவிதம் இந்த பெண்கள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டங்களில், போராட்டங்களில் ஏற்பட்டால் இந்த பெண்களின் நிலை என்னவாகும்? எத்தனை பெண்களால் ஓடமுடியும்? எத்தனை பெண்களின் முதுகில் போலிஸாரின் தடியடி விழும்? எத்தனை பெண்கள் மிதிபடுவார்கள்? எத்தனைக் கைக்குழந்தைகள் அதாபுக்கு ஆளாவார்கள்?

மூச்சுக்கு மூச்சு மற்றவர்களையெல்லாம் சிந்திக்க வேண்டாமா? சிந்திக்க வேண்டாமா? என்று கேள்வி கேட்கின்ற பைத்தியகாரர்கள் இதையெல்லாம் சிந்திக்க வேண்டாமா?

யார் அடிப்பட்டால் என்ன? யார் செத்தால் என்ன? தனக்கு பேரும் புகழும் பணமும் வரவேண்டும். தன்னைத் தவிர இந்தத் தமிழ்நாட்டில் வேறு எவனும் தலைவனாயிருக்காத நிலை வரவேண்டும் என்று நினைப்பவர்கள் எங்கே சிந்திப்பார்கள்? அப்படியே ஒரு சம்பவம் நடந்தாலும் அதையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆதாயம் தேடும் புத்தி அவர்களுக்குண்டு.
இப்படிப்பட்ட இழிநிலை மாறாவிட்டால் தமிழ் முஸ்லிம் சமுதாயத்துப் பெண்களின் நிலை மிகமிகக் கேவலாமாகிவிடும்.

தலைவன் என்று கூறிக்கொள்ளும் எவனோ ஒருவனின் எடுப்பார் கைப்பிள்ளையாக தங்கள் வீட்டு பெண்களை விட்டுவிட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் முஸ்லிம் ஆண்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

தங்கள் மகள்களை, மனைவிகளை, சகோதரிகளை வீட்டில் மானத்தோடு வாழ வைப்பது தான் முஸ்லிம் ஆண்களின் கடமை. அதை மறந்து பெண்களை வீதியில் இறக்கி விளையாட்டுக் காட்டுவது நல்ல கலாச்சாரம் இல்லை.

ஆண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டுமெனில் வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு தாய்நாட்டுக்கே வரவேண்டும், போராட வேண்டும். கலெக்டராகவோ, எஸ்பியாகவோ ஆக வேண்டும், தங்கள் தலைவரை முதலமைச்சராக ஆக்க வேண்டும், தங்கள் பிள்ளைகளை பிரதமராக்க வேண்டும்.

அதையெல்லாம் விட்டுவிட்டு பெண்களை வீதியில் இறக்கிப் போராட வைத்து மற்றவர்களுக்கு விருந்தாக்குவது இஸ்லாமிய நடைமுறையல்ல, நபிகளாரின் நடைமுறையுமல்ல! மனித நாகரீகமுமல்ல.
இது முழுக்க முழுக்க இறைவனுக்கு வழிகெட்ட ஷெய்த்தானுடைய நடைமுறை. மக்களை வழிகெடுத்து, கேவலப்படுத்தி, நடுத்தெருவில் நிற்க வைப்பது மட்டுமே அவனது முழுநேர வேலை.

இதைத் தலைவர்கள் உணர்ந்து தங்களைத் திருத்திக் கொள்கிறார்களோ இல்லையோ சம்பந்தப்பட்ட பெண்களின் உறவினர்கள் இந்த அபாய விளையாட்டை கை விட்டு தங்கள் பெண்களை பாதுகாத்துக் கொள்வது நல்லது.!

ஜூன் 14, 2007

பதிலை எதிர்பார்த்த பி.ஜேக்கு ஐக்கிய தவ்ஹித் ஜமாத்தின் (KADALOOR ITJ) பதில்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

தேதி : 10.06.2007

அனுப்புதல்:

முன்னால் கடலூர் மாவட்ட டிஎன்டிஜே நிர்வாகிகள்

சார்பாக அ.கலிமுல்லாஹ்,

93.பெரிய கடை தெரு,

பரங்கிப்பேட்டை – 608502.

பெறுதல்:

பி.ஜைனுல் ஆபிதீன்

மாநில டிஎன்டிஜே தலைவர்,

30. அரன்மனைக்காரன் தெரு,

மண்ணடி, சென்னை-1.

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்..

எங்களுடனான முபாஹலா சம்மந்தமாக தங்களின் 06.06.2007 தேதிய தபால் கிடைக்கப் பெற்றோம். எங்களுடைய முபாஹலா பிரசுரத்தை ஏற்றுக்கொண்டு, கடந்த 03.06.2007. கடலூர் கூட்டத்தில் 16.06.2007 அன்று முபாஹலாவுக்கு தயார் என்று அறிவித்ததாக கடிதத்தில் ஆரம்பமாக கூறும் தாங்கள்; அடுத்தடுத்த வரிகளில் தாங்கள் கூறிய பல விசயங்களை கணடுக்கொள்ளாத வகையில் எங்கள் கடிதம் அமைந்துள்ளதாக தாங்கள் கூறுவது சரியல்ல. காரணம் நாங்கள் முபாஹலா பிரசுரத்தில் நான்கு வகையான குற்றச்சாட்டுகளை உங்கள் மீது கூறி அதற்கு முபாஹலாவுக்கு தயாரா? ஏன்று கேட்டிருந்தோம். அதற்கு தாங்கள் அந்த பிரசுரத்தை குறிப்பிட்டு கூறியே அதற்கு தயார்! என்று கூறினீர்கள்.

(கடலூர் கடிதத்திற்கு பி.ஜே யின் பதில் கடிதம் – ததஜ அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள கடிதம் படிப்பதற்கு இங்கு சொடுக்கவும்)

உண்மையாளர்களாகவும, உண்மையில் அல்லாவுக்கு அஞ்சக்கூடியவர்களாய் இருப்பவர்கள், தங்கள் மீது குற்றச்சாட்டு என்று வரும்போது அந்த விசயத்தில் தாம் தூய்மையானவர்தான் என்று நிரூபிக்க வேறு எதனையும் முன்வைக்காமல் நிபந்தனையேதுமின்றி முன்வருவார்கள்.

முபாஹலா சம்மந்தமான குர்ஆன் வசனம் 3:61 கூட ஒரு குறிப்பிட்ட முக்கிய பிரச்சினையின் வெளிப்பாடாகத்தான் கூறப்பட்டுள்ளதே தவிற, ஒரு சமுதாய முக்கிய பிரச்சினையில் குற்றச்சாட்டை நிரூபிக்க வருபவர் மீது வேறொரு குற்றச்சாட்டை கூறி சமப்படுத்திக்கொள்ளவோ, நியாயப்படுத்திக்கொள்ளவோ அல்ல, என்பதை தாங்கள் புரிந்துக்கொள்ளவேண்டும். முபாஹலாவுக்கு தங்களின்; இஷ்டத்திற்கு கற்பனையாக விளக்கமளித்து முபாஹலாவிலிருந்து நழுவிக்கொள்ளமாட்டீர்கள் என்று நம்புகின்றோம்.

ஆகவே, முபாஹலா சம்மந்தமாக நாங்கள் கூறிய நான்கு விசயங்கள் மற்றும் அதை ஒட்டி தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்ட இரண்டு விசயங்கள் ஆக ஆறு விசயங்களுக்கு மட்டுமே நாங்களும் நீங்களும் முபாஹலா செய்வதற்கான விசயங்களாகும்;. இந்த முபாஹலா அறிவிக்கப்பட்டதே மேற்படி விசயங்களுக்கு மட்டுமே.

அதை விடுத்து, நாங்களும் நீங்களும் வேறு எந்தெந்த விசயங்களில் பரஸ்பரம் அநீதி இழைக்கப்பட்டோமோ அவைகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு, குழாயடி சன்டை நடத்துவதற்கு அல்ல. அவைகள் இந்த முபாஹலாவிற்கு தேவையற்றது.

முபாஹலா செய்வதற்கு தெளிவான விசயங்களை இனங்காட்டி அழைத்து அதை ஏற்றுக்கொண்டப்பின் வேறு விசயங்களை காட்டி தாங்கள் நழுவ பார்ப்பது உங்களிடம் உண்மையில்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதாகும்.

முபாஹலாவோ விவாதமோ எதுவானாலும் ஒரு பக்கச் சார்பாக அவை இருக்கக் கூடாது என்று எழுதும் நீங்கள்,; விவாதத்தில் எதைப்பற்றி விவாதம் செய்ய போகிறோம் என்று தெரியாமல் அங்குப்போய் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி விவாதம் செய்வீர்களா? அல்லது விவாதம் எது பற்றியானது என்பதை முன்பே அறிந்து அதற்குள்ள தயாரிப்போடு செல்வீர்களா? உங்களிடம் ஏன் இந்த முரன்பாடு?.

முபாஹலா செய்ய வருபவர்கள் எதற்காக முபாஹலா செய்ய வருகிறோம் என்பதை விளங்கி வரவேண்டும். மனைவி மக்களை அழைத்து வரும்பொழுது அவர்களுக்கும் எதற்காக முபாஹலா என்ற விபரம் தெரிய வேண்டும், தெரிந்து வருபவர்கள் தான் இறையச்சமுடையவர்கள். எதற்காக முபாஹலா என்ற விபரம் ஏதும் தெரியாமல் அந்த சமயம் வரை ஞாபகத்தில் வருவதையெல்லாம் சொல்லுங்கள் என்று கூறுவது மோசடித்தனமும் முனாபிக்தனமும் ஆகும் அதை தாங்கள் புரிந்துக்கொள்ளுங்கள். இதற்கு மேலும் தாங்கள் இது விசயத்தில் பிடிவாதம் பிடித்தால் முபாஹலாவிலிருந்து தாங்கள பின் வாங்குகிறீர்கள் என்பதே பொருள்.

குறிப்பிட்டுள்ள சமுதாய இயக்கத்தின் தலையாய பிரச்சினையில்; எழுப்பப்பட்டிருக்கும் குற்றச்சாட்டில் குற்றம் சாட்டுபவர், குற்றச்சாட்டுகளை தெளிவாக கூறி அதுப்பற்றி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவேண்டும். இதை மறுத்து எதிர் தரப்பினரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இதை தவிற, குற்றம் சாட்டப்படுபவர் குற்றம் சாட்டுபவர் மீது வேறு எந்த குற்றசாட்டையும் எழுப்ப அனுமதிக்க முடியாது. மேலும், இதிலும் தாங்கள்; பிடிவாதம் பிடித்தால் முபாஹலாவிலிருந்து தாங்கள் பின் வாங்குகிறீர்கள் என்பதே பொருள்.

தாங்கள் கற்பனையாக உங்கள் விருப்பத்திற்கு எழுதியதெல்லாம், மேடையில் அறிவிப்பதெல்லாம் முபாஹலாவின் சட்டம் அல்ல. முபாஹலாவிற்கு நாங்களும், எங்கள் மனைவிகளும், எங்கள் பொறுப்பில் இருக்கும் எங்கள் புதல்வ புதல்விகளுடனும் தான் வருவோம். யாரும் யாருக்காகவும் அடையாள அணி வகுப்பு நடத்தமுடியாது. இதிலும் தாங்கள் பிடிவாதம் பிடித்தால் முபாஹலாவிலிருந்து தாங்கள பின் வாங்குகிறீர்கள் என்பதே பொருள்.

மேலும், முக்கியமாக 16.06.2007 அன்று நெல்லிக்குப்பம் தேவநாதன் திருமண மன்டபத்தில் மாலை 7 மணிக்கு முபாஹலா என்று தாங்கள் அறிவித்தீர்கள், அதற்கு நாங்களும் எங்களின் 05.06.2007 தபாலில் ஒப்புதல் அளித்தோம். ஆனால், தாங்கள் 06.06.2007 தபாலில் 16.06.2007 அன்று காலை முதல் மேற்படி அந்த மண்டபத்தில் தங்கள் அமைப்பின் செயல் வீரர்கள் கூட்டம் நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளீர்கள். தங்களின் செயல் வீரர்கள் கூட்டமும் முபாஹலாவும் ஒரே மண்டபத்தில் நடக்க இருப்பதால் அதில் கலந்துக்கொள்ளும் எங்கள் பெண் மக்களுக்கு பாதுகாப்பு இன்மையும், தங்கள் செயல் வீரர்களால் சன்டை சச்சரவு வரவும் வாய்ப்புள்ளது.

ஆகவே, ஒன்று தாங்கள் செயல் வீரர்கள் கூட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளுங்கள், அல்லது முபாஹலாவை அதே நாளில் வேறு இடத்தில் மாற்றி வைய்யுங்கள், உங்களால் அது முடியாவிட்டால் அதே நாளில் முபாஹலாவிற்கு வேறு இடத்தை ஏற்பாடு செய்யும் பொருப்பை எங்களிடம் விட்டு விடுங்கள். இன் ஷாஅல்லாஹ் நாங்கள் ஏற்பாடு செய்கின்றோம். இதிலும் தாங்கள்; பிடிவாதம் பிடித்தால் முபாஹலாவிலிருந்து தாங்கள் பின் வாங்குகிறீர்கள் என்;பதே பொருள்.

மேலும், நாங்கள் 05.06.2007ல் தங்களுக்கு எழுதிய தபாலில், முபாஹலா பிரச்சினையின்றி நடைபெற இரு தரப்பிலும் இரு கட்டுப்பாட்டாளரை நியமிப்பது சம்மந்தமாக குறிப்பிட்டிருந்தோம் அதை தங்கள் வசதிக்கு கண்டுக்கொள்ளாமல் விட்டுள்ளீர்கள் அந்த விசயத்திற்கும் தாங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

முபாஹலா நடைபெறும் இடத்திற்கு உங்கள் தரப்பில் உங்கள் குடும்பத்தை தவிற 25 நபர்களும், எங்கள் எட்டு பேர் தரப்பில் எங்கள் குடும்பங்களை தவிர, எட்டு பேர் சார்பிலும் 25 நபர்களும் மட்டுமே கலந்துக்கொள்ள நாங்கள் சம்மதிக்கின்றோம். இதை, முன்பு எங்கள் தபாலிலேயே தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றோம்.

மேற்படி நாங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து விசயங்களும் நடைமுறைக்கும், உண்மையில் கண்டிப்பாக முபாஹலா நடைப்பெற வேணடும் சத்தியம் வெளிப்படவேண்டும் அதற்கு எதுவும் தடையாக இருந்து விடக்கூடாது என்பதற்குத்தான். இதை தாங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகின்றோம். இத் தபால் தங்களுக்கு இன் ஷாஅல்லாஹ் 12.06.2007 ல் கிடைக்கும், இதற்கு தங்களின் உடனடியான ஒப்புதல் தபாலை எங்களுக்கு 14.06.2007 க்குள் அனுப்பவும்.

இன்ஷா அல்லாஹ், தங்கள் ஒப்புதல் தபால் கிடைத்தவுடன் குடும்பத்துடன் முபாஹலாவில் சந்திப்போம். நன்றி, வஸ்ஸலாம்.

எங்கள் எட்டு பேர் தரப்பில் முபாஹலாவில் கலந்துக்கொள்ளும் எங்கள் குடும்பத்தினர் விபரம் வறுமாறு:

1. அ.கலிமுல்லாஹ், கவுஸ்ஹமீதா(மனைவி), காமிலா பர்வீன்(மகள்), முஹம்மது முஜாஹித்(மகன்), அப்துல் காதிர்(மகன்), அப்துல் அலீம்(மகன்)

2. எஸ். ஷேர்அலி, நூரா(மனைவி), ஹய்தர்அலி(மகன்), யாஸ்மின்(மகள்).

3. இசட். ஷாஹீல் ஹமீது, ஹாஜிரா பேகம்(மனைவி), உமர் முக்தார்(மகன்)

4. எம். செய்யது ஹமீது, ஆபிதாபி(மனைவி), சையத்யாசீன்(மகன்).

5. டி.எம்.பக்கீர் முஹம்மது, ஆமினா(மனைவி), N ஷக்முஹம்மது(மகன்), மூமினா(மகள்), பஹீமா(மகள்), முனவ்வரா(மகள்).

6. எ.எஸ்.எம்.ரசூல் பா ஷா, ஷர்மிலி(மனைவி), மெஹ்தாப்(மகள்), மரியம்(மகள்), அப்துர்ரஹ்மான் சையது(மகன்).

7. எஸ். அப்துர்ரஹ்மான், தவ்லத்நி ஷா(மனைவி), இப்ராஹிம்(மகன்);, ரஹீமுன்னிசா(மகள்), அப்துல்லாஹ்(மகன்).

8. ஐ. ஷேக் உமர், பாரூன்பேகம்(மனைவி), முஹம்மதுஇத்ரீஸ்(மகன்), ஷமீமா நஸ்ரின்(மகள்).

அன்புடன்.

முன்னாள் கடலூர் மாவட்ட டிஎன்டிஜே நிர்வாகிகள். (கையொப்பமுடன்).

1.எ.கலிமுல்லாஹ் :

2.எஸ்.ஷேர் அலி :

3.இசட். ஷாஹீல் ஹமீது :

4.எம். செய்யது ஹமீது :

5.டி.எம். பக்கீர் முஹம்மது :

6.எ.எஸ்.எம். ரசூல் பாஷா :

7.எஸ்.அப்துர்ரஹ்மான் :

8.ஐ.ஷேக் உமர் :

ஜூன் 10, 2007

பி.ஜே யின் முபாஹலாக்கள் – ஒரு சிறப்பு பார்வை

முபாஹலாவிலிருந்து பின் வாங்கும் பி.ஜெ.

பிராடு பி.ஜெ.யின் பித்தலாட்டத்தனங்களை அறியாத கடலூர் மாவட்ட த.த.ஜ. முன்னால் நிர்வாகிகள் பி.ஜெ.யை முபாஹலாவுக்கு அழைத்திருந்தனர். பி.ஜெ.யின் வண்டவாளங்களை ஆதி முதல் அந்தம் வரை அறிந்துள்ளவர்கள் அவரை மட்டும் முபாஹலாவுக்கு அழைக்க மாட்டார்கள். பி.ஜெ. ஒரு நாத்திகர் என்ற காரணத்தால் அல்லாஹ்வை பற்றிய பயம் இல்லாமல் முபாஹலா செய்து பொய்யை உண்மை ஆக்கி விடுவார். அதனால் பி.ஜெ.யுடன் த.த.ஜ.வின் மாநில தலைமை நிர்வாகிகளையும் சேர்த்துதான் முபாஹலாவுக்கு அழைத்திருப்பார்கள்.

கடலூரைப் பொறுத்த வரை த.த.ஜ. முன்னால் நிர்வாகிகள் அனைவரும் முபாஹலாவுக்கு வரும்பொழுது அவர்களுக்கு எதிர் அணியான த.த.ஜ.வின் மாநில தலைமை நிர்வாகிகளும்தான் முபாஹலாவுக்கு வர வேண்டும். இதுதான் சரியான நியதி. ஓவ்வொரு காலத்திலும் முபாஹலாவிலிருந்து பின் வாங்க பி.ஜெ. பல பல்டிகளை அடித்துள்ளார். அது போல்தான் கடலூர் மாவட்ட த.த.ஜ. முன்னால் நிர்வாகிகளுடனான முபாஹலாவிலிருந்து பின் வாங்க புதிய வியூகம் வகுத்துள்ளார்.

சமுதாய நன்மையை கருத்தான் கடலூர் மாவட்ட முன்னால் ததஜ நிர்வாகிகள் பி.ஜே யின் பிராடுகளையும் ததஜ வின் செக்ஸ் ஊழல்களையும் நிரூபிக்க முபாஹலாவிற்கு அழைத்தார்கள். அதிலும் அந்த முபாஹலாவில் பேச வேண்டிய விசயங்களையும் நியாயமான முறையில் குறிப்பிட்டிருந்தார்கள். முபாஹலாவிற்கு வைக்கப்பட்ட எதுவும் தனிப்பட்ட காரியங்கள் அல்ல. பொதுவாக ததஜவும் பி.ஜே யும் மறுக்கும் காரியங்களை இவர்கள் இது உண்மை தான் பி.ஜே இவ்வாறு சொன்னார், பாக்கர் நந்தினி என்ற பென் மட்டுமல்லாது ததஜ வின் மதரஸாவில் பயிலும் பென்களுடன் உரவு வைத்தள்ளதை ததஜ பென்கள் மதரஸா ஆம்கள் அறிவர் மற்றும் சமுதாய சம்பந்தப்பட்ட பொதுவான விசயங்களை வைத்து அவை எல்லாம் பி.ஜேக்கு தெறியும் அவர் சொன்னதுதான் என்றும் அப்படி நாங்கள் பொய் சொன்னால் எங்கள் மீதும் எங்கள் குடும்பத்தினர் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்றும் கூறுவதற்கு தயார் பி.ஜே உண்மையாளராக இருந்தால் பாக்கர் மதரஸா பென்களுடன் உரவு வைக்கவில்லை, நந்தினியோடு தகாத முறையில் பயனம் செய்வில்லை, களியக்காவிளையில் இன்னொருவர் மனைவியுடன் செல்லவில்லை எனவும் அவ்வாறு தான் கூறவில்லை எனவும் அப்படி கூறியிருந்தால் அல்லாஹ்வின் சாபம் தன் மீதும் தனது குடும்பத்தின் மீதும் இறங்கட்டும் என்று பி.ஜே கூற வேண்டும்.

இதுதான் நியாயம், ஆனால் பி.ஜே என்ற இந்த மஹா மோசடிக்காரர் அவ்வாரெல்லாம் செய்யாமல் தானும் முபாஹலாவிற்கு தயார் என்றும் அத்துடன் முபாஹலா நடக்கும் நிமிசம் வரை ஞாபகம் வருவதையெல்லாம் முபாஹலா செய்ய வேண்டும் என்றும், தனக்கு கடலுர் ததஜ முன்னால் நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் என்னென்ன அநீதி இழைத்தள்ளாhக்ள் என்றும் தான் அவர்களுக்கு தனிப்படட முறையில் என்னென்ன அநீதி இழைத்தள்ளேன் என்றும் கூறி முபாஹலா செய்ய வேண்டும் என்று குழப்பியுள்ளார் இதை ததஜ வின் விசிலடிச்சான் குஞ்சுகளும் மாவீரத்தனமாக பேசி வருகின்றார்கள்.

இப்படித்தான் ஒவ்வொரு முறையும் தமக்கு ஆபத்து வருகின்றது தாம் பொய்யன் என நிறுபிக்கப்போகின்றார்கள் என்று தெறிய வரும்பொதெல்லாம் பி.ஜே என்ற இந்த மஹா மோசடியாளன் செய்யும் நாடகம்தான் இந்த முபாஹலா அழைப்புகள். ஓவ்வொரு முறையும் இவரது முபாஹலாவறிகு ஒத்துக் கொண்டோ அல்லது இவரை முபாஹலவிற்கு அழைத்தோ பிரபல அறிஞர்களும், சான்றோர்களும் வரும்போது தான் தோற்றுவிடுவோம் என்று தெறிந்தவுடன் இறுதியில் ஒரு பல்டி அடித்து மாவீரத்தனமாக தான் முபாஹலாவிற்கு தயார் என்றும் அதில் எந்த விசயங்கள் குறித்து முபாஹலா செய்ய அழைக்கப்பட்டிருந்ததோ அது அல்லாத பிரச்சினைக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத பல விசயங்களை சொல்லி அதையெல்லர் முபாஹலா செய்ய வேண்டும் என்று அழைப்பார் அதே அழைப்பில் இதற்கெல்லாம் நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லையென்றால் நீங்கள் முபாஹலாவில் இரந்து பின்வாங்கிவிட்டதாக நாங்கள் எடுத்தக் கொள்வோம் என்று இவரே முடிவையும் எழுதி விடுவார். இதுதான் ஒவ்வொரு முறையும் இவர் கையாளும் திருட்டுத்தனங்கள். இந்த முறையும் பல பல்டி அடித்தும் கடலூர் முன்னால் ததஜ சகோதரர்கள் விடுவதாக இல்லையென்பதாலும் இவரது வன்டவாளங்களை தன்டவாளத்தில் ஏற்றி விடுவார்கள் என்பதாலும் எப்போதும் போல பிரச்சினைக்கு சம்பந்தம் இல்லாத பல விசயங்களை குறிப்பிட்டு முபாஹலாவிற்கு அழைத்தள்ளார் அத்துடன் இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் முபாஹலவில் கடலூர் சகோதரர்கள் பின்வாங்கி விட்டதாக முடிவு செய்வாராம்.

இவ்வாறாக திருட்டுத் தனங்களாலும் கள்ள நாடகங்களாலும் முபாஹலா முக்காபுலா என்று பொன்டாட்டியையும் புள்ளைகளையும் இழுத்துக் கொண்டு அல்லாஹ்விற்கு சற்றும் அஞ்சாத இந்த அயோக்கியன் பி.ஜேயின் சில கிரிமினல் முபாஹலாக்களையும் அவற்றின் முடிவுகளையும் இங்கு பார்ப்போம்.

எந்த இயக்கத்திலும் இல்லாத பஸ்லுல் இலாஹியுடனான முபாஹலாவிலிருந்து பின் வாங்க சம்சுல் லுஹா பெயரால் நோட்டீஸ் வெளியிட்டார். அதில் பாகிஸ்தான் தூதரகத்தில் ஐ.எஸ்.ஐ உளவாளிகளுடன் சந்திப்பு. நாகூர் பார்சல் வெடி குண்டு சித்தீக் என்றெல்லாம் எழுதி இவற்றுக்கும் முபாஹலா செய்யணும் என்றார்.

வெளிநாடுகளுக்கே செல்ல மாட்டேன் அதற்காகத்தான் பாஸ்போர்ட்டு கூட எடுக்காமல் இருக்கிறேன் என்று சொன்ன பி.ஜெ. 1992இல் திடீரென இலங்கை சென்றார். அங்குள்ள பாகிஸ்தான் தூதரகம் சென்று ஐ.எஸ்.ஐ உளவாளிகளுடன் சந்தித்துப் பேசினார். அந்த தொடர்பில்தான் தமிழகத்தில் பல சம்பவங்கள் நடந்தன. தேவர் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்க ஆள் அனுப்பியவர் பி.ஜெ. அதனால் ஏற்பட்ட கலவரங்களை காரணம் காட்டி புதிய தமிழகம் கிருஷ;ணசாமியை நான்தான் இயக்குகிறேன் என்று கூறி; ஐ.எஸ்.ஐ உளவாளிகளிடம் பி.ஜெ. பணம் கேட்டார்.

சுகமான சுமைகள் என்ற சினிமாவில் பகவத் கீதைக்குள் பார்சல் குண்டு அனுப்பும் காட்சி வருகிறது. எனவே அதுபோல் பார்சல் குண்டு அனுப்ப வேண்டும் என்ற யோசனையை சொன்னவர் பி.ஜெ.தான். பி.ஜெ. யோசனைபடிதான் நாகூர், நாகப்பட்டிணம் பார்சல் வெடி குண்டு தயாரிக்கப்பப்பட்டது என்பது உட்பட அனைத்துக்கும் முபாஹலா செய்யத் தயார் என்றார் எந்த இயக்கத்திலும் இல்லாத பஸ்லுல் இலாஹி.

உடனே சம்பந்தம் இல்லாமல் முபாஹலா கூடாது என்ற கொள்கை உடைய ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி ஆகியவர்களையும் எந்த இயக்கத்திலும் இல்லாத பஸ்லுல் இலாஹியுடன் முபாஹலாவுக்கு அழைத்து வர வேண்டும் என்று கூறி பி.ஜெ. பின் வாங்கினார்.

சமீபத்தில் முஜிபுர்றஹ்மான் உமரி அவர்கள் பி.ஜெ.யுடன் முபாஹலாவுக்கு தயார் என்றார். அதிலிருந்து பின் வாங்க முஜிபுர்றஹ்மான் உமரி ஆபீஸில் வைத்துதான் ஹாமித் பக்ரி லஷ;கரே தையிபா தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் என்பது பற்றியும் முபாஹலா செய்யனும் என்றார். அதற்கும் முஜிபுர்றஹ்மான் உமரி அவர்கள் தயார் என்றதும் பின் வாங்கினார் பி.ஜெ.

காரணம். ஹாமித் பக்ரியுடன் லஷ்கரே தையிபா தீவிரவாதிகள் பேச்சு வார்த்தை நடத்த வழி வகுத்தவர் பி.ஜெ.தான். பி.ஜெ.யின் உத்தரவுப்படிதான் த.த.ஜ.வின் இன்றைய ஜித்தா நிர்வாகி ஜிப்லி என்பவர் ஏற்பாடு செய்தார். அந்த ஜிப்லி பி.ஜெ.யின்
பினாமியாக இன்றும் பல வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பாக உள்ளார் என்பது சம்பந்தமாகவும் முபாஹலா செய்யப்படக் கூடும் என்று பி.ஜெ. அஞ்சினார் எனவே சப்தம்
காட்டாமல் வாபஸ் ஆகி விட்டார். முஜிபுர்றஹ்மான் உமரிக்கு விட்ட முபாஹலா அழைப்பை த.த.ஜ.சைட்டிலிருந்தே தூக்கி விட்டார்.

இதுவரை ஒவ்வொரு முபாஹலா அழைப்பின் போதும் முக்கிய விஷயங்களை தலையாய விஷயங்களை முன் வைத்துதான் அழைப்பு விடுக்கப்பட்டது. என்ன என்ன விஷயங்களில் முபாஹலா என்று தெளிவாக அறிவித்துதான் அழைப்பு விடுக்கப்பட்டது. இதுதான் இஸ்லாம் காட்டியுள்ள வழி முறை. கடலூர் மாவட்ட த.த.ஜ. முன்னால் நிர்வாகிகளுக்கும் பி.ஜெ.க்கும் உள்ள முக்கிய பிரச்சனையே தலையாய பிரச்சனையே பி.ஜெ. பாக்கர் பற்றி கூறியுள்ள குற்றச்சாட்டுகள்தான். இதனால்தான் மாவட்ட நிர்வாகமே மாறியது. எனவே இந்த ஒரு முக்கிய பிரச்சனை குறித்து முபாஹலா நடந்து விட்டால் அனைத்துக்கும் முடிவு வந்து விடும்.

காதியானிகளை முபாஹலாவுக்கு அழைத்த பி.ஜெ. மிர்ஸா நபியா? என்ற ஒரு முக்கிய விஷயத்தில் தலையாய விஷயத்தில் முபாஹலா செய்தால் போதும் என்றுதான் கூறினார். இப்பொழுது முக்கிய பிரச்சனையான தலையாய பிரச்சனையான பி.ஜெ. பாக்கர் நந்தினி விஷயத்தில்தான் முபாஹலா செய்ய வேண்டும். அதை திசை திருப்ப பி.ஜெ. கூறியுள்ள புதிய நிபந்தனையே பி.ஜெ. ஒரு நாத்திகர் என்ற காரணத்தால் அல்லாஹ்வை பற்றிய பயம் இல்லாமல் முபாஹலா செய்து பொய்யை உண்மை ஆக்கி விடுவார் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

முபாஹலா செய்ய வருபவர்கள் எதற்காக முபாஹலா செய்ய வருகிறோம் என்பதை விளங்கி வர வேண்டும். மனைவி மக்களை அழைத்து வரும்பொழுது அவர்களுக்கும் எதற்காக முபாஹலா என்ற விபரம் தெரிய வேண்டும். தெரிந்து வருபவர்கள்தான் இறையச்சமுடையவர்கள். எதற்காக முபாஹலா என்ற விபரம் எதையும் தெரியாமல் அந்த சமயம் வரை ஞாபகத்தில் வருவதையெல்லாம் சொல்லுங்கள் என்று அழைப்பவர்கள் நபிகளார் காலத்தில் வாழ்ந்த முனாபிக்குகள் மாதிரி ஆட்களாகத்தான் இருக்க முடியும் அல்லாஹ்வையும் தூதரையும் ஈமான் கொள்ளாமல் வெளிப்பார்வைக்கு முஸ்லிம்கள் காட்டி கொண்ட அவர்களின் வாரிசுகள்தான் இந்த மோடி வேலை முபாஹலாவுக்கு அழைப்பார்கள்.

பி.ஜெ.யின் இந்த புதிய நிபந்தனை மூலம் முபாஹலாவிலிருந்து அவர் பின் வாங்கி விட்டார். பாக்கர் மடியில் நந்தினியும். நந்தினி மடியில் பாக்கரும் என்ற குற்றச்சாட்டை பி.ஜெ. கூறியுள்ளது உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்.

ஆக மக்களே இந்த முபாஹலா பிராடை, உலக மஹா பொய்யனை மார்க்கத்தை வைத்து தம்மிடம் படிக்க வரும் பென்களையும், தங்கள் மதரசாவில் ஓதும் பென்களையும் தங்கள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களுக்கும் தனது காரியத்தை சாதித்து கொள்வதற்காக இன்னும் பலருக்கும் சல்லாப விருந்து படைத்து அவற்றை வைத்து பிளாக் மெயில் செய்யும் இந்த அயோக்கியனை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். இன்னும் இவன் ஆசிரமங்கள் நடத்தி அப்பாவி பென்களை காம வேட்டையாடிய பிரேமாநந்தா, சங்கராச்சாரி போன்ற சாமியார்களை விடவும் மஹா மோசமானவன். இந்த சமுதாயம் உடனடியாக இந்த மஹா அயோக்கியனுக்கு எதிராக திரன்டு எழ வேண்டும். தமிழக அரசு நிலைமை கை மீறி போவதற்குள் ததஜவினால் நடத்தப்படும் பென்கள் கல்லூரிகள் மற்றும் மதரஸாக்களில் அதிரடி சோதனை நடத்தி பி.ஜே என்ற இந்த போலிச் சாமியாரின் அந்தரங்கங்களையும் இவனது சமூக விரோத செயல்களையும் வெளிக் கொனர வேண்டும்.மதரஸாக்கள் காமுகர்களின் கூடாரங்டகளாக மாற்றப்படுவதையும், இஸ்லாம் என்ற பெயரில் முஸ்லிமாக மதம் மாறும் சகோதரிகளுக்கும் மாhக்கம் பயில அனுப்பப்படும் நமது முஸ்லிம் பென்களுக்கும் இவர்களால் காம பாடம் நடத்தப்பட்டு அவர்கள் வழி கெடுக்கப்படுவதையும் இன்னும் நாளை நமது சமுதாயத்திற்கு இதனால் பெரும் இழுக்கு ஏற்படுவதையும் தடுப்பதற்காக பிற சமுதாய அமைப்புக்களும் முஸ்லிம் பொதுமக்களும் இணைந்து இதை தடுக்க முன்வர வேண்டும்.

இறுதிச் செய்தி : பொய்யாக ததஜ வின் கடலூர் முன்னால் நிர்வாகிகள் மீது லட்சக்கணக்கல் வெளிநாட்டில் ததஜ பெயரைச் சொல்லி வசூல் செய்து திருடி விட்டதாக ஒரு வக்கீல் நோட்டிசை பி.ஜே அனுப்பியிருந்தார் அதற்க பதில் நோட்டிசை அந்த சகோதரர்கள் அனுப்பி வழக்கை சந்நதிக்க தயாராக இருப்பதாக தெறிவித்திருந்தனர். தற்போது திருடன் பி.ஜே அடுத்தவர்கள் மீது திருட்டு குற்றம் சாட்டி அனுப்பிய வக்கீல் நோட்டிஸை வாபஸ் பெற்றிருப்பதாக வரக்கூடிய தகவல்கள் தெறிவிக்கின்றன.

ஜூன் 6, 2007

முபாஹலாவில் பொய்யன் பி.ஜே யின் முகமூடியை கிழிப்போம் ITJ அறிவிப்பு

Filed under: Bakar, PJ, sex scandal, TNTJ — முஸ்லிம் @ 4:28 பிப
தவ்ஹீத் மற்றும் ஏகத்துவம் என்ற பெயரில் வலைகுடா நாடுகளில் வசூலாகும் கோடிக்கணக்கான பணத்தை கொண்டு தமிழகத்தில் மக்களை ஏமாற்றி முஸ்லிம்களிடையே பிளவு ஏற்படுத்தி சங்பரிவாரக் கும்பலின் சகா போல் செயல்பட்டு வரும் பி.ஜெயினுல்லாபுதீன் என்பவர் சிறிது காலத்திற்கு முன்பு தனது அமைப்பில் பொதுச்செயலாளராக இருந்த திரு. எஸ்.எம் பாக்கர் என்பவர் ததஜ நடத்தும் மதரஸாவில் பயின்றுவந்த நந்தினி என்ற மாணவியுடன் தகாத உறவு வைத்திருந்தார் என்றும் இன்னும் தங்கள் மதரஸாவில் பயிலும் பல மாணவிகளுடனும் தகாத உறவு வைத்திருந்தார் என்றும் குற்றம் சாட்டி தங்கள் இயக்கத்தில் இருந்து நீக்கினார்.

ஆனால் அதே பாக்கர் தான் மக்களிடம் சென்று பி.ஜே உட்பட ததஜ வில் பலர் எவ்வாறு ததஜ நடத்தும் மதரஸாக்களில் பயிலும் மாணவிகளை பயன்படுத்தகின்றார்கள் என்றும் இன்னும் பல ஊழல்களையும் வெளியில் சொல்லப்போவதாக மிரட்டியதால் மீண்டும் ததஜ வில் (ஏகத்துவத்தை பரப்பும் தவ்ஹீத் அமைப்பாம்?? ஊர் சிரிக்குது!!) பாக்கர் சேர்த்து கொள்ளப்பட்டார். இந்த ஊழல் பிடிக்காத ததஜ வில் இருந்த சில உண்மை ஏகத்துவவாதிகள்ததஜ வை விட்டு வெளியில் வந்து மக்களிடம் உண்மையை கூறினர்.

பின்னர் பி.ஜே யை பாக்கர் மீது தான் மேலே கூறியது போல் விபச்சாரக் குற்றச்சாட்டு வைக்கவில்லை என்று கூறி முபாஹலா செய்ய அழைத்திருந்தனர். இந்த நிலையில் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து தனது செல்வாக்கை நிருபிப்பதற்காக பல மாவடடங்களில் இருந்து ஆள் பிடித்து வந்து கடலூரில் எழுச்சி மாநாடு என்ற பெயரில் ஒன்றை நடத்தி தான் கடலூர் மாவட்ட முன்னால் ததஜ நிர்வாகிகள் விடுத்த முபாஹலாவை ஏற்றுக் கொண்டுவிட்டதாக ஒரு மாவீரத்தனமான பினாத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு 10 ம் தேதிக்குள் பதில் தந்து தன்னோடு முபாஹலா செய்வதற்கு தயாராகும் படியும் உடடாலக்கடி கிரி..கிரி என்ற பானியில் பொய்யன் பி.ஜே அறிவிப்பு செய்திருந்தார்.

பி.ஜே வெளியிட்ட முபாஹலா அறிவிப்பு

இப்படி கூறினால் பயந்து ஓடி விடுவார்கள் என்று நினைத்த பி.ஜேக்கு செருப்பால் அடி கொடுப்பது போல் தவ்ஹித் என்ற பெயரில் காம லீலைகள் நடத்தும் ததஜ வின் செயல்பாடுகள் பிடிக்காமல் விலகிய முன்னால் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் உடனடியாக பதில் கொடுத்து தாங்கள் பி.ஜே அழைத்தது போல் முபாஹலாவிற்கு வருவதாக அறிவித்துள்ளார்கள். இதிலிருந்து தப்பிக்க பொய்யன் பி.ஜே இன்னும் என்ன என்ன ஜெகஜால வேலையெல்லாம் செய்வாரோ யாருக்கு தெறியும்?

பீஜேயுடன் முபாஹலா செய்ய கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகளாகிய நாங்கள் தயார்!
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

முபாஹலாவிலிருந்து தப்பிக்க பொய் புரட்டுகளை கூறும் பீஜே யின் முக மூடியை கிழித்தெறிவோம்!

கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகளாய் இருந்த நாங்கள் டிஎன்டிஜே மாநில தலைவர் பீஜே யை முபாஹலாவுக்கு அழைத்தது 11.03.2007 அன்று லால்பேட்டையில் பாக்கர் பற்றிய ஒழுக்ககேடான விசயத்தைப் பற்றி பீஜே விளக்கமாக அதுவும் பாக்கர் விபச்சாரமே செய்து விட்டார் என்ற அளவிற்கு பேசிவிட்டு பிறகு அதில் சமரசம் செய்து கொண்ட விசயத்திலும் அதனை ஒட்டி நடந்த விசயங்களுக்கு மட்டுமே! உண்மையாளர்களாகவும், உண்மையில் அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்களாய் இருப்பவர்கள், தங்கள் மீது குற்றச்சாட்டு என்று வரும்போது அந்த விசயத்தில் தாம் தூய்மையானவர்தான் என்று நிரூபிக்க வேறு எதனையும் முன்வைக்காமல் நிபந்தனையேதுமின்றி முன்வருவார்கள்..

அதனை விடுத்து குற்றம் சாட்டியவர்களிடம் எதாவது குறை இருக்கிறதா? என்று துருவி துருவி ஆராய்ந்து குறையை தேடி கண்டுபிடித்து அல்லது அவதூராய் எதையாவது அவர்கள் மீது பழி சுமத்தி குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க எத்தனிப்பவர் மகா பொய்யர் என்பதற்கு இதை தவிற வேறு ஏதும் ஆதாரம் தேவையில்லை. குற்றம் சாட்டியவர்கள் மீது மேலும் மேலும் பொய்களையும், அவதூரறுகளையும், வீன் பழிகளையும் மக்களிடம் கூறி தன்னை நியாயப்படுத்திக்கொள்பவர்கள் அல்லாஹ்வின் தன்டனைக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ளட்டும்.

கடந்த 03.06.2007 அன்று கடலூரில், பல மாவட்டத்து ஆட்களை அழைத்து வந்து நடத்திய கூட்டத்தில் முபாஹலாவைப்பற்றி பேசிய பீஜே, வழக்கம்போல் முபாஹலாவிற்கு அழைத்தவர்கள் மீது பொய்யான, அவதூரான வீண் பழிகளை அள்ளி வீசி அதற்கும் அவர்கள் முபாஹலா செய்யவேண்டும் என்று கூறி இருக்கிறார். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு ஆகவே, எங்களுக்கு மடியில் கனமும் இல்லை வழியில் பயமும் இல்லை. அதனால் நாங்கள் பீஜே மீது சொன்ன அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும், மேலும் பீஜே வால் இன்று 04.06.2007 ல் எங்களுக்கு அனுப்பப்படடுள்ள வக்கீல் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள, நாங்கள் வெளிநாடுகளில் டிஎன்டிஜே பெயரைச்சொல்லி ரூபாய் இருபது லட்சம் வசூல் செய்து சரியாக கணக்கு காட்டாமல் மோசடி செய்துவிட்டதாக பழி சுமத்தியதற்கும், 03.06.2007 பீஜே கடலூர் கூட்டத்தில் எங்கள் மீது கூறிய அவதூருகளுக்கும் இன்ஷாஅல்லாஹ், பீஜே அறிவித்த 16.06.2007 தேதியில் நெல்லிக்குப்பம் தேவநாதன் திருமண மண்டபத்தில் மாலை 7 மணிக்கு பீஜேயுடன் முபாஹலா செய்ய கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகளாகிய நாங்கள் தயார்! என்பதை இதன் மூலம் பீஜே வுக்கும் மற்றும் சகலமானவர்களுக்கும் அறிவிக்கின்றோம். இது சம்மந்தமாக ஒப்புதல் தபாலையும் பி.ஜைனுல்ஆபிதீன், டிஎன்டிஜே மாநில தலைவர், 30.அரன்மனைகாரன் தெரு, மன்னடி, சென்னை-1 என்ற முகவரிக்கு 05.06.2007 ல் கூரியர் தபால் மூலம் அனுப்பி விட்டோம்.

இப்படிக்கு,
கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகள்.
05.06.2007.

ஐக்கிய தெளஹீத் ஜமாத் – கடலூர்

தொடர்புடைய பதிவுகள் :

1) பாக்கர் நந்தினியுடன் ஒருவர் மார்பில் ஒருவர் சாய்ந்தவராக விபச்சாரம் நடக் கூடிய சாத்தியக் கூறுகளுடன் இருந்தனர் என்று குற்றம் சாட்டி வெளியிட்ட ஆடியோ கேட்பதற்கு இங்க கிளிக் செய்யவும்.

2) விபச்சார குற்றச் சாட்டு கூறி வெளியேற்றிய பாக்கரை விபச்சாரத்துக்கு புதிய தண்டனையாக 34 நாட்கள் போதுமானது என்று அறிவித்து திரும்பவும் சேர்த்தது தெர்ர்பான கட்டுரை படிப்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்.

3) கடலூர் மாவட்டத்தில் ததஜ கிளைகள் யாவும் ஏன் கலைக்கப்பட்டது என்பது குறித்து கடலூர் மாவட்ட முன்னால் ததஜ நிர்வாகிகளின் அறிவிப்பும் அவர்களிடம் பாக்கர் குறித்து பி.ஜே என்ன சொன்னார் என்ற விபரமும் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

இவர்கள் பின்னால் பொதுக் மூஷகூட்டங்களக்கும் பேரணிகளுக்கும் நம்பி தங்கள் வீட்டுப் பென்களை அனுப்புபவர்களும் இன்னும் இவர்களின் மதரஸாவில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கும் பெற்றோரும் நிலைமை கைமீறி செல்வதற்குமுன் சுதாரித்தால் நல்லது.

Create a free website or blog at WordPress.com.