தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 13, 2008

நெல்லை ஏர்வாடியில் மேற்படிப்பு வழிகாட்டி முகாம் – 2008

Filed under: ஏர்வாடி, மூலக்கரைப்பட்டி, united students front, USF — முஸ்லிம் @ 7:29 பிப
மேற்படிப்பு வழிகாட்டி முகாம் – 2008

மேடையில் விருந்தினர்கள் மற்றும் கல்வியாளர்கள்

யுனைடெட் ஸ்டூடண்ஸ் ஃபிரண்ட் சார்பாக ஏர்வாடி O.K. திருமண மஹாலில் வைத்து மாணவர்களுக்கு மேற்படிப்பிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் S. சாதிக் M.B.A., அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

சகோதரர் ரியாஸ் M.B.A., அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள். ராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் திருமதி. ராணி ஜெயசெல்வி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்கள். USF ன் மாநில பொதுச் செயலாளர் திரு. அன்வர் அவர்கள் USF ஐ பற்றி அறிமுகப்படுத்தி பேசினார்கள். மேலும் மருத்துவத்துறை சம்மந்தப்பட்ட கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை டாக்டர்.முஸ்தபா M.B.B.S., DCA., டாக்டர் ஸ்ரீகுமார் M.B.B.S., ஆகியோர் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் பங்கொண்டு பயன்பெற்ற மாணவிகள்

பொறியியல் துறை சம்மந்தப்பட்ட கருத்துக்களை பேராசிரியர் ஹைதர் அலி (HOD, PET Eng, College) பேராசிரியர் S. பாபு ரெங்க ராஜன் (HOD, IT) ஆகியோர் வழங்கினார்கள். அறிவியல் துறை சார்பாக பேராசிரியர் சேக் அப்துல் காதர் மற்றும் பேராசிரியர் அஹமது கனி ஆகியோர் கருத்துக்களை வழங்கினார்கள். சட்டப்படிப்பு பற்றி அட்வகேட் பெல்மான் அவர்கள் கருத்துக்களை வழங்கினார்கள். கலந்து

நிகழ்ச்சியில் பங்கொண்டு பயன்பெற்ற மாணவர்கள்

கொண்ட பேராசிரியர்களுக்கு சிறப்பு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இடையே USF தயாரித்துள்ள மேற்படிப்பு வழிகாட்டி நூல் வெளியிடப்பட்டது. இதன் முதல் பிரதியை USFன் பொதுச் செயலாளர் திரு. அன்வர் அவர்கள் வெளியிட திருமதி. ராணி ஜெயசெல்வி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். முடிவில் சகோதரர் முகைதீன் B.Sc., நன்றியுரை கூறினார்.

விழாவில் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு : மூலக்கரைப்பட்டி ஜவாஹிர் ஹஸன், ஏர்வாடி, நெல்லை

மே 11, 2008

மதுரையில் USF நடத்திய வழிகாட்டி முகாம்

Filed under: united students front, USF — முஸ்லிம் @ 9:37 பிப

யுனைட்ட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் (USF) அமைப்பின் சார்பாக தமிழகமெங்கும் மாவட்ட வாரியாக 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மேற்படிப்பு வழிகாட்டி முகாம் கள் நடத்தப் பட்டு வருகின்றன அதன் தொடாச்சியாக 10.05.2008 சனிக்கிழமை மதுரை ஃப்ரென்ட்ஸ் மஹலில் காலை 10.00 மணியளவில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மேற்படிப்பு வழிகாட்டி முகாம் மற்றும் “நாமும் சாதிக்கலாம்” புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

மெளலவி ஜமால் முகம்மது ஆலிம் அவர்கள் கிராஅத் ஓத விழா தொடங்கியது USF ன் மாவட்ட தலைவர் திரு. ஃபக்ருதீன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். USF ன் மாநில தலைவர் திரு. பின்னர் தலைமையுரையாற்றினார்கள். USF ன் மாநில பொது் செயலாளர் திரு.முகம்மது அன்வர் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

வழிகாட்டு உரைகளாக வழக்குறைஞர் திரு. ஜின்னா, பேரா. பஷீர் அஹமது, ஆடிட்டர் முகம்மது கான், மருத்துவர் அஹமது கலீல், உள்ப் பலர் மாணவர்களுக்கு எதிர்கால படிப்பு குறித்தும் திட்டமிடுதல் குறித்தும் உரையாற்றினார்கள்.நிகழ்ச்சியின் இறுதியாக சட்டக் கல’லுர்ரி மாணவர் திரு. ராஜா முகம்மது அவர்கள் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.

மே 9, 2008

USF நடத்தும் மாணவ – மாணவிகளுக்கான வழிகாட்டி முகாம் மற்றும் புத்தக வெளியீட்டு விழா

Filed under: united students front, USF — முஸ்லிம் @ 12:16 பிப
10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மேற்படிப்பு வழிகாட்டி முகாம் மற்றும் “நாமும் சாதிக்கலாம்” புத்தக வெளியீட்டு விழா

யுனைட்டட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் (USF) அமைப்பின் நிர்வாகி திரு. T.R. ஜியாவுதீன் B.E அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில் தெறிவிக்கப்பட்டுள்தாவதுஇ யுனைட்ட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் (USF) அமைப்பின் சார்பாக தமிழகமெங்கும் மாவட்ட வாரியாக 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மேற்படிப்பு வழிகாட்டி முகாம் கள் நடத்தப் பட்டு வருகின்றன அதன் தொடாச்சியாக நாளை 10.05.2008 சனிக்கிழமை சென்னை, திருவல்லிக்கேணி, ஆதம் மாக்கெட், அஹமது அலி பார்பியா மெட்ரிக்குலேசன் பள்ளியில் காலை 10.00 மணியளவில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மேற்படிப்பு வழிகாட்டி முகாம் மற்றும் “நாமும் சாதிக்கலாம்” புத்தக வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

இந்நிகழச்சியில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பல கல்வியாளர்களும், பிரபலங்களும் கலந்து கோண்டு மாணவுமாணவிகளுக்கு ஆலோசனைகள் வழங்க உள்ளார்கள்.

டாக்டர் ஜீலானி MBBS, BCH

டிரஸ்ட்டி, ஜான் டிரஸ்ட்

டாக்டர் ஆயிஷா ஹமீது

மேனேஜி்ங் டிரஸ்ட்டி – ஹிதாயா வெல்ஃபேர் டிரஸ்ட்

ஜனாபா. A. நஷீமா பேகம் M.A

முதல்வர் – அஹமது அலி பார்பியா மெட்ரிக் பள்ளி

பேராசிரியர் M. ஹமீது ஹீசைன் M.E

ஆலிம் முஹம்மது சாலிஹ் பொறியியல் கல்லுர்ரி

ஜனாப் N. முஹம்மது B.E

சீனியர் நெட்வொர்க் இன்ஜினியர்

ஆகியோர் உட்பட பலர் கலந்து நமது மாணவ மாணவிகளின் எதிர்காலத்திற்கு தேவையான ஆலோசனைகளை வழங்க உள்ளார்கள் ஆகவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பி இந்நிகழச்சியில் கலந்து கொண்டு பயன் பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக யுனைட்டட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் (USF) அமைப்பின் நிர்வாகி திரு. T.R. ஜியாவுதீன் B.E அவர்கள் தெறிவித்துள்ளார்கள்.

ஏப்ரல் 27, 2008

யுனைடெட் ஸ்டூடண்ட்ஸ் ஃப்ரண்ட் (USF)

Filed under: யுனைடெட் ஸ்டூடண்ட்ஸ, USF — முஸ்லிம் @ 8:06 பிப


யுனைடெட் ஸ்டூடண்ட்ஸ் ஃப்ரண்ட் (USF) மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் யுனைடெட் ஸ்டூடண்ட்ஸ் ஃப்ரண்டின் (USF) மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 20.04.2008 அன்று மதுரையில் நடைபெற்றது. மாநில செயலாளர் A.M ஷாஃபி திருக்குர்ஆன் வசனங்களை ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார். மாநில பொதுச் செயலாளர் A.M. அன்வர் அறிமுக உரை நிகழ்த்தினார். மாநிலத் தலைவர் அ. முஹம்மது யூஸுஃப் சிறப்புரையாற்றினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் இதில் கலந்து கொண்டனர். கல்வி வளர்ச்சி, மாணவர்களின் மேம்பாடு, யுனைடெட் ஸ்டூடண்ட்ஸ் ஃப்ரண்டின் வளர்ச்சி ஆகியவை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களான IIT, IIM, AIMS போன்ற கல்வி நிறுவனங்களில் 27%இடஒதுக்கீடு வழங்கி உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, சமூக நீதிக்கான போராட்டக் களத்தில் ஒரு மைல்கல் ஆகும். ஆனால் இந்த இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் என்ற வருமான வரம்பை நிபந்தனையாக வைக்கா மல் பிற்படுத்தப்பட்டோர் அனைவருக்கும் இடஒதுக்கீட்டின் பலனைக் கிடைக்கச் செய்ய வேண்டுமெனவும், வரும் கல்வியாண்டிலிருந்து இதனை முழுவதுமாக, உடனடியாக அமுல்படுத்த வேண்டுமெனவும் மத்திய அரசை யுனைடெட் ஸ்டூடண்ட்ஸ் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கிறது.

2. இந்த 27% இடஒதுக்கீடு கிடைப்பதற்காக பாடுபட்ட அனைவருக்கும், இன்னும் இதில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு இடஒதுக்கீடு கிடைக்க அழுத்தம் தந்த தமிழக முதல்வர் அவர்களுக்கும் யு.எஸ்.எஃப். நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

3. நமது தேசத்தில் முஸ்லிம்கள் கல்வி, சமூக பொருளாதார ரீதியாக மிகவும் கீழான நிலையில் இருப்பதாகவும், முன்னேற்றப் பட வேண்டிய சமூகத்தில் மிகமுக்கிய பங்கை இந்த முஸ்லிம் சமூகம் வகிக்கின்றது என்றும் சச்சார் கமிஷன், மிஸ்ரா கமிஷன் அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன. வல்லரசு என்ற ஸ்தானத்தை எட்ட பீடுநடை போட்டுக் கொண்டி ருக்கும் நமது தேசத்தின் குடிமக்களில் ஒரு பகுதியினராகிய முஸ்லிம்கள் பலவீனமான நிலையில் இருப்பது நமது தேசத்தின் பயணத்தில் ஊனத்தை ஏற்படுத்தும் ஒன்றாகும். ஆகவே இந்த நிலையைக் களைய மத்திய அரசு உடனடியாக 15% தனி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்கி இந்த தேசத்தில் ஏற்பட்டுள்ள ஊனத்தை சரி செய்ய வேண்டும் என யு.எஸ்.எஃப். மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

4. முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் தமிழக அரசு மாவட்டந்தோறும் முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு தனித்தனி விடுதிகளை (HOSTEL) கட்டித்தர வேண்டும் என்றம் அதில் முதற்கட்டமாக சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை, நெல்லை ஆகிய மாநகராட்சிகளில் வரும் 2008 2009 கல்வியாண்டு முடிவிற்குள் கட்டித்தர வேண்டுமென்றும், முஸ்லிம் மாணவ, மாணவியரின் இந்தக் கல்வி நலத்திட்ட அபிவிருத்திப் பணியில் சுணக்கம் காட்டாமல், தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு நிறைவேற்ற வேண்டு
ம் என்றும் யு.எஸ்.எஃப். தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

5. மாணவ சமுதாயத்தின் எதிர்கால இலட்சியத்தை வளமாக்கும் விதமாக, பத்தாவது மற்றும் +2 வுக்குப் பிறகு என்ன படிப்பது? என்ற மேற்படிப்பு வழிகாட்டி நூலை ரூ 3/ நன்கொடையில் வழங்குவது என்றும் சிறந்த கல்வியாளர்கள், பேராசியர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் ஆகியோரைக் கொண்டு மேற்படிப்பு வழிகாட்டி முகாம்களை மாவட்டம்தோறும்நடத்தி அதில் இந்த நூலை வெளியிடுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இப்படிக்கு,
அ. முஹம்மது யூஸுஃப்,
மாநிலத் தலைவர்,

யு.எஸ்.எஃப்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.